வாசகர் கடிதம்
1:
அன்புள்ள ஐயா,
2012 டிசம்பர் ஜாமக்காரனில் உங்கள் துணைவியார் திருமதி.வதனி புஷ்பராஜ் அவர்கள் எழுதி அறிவித்தபடி நாங்கள் பலர் அதிகாலை
5 மணியிலிருந்து TWR தமிழ் மற்றும் மலையாளம்
FEBA தமிழ் வானொலி மூலம் வரும் வேதபாட செய்திகளை கேட்டு வருகிறோம். எல்லாருக்கும் மிக பிரயோஜனமாக இருக்கிறது.
நான் எங்கள் பணக்குடி கிராமத்தில் எங்கள் வீட்டின் இரண்டு பக்க ஜன்னலில் ஸ்பீக்கர் கட்டி அதன்மூலம் எங்களை சுற்றிஉள்ளவர்களை அந்த வேத பாட நிகழ்சசியை கேட்க செய்கிறோம். அது பலருக்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கிறதை உங்களுக்கு அறிவிக்கவே இதை எழுதுகிறேன். அந்த வேத பாடங்களுக்காக தேவனை துதிக்கிறோம்.
- பணக்குடி, விருதுநகர் மாவட்டம்.
|