புறா வடிவம் ஒரு விக்கிரகம்:
பரிசுத்த ஆவியானவர் அல்ல.

அக்கினியாய் இறங்கினார் எல்லோரும் கண்டார்கள் (அப் 2:2,3,33). அப்படியானால் பஞ்ச பூதங்களான காற்றையும், அக்கினியையும் புறஜாதி யார் தெய்வமாய் காட்டுவதுபோல, ஆவியானவரை தேவன் என்று இவைகளை காட்டலாமா? சித்தரிக்கலாமா? (யோ 3:34, எபி 1:9)

தண்ணீர் (யோ 7:38-39). முத்திரை (எபே 1:13,4:30). அச்சாரம் (எபே 1:14) போன்றவை ஆவியானவருக்கு அடையாளமாய் உள்ளன. இதனால் இவைகள் எல்லாம் ஆவியானவரின் ரூபமில்லை.

ஆவியானவரின் குணாதிசயங்களை நமக்கு தெரியப்படுத்தும் வகையில், புறாவாகவும், காற்றாகவும், அக்கினியாகவும், எண்ணெய்யாகவும், தண்ணீராகவும் நமக்கு வெளிப்படுத்துகிறார் தேவன்.

மொத்தத்தில் ஆவியானவரை தேவன் என்று இவர்கள் விசுவாசித்தால், இந்த தேவனுக்கு மனித கண்களால் காணப்படும் ரூபம் இல்லை என்று அறிந்தால், அப்படிப்பட்ட மகிமையுள்ள தேவனுக்கு இணையாக, மனுஷர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக ஆவியானவரை மாற்றமாட்டார்கள். (ரோம 1:23). இப்படி விக்கிரங்களை படமாகவோ, சிலையாகவோ உருவாக்குவதும், அதை நமஸ்கரிப்பதும் விக்கிரக ஆராதனையாகும். அப்படியே இயேசுவாகிய தேவனுக்கு இப்படியாய் மனித ரூபம் கொடுப்பதும் தவறு. அப்படியே ஆவியானவராகிய தேவனுக்கு ரூபம் கொடுப்பதும் தவறு. இதை வாசிக்கும் தேவ பிள்ளையே அதரிசனமான தேவனின் சந்ததியான விசுவாசியே புறா வடிவம் உன்னிடம் இருந்தால் இன்றே அது உன்னைவிட்டு நீங்கட்டும் இவைகள் மறைமுகமாய் விக்கிரக ஆராதனையைக் திணிக்கும் பிசாசின் கிரியைகள் ஆகும். ஆகவே அவைகள் அழிக்கப்படட்டும்.


யோவானின் சாட்சி:

இயேசுகிறிஸ்துதான் மேசியா என்பதை யோவான் அறிந்துக்கொள்ள பிதாவால் செய்யப்பட்ட ஏற்பாடுதான் புறாவின் இறக்கம். யோவான் ஞானஸ்நானம் கொடுத்துகொண்டு இருக்கும்போது சாட்சியாக சொன்னது. ஆவியானவர் புறாவைப்போல் வானத்திலிருந்து இறங்கி இவர்மேல் தங்கியதை கண்டேன்.

நானும் இதுவரை (இயேசுவானவர்தான் மேசியா என்பதை) அறியாதிருந்தேன். ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானம் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் (பிதா) ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர் என்று எனக்கு சொல்லியிருந்தார். யோ 1:32-33.


பிதாவின் சாட்சி:

இயேசுகிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று, ஜெபம் பண்ணுகையில் வானம் திறக்கப்பட்டது. பரிசுத்த ஆவியானவர் (புறா) ரூபங்கொண்டு புறாவைப்போல (புறா அல்ல - புறாவைப்போல் என்று குறிப்பிடுவதை கவனிக்கவும்) அவர்மேல் (இயேசுகிறிஸ்துவின் மேல்) இறங்கினார். அப்போது வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி நீர் என்னுடைய நேசக்குமாரன் உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. லூக் 3:22, மத் 3:16,17. இவர் என்னுடைய நேசக்குமாரன். மற் 3:17. யோவானுக்கும், மற்றவர்களுக்கும் இயேசுகிறிஸ்து மேசியாவாக அனுப்பப்பட்டதை அறிவிக்கும்படி ஆவியானவருக்கு உருவம் இல்லாதபடியால் ஆவியானவரே புறா ரூபம் எடுத்து எல்லார் கண்களும் காண இயேசுகிறிஸ்துவின்மேல் வானத்திலிருந்து இறங்கினார். ஆனால், இன்று பல ஊழியர்கள் விசுவாசிகள் தங்கள்மேல் புறா இறங்கியதாக சாட்சி கூறுகிறார்கள். இவர்கள் தங்களை இயேசுகிறிஸ்துவாக காண்பிக்க முயலுகிறார்களா? ஆவியானவர் இயேசுகிறிஸ்துமேல் இறங்கியதைப்போல் வேறு யார் மேலேயும் இறங்கவில்லை, இறங்கவும்மாட்டார்.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM