பைபிள் அல்லது சுவிசேஷ புத்தகத்தை கொடுக்கவேண்டிய கிறிஸ்தவ ஊழியர்கள் காருண்யா கல்லூரியை உயர்நிலைப்படுத்த சங்கரச்சாரியரின் சிபாரிசுக்காக வேண்டி சங்கரச்சாரியை சந்தோஷப்படுத்த
பூஜை சாமான்களை அவருக்கு கொடுக்கலாமா? கர்த்தரின் கோபம் தினகரன் குடும்பத்தின்மீது பொங்கி எழுமே!.
மேலே காணும் படத்தில் சகோ.தினகரன், பால்தினகரன் ஆகியவர்கள் திரு.சங்கராச்சாரியாருக்கு கொடுக்கும் பரிசு பெட்டியா? பைபிளா? என்பதை நீங்களே பாருங்கள். என்னை
DGS.தினகரன் விஷயத்தில்(டாக்டர்.புஷ்பராஜ்) பொய் சொல்லுகிறவன் என்று டிவியில் கூறிய மோகன் சி.லாசரஸ் அவர்களிடம் இந்த படங்களை அனுப்பி படத்தில் உள்ளது
பூஜை சாமான்களா? பைபிளா? என்பதை வாசகர்கள் அவரிடம் கேளுங்கள். நாலுமாவடி மோகன் சி.லாசரஸ்க்கு
பூதக்கண்ணாடி கொடுத்து இந்த படத்தைப் பார்த்து, இனியாவது இந்த மாதிரி விஷயத்திலும், ஜெபத்தில் பெயர் அழைப்பதிலும் பொய் பேசாதபடி தேவ பயத்துடன் ஊழியம் செய்ய சொல்லுங்கள்.
சகோ.தினகரனின் சீடர் நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் அவர்கள் நான் ஜாமக்காரனில் புகைப்படத்தோடு வெளியிட்ட இந்த செய்தியை
பொய் என்று சகோ.தினகரனே தனிப்பட்ட முறையில் தன்னிடமே கூறியதாகவும் (DGS)தான் சங்கராச்சாரியாருக்கு கொடுத்தது பூஜை சாமான்கள் அல்ல என்று
DGS அவர்கள் தன்னிடம் கூறி வேதனைப்பட்டதாகவும், TVயில் கூறி ஜாமக்காரன் பொய் பேசி அவர்மேல் சேற்றை வீசி சந்தோஷப்படுவதாகவும்
TVயில் மோகன் சி.லாசரஸ் பலமுறை இதை செய்தியாக அறிவித்தார். இப்படியாக ஜெபத்தில்
பொய்பேசும் நபர்கள்தான், தவறு செய்பவருக்கு மிகவும் ஒத்தாசையாக அவர்கள் செய்த தவறை நியாயப்படுத்தி பேசுவார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம் ஆகும். இந்திய பிரதமர் ஒரு இந்துமத தீவிர பக்தராக கீதை புத்தகத்தை வெளிநாட்டு தலைவருக்கு கொடுத்த அந்த வைராக்கியம் எங்கே? வார்த்தைக்கு வார்த்தை கிறிஸ்துவைப்பற்றியே பேசியும், அடிக்கடி பரலோகம் போய் இயேசுவை கண்டதாக கூறும் சகோ.தினகரன் இந்து மத பூஜை சாமான்களை சங்கராச்சாரிக்கு கொடுத்த இவரின் கிறிஸ்தவ வைராக்கியம் எங்கே? இவர்களெல்லாம் அந்திக்கிறிஸ்துவின் காலத்தில்
அந்திக்கிறிஸ்துவை திருப்திப்படுத்த அந்திக்கிறிஸ்துதான் உண்மை தெய்வம் என்று கிறிஸ்தவ சபைகளுக்கும் தன் கூட்டத்தில் தலைமை தாங்கும் பிஷப்மார்களுக்கும்
கர்த்தர் அதை தனக்கு சொன்னார் என்று அறிவித்தால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. காரியவாதிகள் நிலை இப்படித்தான். |