இப்போது அவரே மறுபடியும் டிவியில் தன் ஜெபம் கேட்கப்பட்டதால்தான்
BJP அரசாங்கம் ஜெயித்தது, பிரதமராக திரு.மோடி அவர்கள் பிரதமராக பொறுப்பேற்றார்,
இனி நாடு செழிக்கும் என்று கூறியிருக்கிறார்.
திரு.மோடி அவர்கள் பொருளாதார முன்னேற்றம் எற்பட, வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும் இந்தியாவில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்திருக்கிறார். மின்சாரம், தண்ணீர், நிலக்கரி யாவும் குறுகிய காலத்தில் அந்தந்த கம்பெனிக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!. வரி சலுகையும் உண்டு! என்று
குடியரசு தின செய்தியில் திரு.மோடி அவர்கள் கூறியிருக்கிறார். இதில் எல்லாம் நமக்கு பிரச்சனையில்லை. திரு.மோடியின் நிர்வாகம் காங்கிரஸ் நிர்வாகத்தைவிட நன்றாகவே செயல்படுவதாக பெரும்பான்மையினர் கூறியுள்ளனர். அது உண்மையாகவும் இருக்கலாம்.
ஆனால்,
மதம் சம்பந்தமாக உள்ள பிரச்சனையில் திரு.மோடி அவர்களின் நிலைப்பாடு என்ன? நடந்துகொண்டிருக்கும் மத கலவரங்களைப்பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதுதான் மிக முக்கியம். இந்தியாவின் சமாதானமே இப்போது
மத விஷயத்தில்தான் அடங்கியிருக்கிறது.
இனி இந்தியா எப்படியிருக்கும் என்பதை நீங்கள்; கீழே காணும்
புகைப்படங்களும், மதமாற்ற செய்திகளும் வெளிப்படுத்துகிறது. உ.பியில் 4000 கிறிஸ்தவர்களும், மற்ற மதத்திலிருந்து சிலரும் இந்து மதத்துக்கு திரும்பினார்கள். (செய்தி இந்து- 1 செப் 2014).
மேற்கண்ட தகவலை RSS போன்ற இந்து அமைப்பான
பஜ்ரங்தள் அமைப்பு அறிவித்தது. டெல்லிக்கு அருகில் உள்ள மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தில்
வால்மீகி என்று அழைக்கப்படும் பிற்பட்ட இனத்தினர் கிறிஸ்தவர்களாக இருந்தனர்.
RSS இந்து மத தீவிரவாதி இயக்கத்தின் ஒரு பிரிவான ஜாக்ரன் சமீதி என்ற அமைப்பினர் இவர்களை பலவிதமான பொருளாதார ஆசைக்காட்டி இந்து மதத்துக்கு மாற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களுக்கு
பணமும், பொருளும் அள்ளிக் கொடுத்து பஜ்ரங்தள் உள்பட பல்வேறு இந்துத்துவா அமைப்பினர் இம்மக்களை மதமாற்ற ஏற்பாடுகளை செய்துவருகின்றனர். கிறிஸ்தவ சபைகளிலிருந்து இதுவரை கிடைத்து கொண்டிருந்த பல உதவிகள் இந்த கிராம மக்களுக்கு கிடைக்காமல் போனதால், இந்த கிராம மக்களே
RSS இயக்கமான எங்களை அணுகினார்கள். ஆகவேதான் அவர்களுக்கு நாங்கள் உதவிகள் செய்து இந்துமத ஆகம விதிகளுக்கு உட்பட்டு அவர்களை மறுபடியும்
இந்து மதத்துக்கு மாற்றிவருகிறோம். இந்த குறிப்பிட்ட கிராமங்களில் மட்டும் 4000 பேர்களை இந்து மதத்துக்கு மாற்றியிருக்கிறோம் என்றார்கள். |