அறிவிப்புகள்

வேத புத்தகத்துக்கு பதில் ஸ்தோத்திர புத்தகம்
ஸ்தோத்திர ஜெப புத்தகம் ஆபத்து

குருட்டு நம்பிக்கைக்கும், குருட்டு பக்திக்கும் பெயர்போன இந்தியாவில் கிறிஸ்தவர்களிடையே ஒரு புது குருட்டு விசுவாசம் பரவிவருகிறது. இப்போது கிறிஸ்தவர்கள் வேதபுத்தகம் வாசிப்பதற்கு பதில் பலர் எழுதிய ஸ்தோத்திர பலி என்ற புத்தகம்தான் மிகுதியாக கையில் வைத்துள்ளார்கள்.

கர்த்தாவே எகிப்தில் வண்டுகளை அனுப்பி வாதைகளை உண்டு பண்ணினவரே, ஆற்று தண்ணீரை இரத்தமாக மாற்றி தண்ணீர் குடிக்கமுடியாதபடி செய்தவரே ஸ்தோத்திரம் இப்படி முட்டாள்தனமாக முக்கியம் அல்லாத விஷயத்துக்கு ஸ்தோத்திரம் செய்ய விரும்பும் மக்கள், இப்படிப்பட்ட மக்களை ஏமாற்றும் ஊழியர்களும் பெருகிவிட்டார்கள. இப்படிப்பட்ட ஸ்தோத்திர புத்தகங்கள்தான் இப்போது ஏராளமாக விற்பனையாகிறது. பிரயாணங்களில் இப்பொதல்லாம் வேத புத்தகம் எடுத்து சொல்வதைவிட ஸ்தோத்திர பலி புத்தங்களைத்தான் பலர் கைகளில் காண்கிறேன். கிறிஸ்தவர்களின் நிலைமை பரிதாபமாக போகிறது. வேத புத்தகத்தை பிசாசு வாசிக்கவிடாமல் தடுக்க நிறைய திட்டம் வைத்துள்ளான். அதில் ஒன்றுதான் ஸ்தோத்திர பலி புத்தகம். ஆயர்கள், பாஸ்டர்கள் ஆராதனையில் இதை மக்களுக்கு அறிவித்து எச்சரிக்கை செய்யவேண்டும். இந்த ஸ்தோத்திர பலி புத்தகத்தை வாசிப்பதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஸ்தோத்திரம் உன் உள்ளத்தில் நன்றியின் அடிப்படையில் கர்த்தர் உனக்கும் உன் குடும்பத்துக்கும் உன் வாழ்க்கையிலும் செய்தவற்றை நினைத்து துதித்தால் அது பிரயோஜனமாக அமையும்.


நம்பாதீர்கள்:

ஜெபத்தில் ஆட்களின் பெயர் அழைக்கும் ஊழியர்கள் ஊருக்கு ஊர் ஈசலைப்போல் பெருகி விட்டார்கள். பல வியாதிகளின் பெயர்களை மெடிக்கல் டிக்ஷனரியிலிருந்து எடுத்து எழுதி மனப்பாடம் செய்து அதை ஜெபத்தில் கர்த்தர் காட்டியதைப்போல் ஏமாற்றுகிறார்கள். நம்பாதீர்கள். எயிட்ஸ் வியாதி சுகமாவதை காண்கிறேன் என்று துணிகரமாக பொய் சொல்லுகிறார்கள். இதுவரை இந்த வியாதி சுகமானதாக மருத்துவ உலகில் யாராலும் கூறப்படவில்லை.

மிகத்துணிகரமான பொய்:மரித்தவர்களை நான் ஜெபித்து உயிரோடு எழுப்பினேன் என்று துணிந்துகூறும் எந்த ஊழியரையும் நம்பாதீர்கள். உயிரோடு எழுப்பபட்டவர்களின் விலாசம் கேட்டால் இதுவரை செத்துப்போனவர்களை உயிரோடு எழுப்பினேன் என்று கூறுபவர்கள் யாருடைய விலாசத்தையும் கொடுக்கமாட்டார்கள். நான் இப்படி எழுதுவது கர்த்தர் இப்படிப்பட்ட சுகத்தை அற்புதத்தை செய்ய முடியாது என்பதல்ல. அவரால் சுகமாக்கமுடியாத வியாதியே இல்லை. ஆனால் இந்த ஊழியர்கள் கூறுவதைத்தான் பொய் என்கிறேன். காரணம் தெளிவான ஆதாரம் எதையும் இந்த ஊழியர்கள் இதுவரை சமர்ப்பிக்கவில்லை. பொய் பேசுபவர் இரண்டாம் நரகத்தில் தள்ளப்படுவார்கள். வெளி 21:8


வாசகர்கள் கவனிக்கவும்:

பேங்க் வழியாக, Emo-மூலமாக காணிக்கை அனுப்புபவர்கள் தயவுசெய்து இ-மெயில் மூலமாகவோ, தொலைப்பேசி மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ, பேக்ஸ் மூலமாகவோ நீங்கள் காணிக்கை அனுப்பிய தேதி - தொகை - எந்த பேங்க் என்ற விவரத்தை எங்களுக்கு தெரிவித்தால் நல்லது. பேங்க் பாஸ்புக்கில் எங்கிருந்து அந்த தொகை வந்தது!, யார் அனுப்பியது! போன்ற விவரங்களை பேங்க் பாஸ்புக் மூலம் அறிய முடிகிறதில்லை. ஆகவே நீங்கள் காணிக்கையை பேங்க் மூலமாக என் அக்கவுண்ட்டுக்கு அனுப்பிய உடனே எங்களுக்கு தெரிவித்துவிடுங்கள். இவ்விஷயத்தில் ஒத்துழைப்பு தந்தால் அரசாங்கத்துக்கு கணக்குகாட்டும்போது அவர்கள் எங்களை குற்றம் சாட்ட முடியாதபடியிருக்க உங்கள் அறிவிப்பு உதவியாக அமையும். சிலர் காணிக்கை அனுப்பிய விவரங்களை அறிவித்தார்கள் - நன்றி.


சிவகாசி ஜெப நடைக்கு பின் ஏற்பட்ட
பயங்கர வெடி விபத்து மரணங்களும்...

சகோ.வின்சென்ட் செல்வகுமார், நாலுமாவடி சகோ.மோகன் சி.லாசரஸ் ஆகியவர்களின் ஜெப வீரர்கள் நடத்திய சிவகாசி ஜெப நடையைப்பற்றி ஏற்கனவே புகைப்படத்துடன் ஜாமக்காரனில் எழுதினேன்.

சிவகாசியை சுற்றி சுற்றி ஜெபித்துக்கொண்டே ஜெபவீரர்கள் ஜெப நடை ஊழியம் செய்தார்கள். எங்கெங்கு விக்கிரகம் கண்டார்களோ அங்கெல்லாம் நின்று ஜெபித்து எல்லா பிசாசுகளையும், விரட்டியடித்து சிவகாசியை சுத்தமாக்கி வெற்றியுடன் திரும்பினோம் என்று அறிக்கை சமர்பித்த இரண்டு மாதங்களில் இதுவரை சிவகாசி நகரின் சரித்திரத்தில் காணாத அளவு வெடி விபத்தில் செத்தவர்கள் எண்ணிக்கை உயர்ந்ததாக அரசாங்கம் அறிக்கை சமர்பித்ததே!.

ஜெப நடையின் பலனா இது? சிவகாசியின் அத்தனை பிசாசுகளையும் ஜெபித்து விரட்டி விட்டோம் என்றார்களே!.

சிவகாசி வெடி விபத்து நடந்த புகைப்படம் வின்சென்ட் செல்வகுமாரின் ஜெப தொனி அல்லது இயேசு விடுவிக்கிறார் (நாலுமாவடி) பத்திரிக்கைகளில் வெளிவராத சாட்சிகளாகிப்போனதே!.

ஜெப நடை பெயரில் டூர் போய் வந்ததுதான் பலனாக காணப்படுகிறது.

நான் ஜெபத்தை விமர்ச்சிக்கவில்லை. அந்தந்த ஊர்களுக்கு சென்று ஊரை சுற்றி நடந்து அங்குள்ள விக்கிரகங்களை சபித்து ஜெபிப்பது என்ற வீண் வேலையை இனியாவது விட்டுவிட்டு அவரவர் இருக்கும் இடத்திலேயே ஒவ்வொரு ஊருக்காக ஜெபித்தால் கர்த்தர் அந்த ஜெபத்தை கேட்க மாட்டாரா? கொஞ்சமாவது உட்கார்ந்து யோசியுங்கள்.


தமிழ்நாட்டுக்கு சுபிட்சம், தமிழ்நாடு செழிக்கும்:

இப்படி கூறிய நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் அவர்களின் தீர்க்கதரிசனம் என்ன ஆச்சி என்றும் கேளுங்கள்!.

இதை எழுதும்போதே 17 மணிநேர கரண்ட் கட்டினால் தமிழ்நாட்டு மக்கள் படும்பாடுகள் ஏராளம். பள்ளி பிள்ளைகளின் படிப்பு, கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் எல்லா தொழில்களும் கரண்ட் இல்லாமல் நொடிந்துப்போயின. 50,000 சிறுதொழில் சாலைகள் மூடப்பட்டன. ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் பட்டினி. இதுவா செழிப்பு தீர்க்கதரிசனம்.

சிவகாசியை சுற்றிசுற்றி ஜெபநடை செய்து ஜெபித்து விபத்தை உண்டாக்கும் எல்லா விக்கிரக ஆவிகளையும் விரட்டிவிட்டோம் - அல்லேலுயா என்றார்களே!.

இப்படிக்கூறி சில வாரங்களிலேயே சிவகாசி சரித்திரத்தில் காணாத வெடிவிபத்தால் கையிழந்தோர், கால் இழந்தோர், உயிர் இழந்தோர் எண்ணிக்கை மிக அதிகம்? ஜெபநடையின் வல்லமையை பார்த்தீர்களா?

டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல், சிக்கன் குனியா, வறுமை, வேதனை தற்கொலைகள் இதுதான் தமிழ்நாட்டின் செழிப்பு தீர்க்கதரிசனமா?

இதைக்கூறிய ஊழியர்கள் கள்ளதீர்க்கதரிசிகளைப்பற்றியும் பிரசங்கிக்கிறார்கள். இதுதான் தமாஷின் உச்சக்கட்டம். நாம் எல்லாரும் மடையர்கள் என்று இவர்கள் முடிவுகட்டிவிட்டனர்.

"துர்கிரியைக்குதக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால்
மனுபுத்திரரின் (ஊழியர்களின்) இருதயம் பொல்லாப்பைச்
செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங் கொண்டிருக்கிறது". பிர
8:11


கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்:

FMPB (Friends Missionary Prayer Band) என்ற மிஷனரி ஸ்தாபனத்தின் முதல் மிஷனரியான Rev.Harris Hilton (வயது 75) அவர்கள் 2012 டிசம்பர் 16ம் தேதி கர்த்தருக்குள் மரித்தார். அவர் சிமெண்ட் ஃபேக்ட்டரியில் சூப்ரவைசராக பணியாற்றி, பின்பு மிஷனிரி ஊழியத்துக்கு தன்னை ஒப்புக் கொடுத்தார்.

ஆசியாவிலேயே மிக அதிக மிஷனரிகளை கொண்ட ஸ்தாபனம் FMPB மிஷனரி ஸ்தாபனமாகும். டாக்டர்.சாம்கமலேசன், சகோ.P.சாமுவேல், Dr.Rev.தியோடர் வில்லியம்ஸ் இன்னும் சிலரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் FMPB மிஷனரி ஸ்தாபனம். சகோ.எமில் ஜெபசிங் அவர்கள் FMPB பொது செயலாரராக பல வருடங்கள் பொறுப்பேற்று, FMPB முழுநேர ஊழியராகவும் பணியாற்றினார்.

1969ம் வருடம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பெரியமலை (சந்தனமர வீரப்பன் வாழ்ந்த அடர்த்தியான வனமாகும்) என்ற மலையில் வாழும் ஆதிவாசிகள் வசிக்கும் பணிதளத்தில் சுவிசேஷம் அறிவிக்கும் முதல்மிஷனரி பணியை FMPB தொடங்கியது. அப்போது டாக்டர்.புஷ்பராஜ் ஆகிய நானும், முதல் மிஷனரியாக சகோ.ஹாரிஸ் ஹில்டன் அவர்களுடன் அந்த மலையில் வைத்து FMPB தலைவர்களால் முதல் மிஷனரிகளாக பிரதிஷ்டை செய்யப்பட்டு நாங்கள் இருவரும் அங்கு பன்றி வளர்க்கும் குட்டையான குடிசைக்குள் தங்கி ஊழியம் செய்தோம். நடுவில் மிஷனரி ஊழியம் பணம் இல்லாததால் தடைப்பட்டது. நாங்களும் டேனிஷ்பேட்டைக்கே திரும்பி வந்தோம். பணம் FMPB ஸ்தாபனத்துக்கு சேரும்வரை தற்காலிகமாக சிலமாதம் மிஷனரி ஊழியம் நிறுத்தி வைக்கப்பட்டது. சில வாரங்களில் மிஷனரி பணி மீண்டும் தொடங்கப்பட்டபோது நான் என் குடும்ப பொறுப்பு காரணமாக மிஷனரி ஊழியத்துக்கு போகாமல் பழையபடி டாக்டர் தொழில் செய்யவேண்டிய இக்கட்டான நிலை என் வீட்டில் ஏற்பட்டது. ஆனால் ஹாரிஸ் ஹில்டனும் வேறு சிலரும் அதே மலைக்கு மிஷனரிகளாக மறுபடியும் புறப்பட்டு சென்றனர். ஹாரிஸ் ஹில்டன் மிகுந்த ஆத்தும பாரம் உள்ளவர். அவருக்கு மனைவி, நான்கு பிள்ளைகள் உண்டு. பல கஷ்டங்களுக்கு மத்தியில் அற்புதமாக ஊழியம் செய்தார். மலையில் சபை உருவாயிற்று, ஆலயம் கட்டப்பட்டது, தேவ நாமம் மகிமைப்பட்டது.

சகோ.ஹாரிஸ் ஹில்டன் அவர்கள் வேதாகம கல்லூரிக்கு அனுப்பபட்டு ஆயராக ஆக்கப்பட்டு FMPBயின் எல்லா மிஷனரி பணிதளங்களை சந்தித்து செயல்படும் ஊழியராக பொறுப்பேற்றார். அதன்பின் மிஷனரி பணியிலிருந்து ஓய்வு பெற்றார். சர்க்கரை நோயினால் ஒருகால் வெட்டி எடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து அவர் மனைவியும் மரித்தார். இப்படி பல போராட்டங்கள் மத்தியிலும் தொடர்ந்து மிஷனரி ஊழியத்தை அவர் வெற்றிகரமாக நிறைவேற்றி முடித்தார், நல்ல ஓட்டத்தை முடித்தார்.

2012 டிசம்பர் 16ம் தேதி கிட்னி பெயிலியர் ஏற்பட்டு மரண தருவாயில் டெல்லி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு நல்ல ஆயத்தத்துடன் தன் ஆத்துமாவை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தார்.

கடந்த மாதம் நான் ராஜஸ்தான் சென்றபோது டெல்லி சென்று ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அவரை சந்தித்து மரணத்துக்கு அவரை ஆயத்தப்படுத்தி ஜெபித்து வந்தது எனக்கு திருப்தியாக இருந்தது. அவருக்கோ அன்றைய என் ஜெபம் ஆத்ம பெலனாக இருந்தது. அவரின் நல்ல ஊழியத்துக்காக, அவரின் சாட்சியுள்ள ஜீவியத்துக்காக தேவனைத் துதிக்கிறேன்.

அவர் பெற்ற பிள்ளைகள் நான்கு பேரும் ஊழியத்தில் இருக்கிறார்கள். மருமக்களும் ஊழியத்தை செய்கிறார்கள். அவருடைய பிள்ளைகளுக்கும் குடும்பத்துக்கும் கர்த்தர் ஆறுதலை அளிப்பாராக. ஆமென்.


ஜாக்கிரதை! மீனுக்கு விஷ ஊசி?

கொஞ்சம் அடிவயிற்றைக் கலக்குகின்ற நியூஸ்தான்! நாக்கு ருசிக்காக நாம் வாங்கி சாப்பிடுகின்ற பல வகைவகையான மீன்களில் உயிருக்கே உலை வைக்கும் கலப்படம் நடக்கிறதாம். அதுவும் பிரேதம் கெடாமல் இருக்க பயன்படுத்தப்படும் ஃபார்மலின் (ஃபார்மால்டி ஹைடு) என்ற நச்சு வேதிப்பொருள் கலக்கப்படுகிறதாம்!. இந்திய தலைநகரில் உள்ள மெகா சைஸ் ஹஜீபூர் மீன் மார்கெட்டில் சமீபத்தில் இந்த நச்சு வேதிப்பொருள் தடவப்பட்ட மீன்களை அதிகாரிகள் மடக்கிப்பிடித்து ரெய்டு செய்திருக்கிறார்கள். ரெய்டில் கிடைத்த தகவல் உண்மையே என்று டெல்லி ஹெல்த் மினிஸ்டர் டாக்டர் ஏ.கே.வாலியா கருத்துத் தெரிவித்திருக்கிறார். ஆந்திரா எல்லையிலிருந்து பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் மீன்களில்தான் அதிகமாக இந்த பார்மலின் தடவப்பட்டும் ஊசி மூலம் உள்ளே செலுத்தியும் அந்த மீன்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மேலும் பச்சை கலரில் கடைகளில் கிடைக்கும் ஓலைச்சாயம்கூட மீனின் பூநாரில் (செவிலில்) தடவப்படுகிறது என்ற செய்தியையும் சொன்னார் அந்த பெரியவர். இச்சாயம் முதலில் பச்சையாகவே இருக்கும். இச்சாயம் பூநாரில் தடவியதும் செக்கச்செவேல் என்று டால் அடிக்க ஆரம்பித்துவிடும். வஞ்சரம் போன்ற விலை அதிகம்போகும் மீன்கள் அழுகிவிட்டால் அதை மறைக்க மற்ற மீனில் இருந்து எடுக்கப்படும் ரத்தக்கழிவுகளை சேகரித்து வஞ்சரத்தில் பளபளப்பாக தடவியும் சிலர் விற்கிறார்களாம். மட்ட ரகமான குங்குமச் சாயமும் இந்தக் கலப்படங்களில் அடங்கும் என்கிறார் ஒரு மீனவப்பெண்மணி. நாம் மார்கெட்டில் விசாரித்தவரை கொடுவா, வஞ்சரம் போன்ற விலை அதிகமான பெரிய சைஸ் மீன்களில்தான் இந்த நச்சு அதிகமாக கலக்கப்படுகிறது என்று சொல்கிறார்கள்.

- நன்றி: குமுதம்


கவனிக்கவும்

1.குறைவான Stamp ஒட்டி அனுப்பும் பத்திரிக்கைகளை, கடிதங்களை, கவர்களை ஒரு சிலவற்றை மட்டும் திருப்பி அனுப்புகிறோம். காரணம் அனுப்புபவர்கள் அந்த தவறை சரிசெய்து கொண்டு கடிதத்தின் சரியான எடைக்கு ஏற்ப ஸ்டாம்ப் ஒட்டி அனுப்ப அது அவர்களுக்கு உதவும். இப்படி எழுதுவது உங்களை வேதனைப்படுத்தினால் பொறுத்துக்கொள்ளவும். கவர் அனுப்புபவர்கள் Stamp ஒட்டி அனுப்பும்போது சரியான எடை பார்த்து, அதற்குரிய Stamp ஒட்டி அனுப்பவும்.

2.Book Post என Rs.4 தபால்தலை ஒட்டும்போது திருமண அழைப்பிதழ்களில், கையெழுத்து இட்டோ அல்லது பேனாவில் எதையாவது எழுதினாலோ Due அல்லது அபராதம் (Fine) இடுவதால் தபால் அனுப்புபவர் எச்சரிக்கையாக அனுப்பவும்.


கடைசியாக எச்சரிக்கிறேன்:

இப்போது பெரும்பாலும் பெந்தேகோஸ்தே சபைகளில் விசுவாசிகள் பேசும் பாஷைகள் அந்நியபாஷை அல்ல!.

பாஸ்டர்கள் பேசும் பாஷைகளும் அந்நியபாஷை அல்ல!. தாங்கள் பேசும் தவறான பாஷைகளை சபை மக்களுக்கும் கற்றுக்கொடுக்கிறார்கள்.

நீங்கள் ஜெபத்தில் பேசும் அந்நியபாஷை பொய் என்றால் உங்கள் வாழ்க்கையில் எல்லா செயல்களும் பொய்யாகவே மாறும். தெளிவான வார்த்தைகளினால் கர்த்தருடன் பேசுங்கள் என்று வேதம் போதிக்கிறது.


பாஸ்டர்களுக்கு எச்சரிக்கை:

உங்களுக்கு மனசாட்சி உண்டு. நீங்கள் பேசும் அந்நியபாஷை உண்மையானதல்ல என்று உங்களுக்கே தெரியும். தயவுசெய்து உங்கள் பாஷைகளை மறுபரிசீலனை செய்யுங்கள். ஆவியானவருக்கு விரோதமாக கூறுவது: இம்மையிலும், மறுமையிலும் மன்னிக்கப்படாது என்பதை மறந்துப்போகாதீர்கள். உங்களையும் ஏமாற்றி - உங்கள் சபை ஜனங்களையும் ஏமாற்றியதுபோதும். நான் ஆவியானவருக்கு விரோதியல்ல. பரிசுத்தாவி ஆவியானவர் நமக்குள் வாசம்பண்ணவே கிறிஸ்துவால் அனுப்பப்பட்டவர். யோ 14:16. நானும் ஒரு காலத்தில் அந்நியபாஷை பேசியவன்தான். ஆனால் நான் பேசியது ஒரு பாஷையே அல்ல என்பதை உணர்ந்தேன். திருந்தினேன்!.

ஏமாறாதீர்கள்!          ஏமாற்றாதீர்கள்!!


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN