வாசகர் கடிதம்

வாசகர் கடிதம் 1:

வெளி 11ம் அதிகாரத்தில் இரண்டு சாட்சிகள் என்று குறிப்பிடுவது எலியா - ஏனோக்கல்ல. பழைய ஏற்பாடு - புதிய ஏற்பாடுகள் அடங்கிய பரிசுத்த வேதாகமமே!

- இரத்தினபுரி - கோவை.


வாசகர் கடிதம் 2:

யாழ்பாண காட்சிகள் உண்மை:

நீங்கள் யாழ்பாணம் போய்வந்த அனுபவம் எங்களை மிகவும் நெகிழச்செய்தது. வேறு எந்த ஊழியர்களும் இப்படிப்பட்ட ஊழியம் யாழ்பாண மக்களிடம் சென்று செய்ததில்லை.

நீங்கள் யாழ்பாணத்தை பார்த்த நிலை மிகவும் உண்மை என்பதை சமீபத்தில் வெளிவந்த 2013 ஜனவரி மாத ஜூனியர் விகடன் என்ற அரசியல் பத்திரிக்கையில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து வாசித்தபோது நீங்கள் கண்டதும் கூறியபோலவே அதிலும் எழுதப்பட்டிருந்தது. அவைகள் உண்மை என்றும், யாழ்பாணத்தின் தற்போதை நிலையை அதன்மூலம் எங்களால் உணரமுடிந்தது. உள்ளம் மிகவும் பாரத்தால் தொய்ந்து போயிற்று, செய்வதறியாது தவிக்கிறோம்.

நீங்கள் முன்பே கூறியதுபோல இலங்கை அதிபர் நாட்டின் உச்சக்கட்ட அதிகாரம் உள்ள இலங்கை சுப்ரீம் கோர்ட் பெண் தலைமை நீதிபதி அதிபரின் ஆலோசனைக்கு எதிராக தீர்பளித்ததால் தான் சொன்னபடி கேட்கும் பார்லிமெண்ட் மெம்பர்களை கொண்டு நீதிபதியை நீக்கும் தீர்மானம் எடுக்க வைத்து அந்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியையே நீக்க முடிவுசெய்துவிட்டாரே!. இனி இலங்கை மக்கள் சிங்களர்களானாலும் - தமிழரானாலும் நீதிமன்றம் மூலம் எந்த நீதியும் கிடைக்காது என்பது நாட்டுக்கு நல்லதல்ல. இலங்கை அதிபர்.ராஜபக்ஷே சர்வாதிகார பதவியை கட்டாயப்படுத்தி கையில் எடுத்துக்கொண்டார். ஆகவே உலக நாடுகள், ஐக்கிய நாடுகள் யாவும் தங்கள் கண்டனத்தை இலங்கை அதிபருக்கு தெரிவித்துள்ளது. இனி இலங்கை வட தமிழர்களுக்கான நீதி கர்த்தரின் கையில்தான் உள்ளது. அந்த மக்களை உயிரோடு சாகவைக்க தமிழ் இனத்தையே முழுவதும் இல்லாமலாக்கவும் முயற்சி நடக்கிறதாக அறிகிறோம்.

நீங்களும் சரி, அரசியல் பத்திரிக்கைகளும் சரி. அந்த மக்களை காப்பாற்ற வழி ஏதும் கூறாமல் மொட்டையாக வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்களான எங்களுக்கு செய்திகளை மட்டும் அறிவித்து என்ன பயன்? நாங்கள் என்ன செய்யவேண்டும்? என்பதை கூறுங்கள்!.

உலக நாட்டு தலைவர்கள் யாழ் தமிழர்களை காப்பாற்ற உதவமாட்டார்களா?

நீங்கள் உங்கள் பாணியில் வழமையாக ஜெபியுங்கள் என்று மட்டும் எழுதி அறிவித்தால் போதுமா?.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM