நான் வாசித்த அற்புத விளம்பரங்கள்

விளம்பரம் 1:

பாண்டிச்சேரியில் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தை திறந்து வைத்து ஆசீர்வதித்த நகரப் பெரியோர்கள்.
1). பாண்டிச்சேரி முதலமைச்சர் மாண்புமிகு.N.ரங்கசாமி
2). மத்திய இணையமைச்சர் மாண்புமிகு.V.நராயணசாமி
3). மாநில அமைச்சர்கள் திரு.ராஜவேலு
4). மாநில அமைச்சர்கள் திரு.பன்னீர்செல்வம்
5). மாநில அமைச்சர்கள் திரு.தியாகராஜன்
6). சட்டமன்ற உறுப்பினர் திரு.தமிழ்செல்வம்
ஆகிய இவர்களின் ஆசீர்வாதத்தோடு வாழ்த்துதலோடு இயேசு அழைக்கிறார் புதிய ஜெப கோபுரம் அநேகரின் ஜெபத்துக்காக திறந்து வைக்கப்பட்டது.

இவர்களோடு சில ஊழியர்களும், டாக்டர்.பால்தினகரன் அவர்களின் குடும்பமும் இணைந்து திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

பாண்டிச்சேரி முதல்-மந்திரிகள், எம்.எல்.ஏக்கள் சில ஊழியர்கள் ஜெபகோபுரத்துக்கு வருகை தந்திருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மத்தியில் இயேசு வந்திருப்பாரா என்று பாண்டிச்சேரி இயேசு அழைக்கிறார் இளம்பங்காளர்கள் முட்டள்தனமாக கேள்வி கேட்டுள்ளார்கள்!.

(இயேசு அழைக்கிறார் 2012 அக்டோபர் பக்கம் 65).


விளம்பரம் 2:

Dr.A.நித்தியராஜ், சகோ.அதிசயராஜ் அவர்களின் பத்திரிக்கையில் வெளிவந்த விளம்பரம். பங்காளர் திட்டத்தில் இணைந்துவிட்டீர்களா?

100 ரூபாய் செலுத்தக்கூடிய 4000 பங்காளர் தேவை. இந்த திட்டத்தில் நீங்கள் இணைந்தால்
1). பலத்த பாதுகாப்பு
2). செழிப்பு
3). உங்கள் ஜெப விண்ணபத்திற்கு பதில்
போன்ற 3 விதமான ஆசீர்வாதங்களை தருவேன் என்று தேவன் எனக்கு வாக்கு பண்ணினார்.

(இவர்களின் பத்திரிக்கையில் நான் கண்டது 2012 அக்டோபர் பக்கம் 11ல்).


விளம்பரம் 3:

இயேசு அழைக்கிறார் ஊழியத்துக்கு 25,000 மாதந்தோறும் கொடுக்கிறேன். காணிக்கை கொடுக்க ஜெபகோபுரம் சென்றபோது காணிக்கையை ஆசீர்வதித்து ஜெபத்தில் சொன்ன வார்த்தை இனி நீங்கள் வியாபாரத்தைத்தேடி போகமாட்டீர்கள். வியாபாரம் உங்களைத் தேடி வரும், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்கள்.

- சாமுவேல், சென்னை.

மேலே வாசித்தப்படித்தான் இயேசு அழைக்கிறார் ஊழியத்தை தாங்குகிற ஒவ்வொரு குடும்பத்தையும் கர்த்தர் ஆசீர்வதித்து உயர்த்துகிறார்.

- டாக்டர்.பால்தினகரன்.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM