 சகோ.DGS.தினகரன் அடிக்கடி
பரலோகம் போய்வருவதை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். இவரை பின்பற்றிதான்
ஏஞ்சல் டிவி.சாதுசந்தர் செல்வராஜ், மோகன் சி.லாசரஸ், வின்சென்ட் செல்குமார், ஆலன் பால் ஆகியோர் தாங்களும்
தினகரனுக்கு சளைத்தவர்கள் அல்ல. நாங்களும் தினம் இரண்டுவேளை
பரலோகம் போய் வருகிறோம் என்று போட்டியிட்டு பரலோகம் போய் வருவது செய்தியாக நாம் கேட்டிருக்கிறோம்.
சகோ.தினகரன் அவர்களைவிட
மகன்.பால்தினகரன் அதிகம் கற்பனை தரிசனம் பார்ப்பதை அவர் எழுதிய செய்தியில் நீங்கள் அறியலாம்.
 என்
தந்தை.தினகரன் ஒருமுறை பரலோகத்திற்கு சென்றபோது
இயேசு என் தந்தையை வரவேற்றார். இயேசுவுக்கு முன் இருந்த ஒரு மேஜையின் மீது ஒரு
தங்கத்தால் ஆன அழகிய தங்க கை கடிகாரத்தை வைத்திருந்தார்.
அதன் பக்கத்தில் ஒரு
தங்க கோப்பை,
தங்க மை(Ink),
முன்னோர்கள் அந்த காலத்தில் எழுத உபயோகிக்கும் தங்க இறகுமிருந்தது.
அப்போது ஆண்டவர் என் தந்தையைப்பார்த்து என் மகனே என் ஊழியத்தை செய்ய நீ வருவாயா? என்றார்.
அதைக்கேட்டபோது என் அப்பா.தினகரனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. காரணம் அவர்
State Bank of India என்ற வங்கியில் நிம்மதியாக ஒரு குறையும் இன்றி வேலை செய்து கொண்டிருந்தார். அதனால் இயேசுவை நோக்கி என் அப்பா சொன்னார். ஆண்டவரே, என் பேங்க் வேலையில் மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கிறது. நான் நிம்மதியாக இருக்கிறேன். கூடவே ஊழியமும் செய்துவருகிறேன். எனக்கு அதுபோதும் என்னை விட்டுவிடும் என்றார். ஆனால் ஆண்டவர் சொன்னார், என் மகனே நீ வேலையை விட்டுவிட்டால் உன் தேவைகள் எல்லாவற்றையும் நான் சந்திப்பேன் என்று, இப்படி நான் வாக்குகொடுத்தால் என் ஊழியத்துக்கு வருவாயா? என்று இயேசு கேட்டார். அதற்குமேல் என் அப்பாவுக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை.
சகோ.தினகரன் சொன்னார்: ஆண்டவரே நான் எங்கெங்கு போகிறேனோ நீரும் என்னோடு வருவீரானால் அப்போதுதான் நான் உம்
ஊழியத்துக்கு வருவேன். ஆண்டவர் சொன்னார். நான் நிச்சயமாக உன்னோடு வருவேன். நான் உன்னை அழைத்திருப்பதை உன் வாயிலிருந்து புறப்படும் என் வார்த்தைகளின் மூலமாகவும், அற்புதங்கள் மூலமாகவும் உறுதிப்படுத்துவேன். நீ என் ஊழியத்தை செய்வாயாக என்றார். உடனே என் தந்தை ஊழியத்துக்கு வருகிறேன் என்று ஒப்புக்கொண்டார்.
அதன்பின் இயேசு தங்க மையினால் (இங்க்) எழுதி அதன்கீழே
இயேசுகிறிஸ்து என்று கையெழுத்திட்டு ஒரு உடன்படிக்கையை பண்ணிக்கொண்டார். இந்த உடன்படிக்கை கடிதத்தை என் தந்தையிடம் கொடுத்து(நான் மட்டும் கையெழுத்திட்டால் போதாது) நீயும்
உன் கையெழுத்தை போடு என்றார். அந்த நாள் 1967ம் ஆண்டு
ஜூலை மாதம் 20ம் தேதி ஆகும். அந்த குறிப்பிட்ட வருடத்திலிருந்து என் தந்தை தினகரன் அவர்கள் எப்போதெல்லாம் பரலோகம் போகிறாரோ அப்போதெல்லாம் இயேசு கையெழுத்துபோட்ட அந்த உடன்படிக்கை
கடிதத்தை இயேசுவிடம் காண்பிப்பார்.
ஒவ்வொருமுறை பரலோகம் போகும்போதும் ஒவ்வொரு திட்டத்தை இயேசு கூறுவார். மகனே, இந்த வருடத்தில் உன் ஊழியத்தில் இவைகளையெல்லாம் செய்ய திட்டமிட்டிருக்கிறேன் என்று அவர் சொல்வார். என் தந்தையும் அவர் சொல்வதை கேட்டு
ஆமென் என்று கூறி ஆமோதிப்பார். இப்படித்தான் என் தந்தையின் ஊழியம் வெற்றிகரமாக நடந்தது.
நாம் இதுவரை புளு இங்க்,
கருப்பு, சிவப்பு இங்க் இப்படி பல கலரில் பார்த்திருப்போம். ஆனால் சகோ.தினகரனின் பரலோகத்தில் இந்த
கலர் இங்க் எல்லாம் கிடைக்காது. எல்லாம் தங்க இங்க்,
தங்க போனா, தங்க கோப்பை, தங்க மேஜை இதை எழுதும்
தங்க ஊழியரான தம்பி.பால்தினகரனுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் அவர் குடும்பத்தினர் எல்லாம் உபயோகிப்பது, அணிவது எல்லாம்
தங்கம்தான் என்பதை நாம் டிவியிலும் மேடையிலும் காண்பித்து நிரூபித்திருக்கிறோரே?.
தங்க இங்க், தங்க
கோப்பை, தங்க பேனா, தங்கத்தில் இயேசுவின்
கையெழுத்து தினம் பரலோக விசிட் இவைகளைக்குறித்து யாராவது கேள்வி கேட்டதுண்டா? இப்படிப்பட்ட அம்புலிமாமா கதைகளை கேட்டு கிறிஸ்தவ மக்கள், பிஷப்மார்,
மாடரேட்டர் எல்லாரும் கேள்வி எழுப்பாமல் ரசித்து கொண்டிருக்கிறார்களே தவிர கேள்விகேட்க யாருக்கும் தைரியம் இல்லை.
ஒருவர் இயேசு அழைக்கிறார் குடும்பம் சேர்க்கும்
கோடிகள், சொல்லும் பொய் கதைகள், பொய்யான
அற்புத சாட்சி, கோபுரங்கள் பணிவது மக்களிடம் பொய்யான காரணங்களைக்கூறி காணிக்கை பெறுவது, ஒரு
குழந்தைக்கு 2000 ரூபாய் வாங்கி ஜெபிக்க கர்த்தர் சொன்னார். அதற்கு
இளம் பங்காளர் திட்டம் என்று பெயர் வைத்து கோடிகோடியாக பணம் சேகரிக்கப்பட்டது.
ஏழைகளுக்காகவே காருண்யா கல்லூரி கட்ட சொன்னார் என்று கூறி ஒவ்வொரு மாணவனிடம்
லட்சக்கணக்கில் கேப்பிடல் பீஸ் வாங்கப்பட்டதையெல்லாம் குறிப்பிட்டு சிலர்
பொதுநல வழக்கு போட்டதாக செய்திதாளில் செய்திகள் வந்தது. பாறையோடு பானை மோதியதுபோல அந்த கேஸ் தொடர்ந்து நடத்தமுடியாமல் வழக்கு பாதியிலேயே நின்றுப்போனது. கிறிஸ்தவ ஊழியர்கள் மக்களை ஏமாற்றி காசு பறிக்கிறார்கள் என்று அன்று பல பத்திரிக்கைகள் குற்றம் சாட்டின.
 விருதுநகர்
சகோ.ஆலன்பால் என்பவர் இவரும் அடிக்கடி நரகத்துக்குபோய் வருபவர். 19 கோடியில் சென்னையில் மிகப்பெரிய ஆலயம் கட்ட ஆம்பித்திருக்கிறார். டிவியில் தன் சொந்த சேனலான
ஆசீர்வாதம் டியியில் கர்த்தர் சொன்னார் என்ற பெயரில் மக்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கிறார் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.
இப்படி தனி ஊழியம் செய்யும் ஊழியர்கள் எல்லாரும் தங்களை சிஎஸ்ஐ என்றும், லூத்தரன் சபையை சார்ந்தவன் என்றும் கூறி
அந்நியபாஷை பேசி மறைமுக பெந்தேகோஸ்தே சபையின் அனுபவத்தில் வாழ்ந்து ஜனங்களை ஏமாற்றுகிறார்கள். இப்படி பல ஊழியர்கள் மக்களை ஏமாற்றுவதை குறித்து ஏமார்ந்த மக்கள் பக்கம்பக்கமாக கடிதங்கள் எனக்கு எழுதுகிறார்கள்.
இப்படிப்பட்ட ஊழியர்களிடம் பொய் பேசும் பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களிடம் அப்படிப்பட்ட சபைகளிடமும் வாசகர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
மக்களை ஏமாற்றி அகப்பட்ட ஏராளமான புறமத சாமியார்களின் சன்யாசிகள் ஏராளமானவர்கள் போலீஸில் அகப்பட்டு இப்போது ஜெயிலில் இருக்கிறார்கள். இவர்களோடு சில
பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்மார்களும், ஸ்டார் ஊழியர்களும், அற்புதம் அடையாளம் என்ற பெயரில் கூட்டம் நடத்தி மக்களை
ஏமாற்றும் சில ஊழியர்களும் ஜெயிலில் இருக்கிறார்கள். ஆனால் பல போலி ஊழியர்கள் பலர் இன்னும் வெளியே உலா வருகிறார்கள்.
|