16.12.2012 சகோ.ஆனந்தஸ்ரா டிவி செய்தியை பார்த்தேன். அவர் பேசியதாவது: இயேசு பிறப்பின்போது சாஸ்திரிகள் கண்ட நட்சத்திரத்தைக்குறித்து உலகில் பலர் பலவாராக கூறுகிறார்கள். பலர் வால் நட்சத்திரம் என்கிறார்கள்!. உண்மை என்ன என்று அறிய
நானே இயேசுவிடம் கேட்டேன். அப்போது அவர் என்னிடம் சொன்னார்: அது வால் நட்சத்திரம் அல்ல. அது ஒரு புதுமையான விசேஷ நட்சத்திரம் என்றார். இதன்மூலம் அவர் அன்று செய்த பிரசங்கத்தில் மக்களுக்கு கூற விரும்பவதென்னவென்றால் எனக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் மிக நெருக்கம் அதிகம்-சாதாரண விஷயமானால்கூட அவரிடம் கேட்டால் உடனே சொல்லிவிடுவார் என்பதாகும். நட்சத்திரம் விஷயம் அத்தனை முக்கியமான ஆவிக்குரிய விஷயமா? வேதமே அது
வால் நட்சத்திரம் என்று கூறவில்லையே!. இவர் ஏன் இத்தனை பாடுபட்டு அதை இயேசுகிறிஸ்துவிடம் விசாரிக்கிறார்.
நாங்கள் எங்களையே பிரசங்கி(ப்பதில்லை) 2 கொரி 4:5.
(பிசாசின் ஊழியக்காரர்) நீதியுடன் வேஷத்தை தரித்துக்கொள்வார். 2 கொரி 11:15
ஒரு மனுஷன் சர்வசாதாரணமாக ஒருவனிடம் டைம் என்ன ஆச்சு என்று கேட்பதுபோல், இவர்களுக்கு இயேசுகிறிஸ்து அவ்வளவு மதிப்பு குறைந்த தெருவில் போகும் சாதாரண மனுஷனாக இயேசுவை மாற்றிவிட்டார்கள்.
|