அதாவது திருத்துவம் என்ற இரண்டாவது பகுதியில் கடைசி பத்தியில் நீதி 8:30 நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்போதும் அவருடைய சமூகத்தில் களிகூர்ந்தேன் என்ற வேத பகுதியை
இயேசுக்கு ஒப்பிட்டுள்ளதை ஆட்சேபிக்கிறேன். எப்படியெனில் நீதிமொழிகள் 8ம் அதிகாரத்தில் ஞானமே மையப்பொருள், நீதி 8ம் அதிகாரமானதை மனிதர்களாகிய நம் ஞானமானது தன்னைக் குறித்து பேசும் பகுதியாகும்.
நீதி 8:29,30 சமுத்திர ஜலம் தன் கரையைவிட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையை கட்டளையிட்டு பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன் என்ற வசனங்கள் தேவன் இந்த பூமியை அஸ்திபாரப்படுத்துகையில்
"இயேசு" அவர் அருகில் செல்லப்பிள்ளையாயிருப்பதுபோலவும் சிருஷ்டிப்பில் சம்பந்தம் இல்லாததைப்போல் புரிந்துக்கொள்ளப்படுகிறார்.
யோபு 1,2,3 வசனங்களில் அவர் (இயேசு) ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று, உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. எபி 1:2 கடைசி பகுதியில் இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார் என்ற வசனங்கள் அவர் சிருஷ்கர் என்பதை விளக்குகிறது. சிருஷ்டிப்பின் வேளையை
மூவருமே செய்திருக்கிறார்கள் என்பதே திரித்துவம். இப்படியிருக்க நீதி 8:24,26 ஆகிய வசனங்களில்
நான் ஜனிக்கப்பட்டேன் என்று வருவதால் இயேசு பிதாவினால் ஜனிக்கப்பட்டார் என்று பொருள் சொல்வதா?. ஆகவே இந்த குறிப்பிட்ட கருத்துக்களை ஆட்சேபிக்கிறேன்.
Pastor.S.Francis Mahendran
Good Shepherd Church of Truth, Tharamangalam, Salem.
|