அக்கினியாய் இறங்கினார் எல்லோரும் கண்டார்கள் (அப்
2:2,3,33). அப்படியானால் பஞ்ச பூதங்களான காற்றையும், அக்கினியையும் புறஜாதி யார்
தெய்வமாய் காட்டுவதுபோல, ஆவியானவரை தேவன் என்று இவைகளை காட்டலாமா? சித்தரிக்கலாமா? (யோ
3:34, எபி 1:9)
தண்ணீர் (யோ 7:38-39). முத்திரை (எபே
1:13,4:30). அச்சாரம் (எபே
1:14) போன்றவை ஆவியானவருக்கு அடையாளமாய் உள்ளன. இதனால் இவைகள் எல்லாம் ஆவியானவரின்
ரூபமில்லை.
ஆவியானவரின் குணாதிசயங்களை நமக்கு தெரியப்படுத்தும் வகையில்,
புறாவாகவும், காற்றாகவும், அக்கினியாகவும், எண்ணெய்யாகவும், தண்ணீராகவும் நமக்கு வெளிப்படுத்துகிறார் தேவன்.
மொத்தத்தில் ஆவியானவரை தேவன் என்று இவர்கள் விசுவாசித்தால், இந்த தேவனுக்கு மனித கண்களால் காணப்படும்
ரூபம் இல்லை என்று அறிந்தால், அப்படிப்பட்ட மகிமையுள்ள தேவனுக்கு இணையாக,
மனுஷர்கள், பறவைகள், மிருகங்கள், ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக ஆவியானவரை மாற்றமாட்டார்கள். (ரோம
1:23). இப்படி விக்கிரங்களை படமாகவோ, சிலையாகவோ உருவாக்குவதும், அதை நமஸ்கரிப்பதும் விக்கிரக ஆராதனையாகும். அப்படியே இயேசுவாகிய தேவனுக்கு இப்படியாய்
மனித ரூபம் கொடுப்பதும் தவறு. அப்படியே ஆவியானவராகிய தேவனுக்கு ரூபம் கொடுப்பதும் தவறு. இதை வாசிக்கும் தேவ பிள்ளையே அதரிசனமான தேவனின் சந்ததியான விசுவாசியே
புறா வடிவம் உன்னிடம் இருந்தால் இன்றே அது உன்னைவிட்டு நீங்கட்டும் இவைகள் மறைமுகமாய்
விக்கிரக ஆராதனையைக் திணிக்கும் பிசாசின் கிரியைகள் ஆகும். ஆகவே அவைகள் அழிக்கப்படட்டும்.
|