கேள்வி: CSI
& லூத்தரன் சபைகளில் பதவி சண்டைகள் எப்போதுதான் தீரும்? சபை கமிட்டியிலிருந்து?, பிஷப் தெரிந்தெடுப்புவரை பணத்தைவைத்துக்கொண்டு
ஓட்டு சேகரிக்கிறார்களே! இது மாறாதா?.
பதில்: முதலாவது மனந்திரும்புதலின் அனுபவம் இந்த குறிப்பிட்ட சபையில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு இல்லை. பெரும்பாலான
ஆயர்களுக்கும், பிஷப்மார்களுக்கும் மனம்திரும்புதலின் அனுபவம் இல்லாததால் இந்த பதவி சண்டை என்றும் இந்த சபைகளில் மாறவே மாறாது.
ஆவிக்குரிய சபைகள் என்று கூறிக்கொள்ளும் பெந்தேகோஸ்தே சபைகளிலும் அதே நிலைதான்.
AOG சபைகளின் எலக்ஷனில் போட்டியும், பிரச்சனையும் ஏற்பட்டதே,
IPC சபைகளிலும் அதே லட்சணம்தான்.
 சமீபத்தில் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய ஆவிக்குரிய சபை என்று பெயர் பெற்ற
ACA (Apostalic Christian Assembly) அப்போஸ்தல கிறிஸ்தவ சபையின் ஸ்தாபகரும், நல்ல தேவ மனுஷனுமான
பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் உருவாக்கிய அந்த சபையில் பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் மரித்தவுடன்
பாஸ்டர்.சாம்சுந்தரம் அவர்கள் மிகப்பெரிய அந்த சபையின் பாஸ்டராக பொறுப்பெடுத்தார். இப்போது பாஸ்டர்.சாம்சுந்தரம் அவர்கள் வியாதிப்படுக்கையில் இனி முன்புபோல் செயல்படமுடியாத நிலையில் இருக்கிறார். இப்போதுதான்
அடுத்த தலைமை பாஸ்டர் யார்? என்பதற்கு உறவினர்களுக்குள் போட்டி உண்டானது.
ACA சபைக்கு ஏராளமான கிளை சபைகள் உண்டு. சென்னை தலைமை சபையில் மட்டும் பல ஆயிரக்கணக்கில் அங்கத்தினர்களும் உண்டு. லட்சக்கணக்கான ரூபாய்கள் தசம பாகம், காணிக்கை என்ற பெயரில் வரும் பணவரவுகளின் மூலம் கிடைக்கிறது. ஆகவே
ACA சபைகளின் தலைமை பாஸ்டர் பதவிக்கு பெரும் போட்டியும் பிரச்சனையும் ஏற்பட்டது.
3 பேர்கள் இந்த போட்டியில் பிரதானப்பட்டவர்கள். ஒருவர் போட்டியிலிருந்து விலகினார். கடைசியாக இரண்டுபேர் மட்டும் அந்த பதவி
போட்டியில் பிடிவாதமாக நின்றார்கள். போட்டியிட்ட இரண்டுபேரும் மரித்த பாஸ்டரும் - உயிரோடு இருக்கும் பாஸ்டருக்கும் இரத்த உறவுகாரர்கள்.
இந்த சூழ்நிலையை சரி செய்ய என்னைக்கூட தலையிடும்படி தூத்துக்குடியிலிருந்தும், சென்னையிலிருந்தும் என்னோடு பலமுறை சிலர் தொடர்புகொண்டார்கள். பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க, போட்டியில் நிற்கும் இரண்டு பாஸ்டரும்விட்டு கொடுக்காததால் சிலர் இந்த
ACA சபை சண்டையை நக்கீரன் பத்திரிக்கைக்கு கொண்டுபோகத் துணிந்தார்கள். அப்படி செய்யக்கூடாது என்று கண்டிப்பாக நான் அவர்களை வேண்டிக்கேட்டுகொண்டேன். மேலும் என்னை பாஸ்டர்.சாம்சுந்தரம் அவர்களுக்கும் அந்த சபையிலுள்ள சிலருக்கும் பிடிக்காது. ஏற்கனவே பாஸ்டர்.சாம்சுந்தரம்
குமுதம் பத்திரிக்கை நடத்தும் புறமதஸ்தர்களின் கூட்டு பிராத்தனையில் ஜெபிக்க தலைமை தாங்குவதாக தன் புகைப்படத்தையும் கொடுத்து
குமுதத்தில் விளம்பரம் செய்து அந்த ஜெபத்தை நடத்தியது தவறு என்றும் குமுதத்தில் வந்த பாஸ்டர்.சாம்சுந்தரம் அவர்களின் புகைப்படத்தோடுகூடிய அந்த விளம்பரத்தையும் ஜாமக்காரனில் நான் வெளியிட்டு என் கண்டனத்தை தெரிவித்தேன். அது பாஸ்டர் சாம்சுந்தரம் அவர்களுக்கு என்மேல் மேலும் வெறுப்படைய செய்தது.
பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் உயிரோடு இருந்தபோது சகோ.தினகரனின் மகள் மரணத்தைப்பற்றி என்னோடு பேசி பகிர்ந்துக்கொண்டது சாம்சுந்தரம் அவர்களுக்கு பிடிக்கவில்லை.
மேலும் அந்நியபாஷையைப்பற்றி தாக்கி நான் பலமுறை ஜாமக்காரனில் தொடர்ந்து எழுதியதால் அந்த சபையில் பலருக்கு என்னை பிடிக்காது. இந்த நிலையில் என்னை எப்படி மத்தியஸ்தம் செய்ய அவர்கள் விரும்புவார்கள். என்றாலும் அந்த சபையின் அங்கத்தினர் சிலரில் வக்கீல்கள் உண்டு. அவர்களோடு விசுவாசிகளில் சிலர்
ACA சபையின் நன்மை கருதி இந்த சமரச முயற்சியில் இறங்கினார்கள். எப்படியோ ஒருவழியாக சமரசம் யாராலோ ஏற்பட்டு முடிந்தது.
மரித்துப்போன ACA சபையின் ஸ்தாபகரான பாஸ்டர்.G.சுந்தரம் அவர்களின்
பேரனும், பாஸ்டருமான சிறுவயதுள்ள பாஸ்டர்.காலேப் யோசுவா அவர்கள் கடந்த
2012 நவம்பர் மாதம்
2ம் தேதி
ACA சபைக்கு உதவி தலைமை பாஸ்டராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்பின் அவர் பிரதிஷ்டையும் செய்யப்பட்டார். ஒரு வழியாக
ACA தலைமை பாஸ்டருக்கான போட்டி முடிவுக்கு வந்தது. என்றாலும் இன்னும் உள்ளே புகைச்சல் நீங்கவில்லை. ஜெபிப்போம்.
வயது கூடின அனுபவமுள்ள பல
ACA பாஸ்டர்களுக்கு இதில் திருப்தியில்லை. காரணம் பாஸ்டர்.காலேப்யோசுவா மிகவும் சிறுவயதுள்ளவர். இன்னும் அனுபவம் போதாது என்று பலர் கூறுகிறார்கள். என்றாலும் தலைமை பொறுப்புக்கு ஒருவர் வந்துவிட்டால் அவர்
சிறுவயதானாலும் கர்த்தர் அவருக்கு ஆளுமை ஞானத்தை நிச்சயம் அருளுவார். வேதத்திலும் அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை காண்கிறோமே!. சபை கர்த்தருடைய சரீரம்.
சபையில் உள்ள மூத்த பாஸ்டர்கள் பாஸ்டர்.காலேப் யோசுவா வாலிபன் என்று அலட்சியப்படுத்தாது அவரின் கையை பெலப்படுத்தும் வகையில், கசப்புகளை மறந்து தேவ நாம மகிமைக்காகவும் இயேசுகிறிஸ்துவின் வருகைக்காகவும் விசுவாசிகளை ஆயத்தப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அந்த சபைக்காக நான் ஜெபிக்கிறேன்.
புதிய தலைமை பாஸ்டர்.காலேப் யோசுவா அவர்களுக்கு சபையில் உள்ள ஜாமக்காரன் வாசகர்கள் சார்பில் வாழ்த்துகிறேன். அப்படியே போட்டியிலிருந்து விலகிவிட்டு கொடுத்த பாஸ்டருக்கு நன்றியும் கூறிக்கொள்கிறேன்.
|