அவர் ஆசீர்வாதத்தைக் கூறும்முன், பின்னால் இருந்து ஒருவர் விசும்பும் சத்தம் கேட்டது. தொடர்ந்து அந்த மிஷனரி கதறி அழ ஆரம்பித்தார். யாருக்கும் அவர்தான் தாங்கள் அனுப்பின மிஷனரி என்று தெரியாது. அவர் முகத்தை புதைத்து அழுது கொண்டிருந்தபடியால், பக்கத்தில் ஒரு சகோதரர் சென்று ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பதில் சொல்வதற்கு நிமிர்ந்தபோதுதான் அவர் தாங்கள் அனுப்பி வைத்த மிஷனரி என்று எல்லாருக்கும் தெரியவந்தது.
மிஷனரி அழுது முடித்தப்பின், முகத்தை துடைத்து, எழுந்து நின்று, சபையாரை பார்த்து, நான் உங்களை சில வருடங்களுக்குமுன் பார்த்தபோது, நீங்கள் எல்லாரும் என்னையும், என் மனைவியையும் அன்போடு
மிஷனரிகளாக அனுப்பி வைத்தீர்கள். நீங்கள் அனைவரும் ரயில் நிலையம்வரை வந்து உங்களுக்காக தொடர்ந்து ஜெபிப்போம் என்று சொல்லி அனுப்பி வைத்தீர்கள். நீங்கள் சொன்ன மாதிரி இரண்டு மூன்று வருடங்கள் ஜெபித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கர்த்தர் அந்த ஆண்டுகளில் அநேக ஆத்துமாக்களை கொடுத்தார். பின் நீங்கள் ஜெபிக்காமாற்போனபோது, நான் அநேக இழப்புகளை சந்திக்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நான் நினைத்தேன். என்னுடைய தவறுகளோ, பாவமோ ஏன் இப்படி தொடர்ந்து இழப்புகள் என்று, இன்றுதான் தெரிந்தது. நீங்கள் எங்களுக்காக ஜெபிக்கவில்லை என்று நான் வந்த நேரத்தில் இருந்து பார்க்கிறேன். எங்களுக்காக ஒருவர்கூட ஜெபிக்கவில்லை என்பதை காண்கிறேன் என்று கூறினார். சபையார் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றார்கள்.
பிரியமானவர்களே, நாம் அனுப்பும் ஊழியர்களுக்காக நாம் தொடர்ந்து ஜெபிக்கிறோமா? நம் ஜெபங்கள்தான் அவர்களை எல்லா விதத்திலும் தாங்குகின்றன. நாம் ஜெபிக்காவிட்டால் கர்த்தரால் அங்கு செயல்பட முடியாது. நம்முடைய ஜெபங்கள் அத்தனை இன்றியமையாதது.
நம்மால் அங்கு சென்று ஊழியம் செய்யமுடியாது. ஆனால் ஜெபிக்கமுடியுமல்லவா? தினமும் நம்முடைய ஜெபங்களில் இப்படிப்பட்ட ஊழியர்களை நினைக்கவேண்டும். நான் ஜெபித்தால் என்ன ஆகப்போகிறது என்று நினைத்து, நாம் ஜெபிக்காமல் விட்டால், களத்தில் இருக்கும் அவர்களுக்கு யார் துணை செய்யமுடியும்? யார் உதவமுடியும்?. |