உபதேசங்களைச் சோதித்துப் பார்ப்பது எப்படி?
  ஆர்.ஸ்டான்லி

சொல்லாலும், செயலாலும், சத்தியத்திற்கு ஆதரவாகவும், துர்வுபதேசத்திற்கு எதிராகவும் நிற்கிறோமென நாம் தெரிவிக்காவிடில் அடுத்த தலைமுறைக்கும் சுவிசேஷத்திற்குமிடையே சுவரெழுப்புகிறோம் என்றார். அந்தக் கிறிஸ்தவ ஞானி பிரான்சிஸ் ஷேபர்.

"வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்குக் கட்டளையிடு" என்பதே தீமோத்தேயுவுக்குப் பவுலின் முதல் செய்தியாகும். (1தீமோ 1:3). அப்படியே தனது இரண்டாம் நிருபத்தின் இறுதியிலும் இப்படி எழுதினார். "அவர்கள் ஆரோக்கியமான உபதேசங்களைப் பொறுக்க மனதில்லாது, செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகும் காலம் வரும்" (2தீமோ 4:3,4) அந்தக் காலம் வந்துவிட்டதல்லவா?.

ஆதிச்சபையின் அமோக வளர்ச்சிக்கு நான்கு காரணங்களில் அவர்கள் அப்போஸ்தலரின் உபதேசத்தில் உறுதியாகத் தரித்திருந்ததே முதற்காரணம் (அப் 2:42). "உபதேசத்தைப்பற்றி கவலைப்பட வேண்டாம். ஊழியம் செய்தால்போதும்" என்பது "பந்தைப்பற்றிக் கவலைப்படவேண்டாம், விளையாடினால் போதும்" என்பதற்குச் சமம். பீட்டர் லூயிஸ் என்பவர் இதைச் சொன்னார்.

கள்ளத்தீர்க்கதரிசிகள் (மத் 24:24), கள்ள அப்போஸ்தலர் (2கொரி 11:13). கள்ளச் சகோதரர் (கலா 2:4). கள்ளப் போதகர் (2பேது 2:1) என்றெல்லாம் தேவையில்லாமல் வேதம் குறிப்பிடவில்லை. எல்லாவற்றையும் சோதித்துப்பார்க்க நாம் கட்டளை பெற்றுள்ளோம். "எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள், பொல்லாங்காகத் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள்". (1தெச 5:21,22). சோதித்துப்பாருங்கள்! படித்துக்கொள்ளுங்கள்! விட்டுவிலகுங்கள்! அதின் விளைவு அல்லது கனி என்ன என்பதே எந்த உபதேசத்திற்கும் அமிலச் சோதனையாகும். ஏனென்றால் "நல்ல மரமானது கெட்ட கனி கொடாது. கெட்ட மரமானது நல்ல கனி கொடாது. அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்" (லூக் 6:43,44). உபதேசத்தை மட்டுமல்ல, உபதேசிகளையும் சோதித்துப்பார்க்கவேண்டும். "தேவ வசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை (விளைவை) நன்றாகச் சிந்தித்து அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்".எபி 13:7.

எந்தப் போதனையையும், ஊழியத்தையும் தழுவுமுன் கீழ்கண்ட ஏழு கேள்விகளை கேட்டுப்பார்க்க வேண்டும்.


1. இவ்வுபதேசம் அல்லது ஊழியம் இரட்சிப்புக்கு வலியுறுத்துவது கிருபையா அல்லது கிரியையா?

இதுதான் மிகவும் அடிப்படையானதாகும். ஏனென்றால் கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள். இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு, ஒருவரும் பெருமை பாராட்டாதபடி இது கிரியைகளினால் உண்டானது அல்ல (எபே 2:8,9). கிரியைகளினாலல்ல, கிரியைகளுக்காக இரட்சிக்கப்பட்டோம் குதிரைக்கு முன்னால் வண்டியைக் கட்டக்கூடாது.

இரட்சிப்புக்கு கிரியைகளை வலியுறுத்தும் உபதேசத்திற்கு சில எடுத்துக்காட்டுகளை தருகிறேன். மூத்த சகோதரன் ஒருவனுடன் வந்துக்கொண்டிருந்த வாலிபனொருவனிடம் நீ இரட்சிக்கப்பட்டிருக்கிறாயா என வினவினேன். "சிலுவையை நோக்கி நடந்துக்கொண்டிருக்கிறான்" என்று இவனுக்காக மூத்த சகோதரன் பதிலளித்தார். "எவ்வளவு காலமாக" எனக்கேட்டேன். "மூன்றுமாதம்" என்று பதிலளித்தார். அதாவது இந்த வாலிபன் சிறுவயது முதல் தான் செய்த எல்லாப் பாவங்களையும் ஒவ்வொன்றாக அறிக்கையிட்டு, தவறிழைத்த ஒவ்வொருவரோடும் காரியங்களைச் சரிசெய்து கொண்டிருக்கிறானாம். இன்னும் முடிக்கவில்லையாம் ஒருநாள் வரும் அப்பொழுது இந்த மூத்த சகோதரன் அந்த வாலிபனைப் பார்த்து இப்போழுது நீ பாவங்களையெல்லாம் அறிக்கை செய்துவிட்டாய், சரிசெய்யவேண்டிய காரியங்களையெல்லராம் முடித்துவிட்டாய். இனி தேவனிடம் இரட்சிப்புகாக ஜெபி என்பார்!! பிரியமானவரே மனிதரோடு ஒப்புரவாகுதலென்பது வேத உபதேசம்தான். ஆனால் அது இரட்சிப்பின் வெளிப்பாடுதானே ஒழிய இரட்சிப்புக்கு நிபந்தனையல்ல. நொடிப்பொழுதில் எவரும் இரட்சிக்கப்படலாம். ஆயக்காரன் ஆலயத்திற்குள் பாவியா நுழைந்தான். பரிசுத்தவானாக "நீதிமானாக்கப்பட்டவனாக" வெளிவந்தான்.

இதுபோலவே, மத்தேயு 28:19ஐக் குறிப்பிட்டு, "சீடருக்கு மட்டுமே திருமுழுக்கு கொடுக்கலாம்" எனக் கூறுவர். அவர்களது அறிவின்படி புதிய ஏற்பாட்டிலுள்ள சீடத்துவத்தின் அத்தனை நிபந்தனைகளையும் நிறைவேற்றி முடித்தவனே சீடனாம். ஆனால் "சீடன்" என்னும் சொல்லின் அடிப்படைப் பொருள் "மாணவன்" அல்லது "இணைந்தவன்" என்பதாகும். அதாவது அவன் இயேசுவுடன் இணைந்து அவரைப் பின்பற்றத் துவங்கியிருக்கிறான். பாலர் வகுப்பிலிருந்தாலும் பட்டப்படிப்பிலிருந்தாலும் மாணவன்தானே எனவே சேருங்கள், முழுக்குங்கள், போதியுங்கள் என்பதே இறுதிக்கட்டளையின் முக்குறிப்புகளாகும்.

இன்னும் சிலர் ஞானஸ்நானத்தை இரட்சிப்புக்கு ஒரு நிபந்தனையாக்கிவிடுவர். கிறிஸ்து முடித்த புண்ணியக்கிரியைகளை விசுவாசிப்பத்தால் மட்டுமே நாம் இரட்சிக்கப்படுகிறோம். உள்ளனுபவத்தின் வெளியடையாளமாகவே ஞானஸ்நானம் இதைத் தொடர்கிறது.

தேவனைப் பொறுத்தவரை இரட்சிப்பு என்பது எல்லாமே "கிருபை" நம்மைப் பொறுத்தவரை அது எல்லாமே "விசுவாசம்" ஒன்றையும் கூட்டாதீர், குறைக்காதீர் கவனம்.


2. இவ்வுபதேசம் என்னை நடத்துவது விடுதலைக்குள்ளா, அடிமைத்தனத்திற்குள்ளா?.

"நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைக்கொண்டிருங்கள்" (கலா 5:1). மோசேயின் பளுவான நுகத்தடியுடன் ஒப்பிட்டு, "என் நுகம் மெதுவாயும் என் சுமை இலகுவாயுமிருக்கிறது" என்றார் இயேசு (மத் 11:28,30). பிராமணப் பிரசங்கிகள், பொதுவாக மூன்று காரியங்களில் தங்கள் சட்டதிட்டங்களைத் திணிப்பார்கள்.

அ). ஆசரிப்பு:
எந்தவொரு நாளை அல்லது நாட்களை ஆசரிக்க விசுவாசிகளுக்குக் கட்டளை கிடையாது. தங்கள் கிறிஸ்தவ விசுவாசத்துடன் பழைய உடன்படிக்கையின் நாட்கள் ஆசரிப்புக் சட்டங்களை இணைத்துக்கொள்ள வஞ்சிக்கப்பட்ட கலாத்திய விசுவாசிகளுக்குப் பவுல் இவ்விதம் எழுதினார். "இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க பெலனற்றதும் வெறுமையுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி? நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே" (கலா 4:9:19). பழைய ஏற்பாட்டில் ஓய்வுநாள் சனிக்கிழமை இப்பொழுதோ அது ஞாயிற்றுக்கிழமையென்று சில கிறிஸ்தவர்கள் கருதுகின்றனர். அப்படியல்ல, எந்தவொரு நாளையும் ஆசரிக்க நமக்கு இன்று பிரமாணம் கிடையாது. ஆசரிக்க அல்லது ஆசரிக்காமலிருக்க நமக்கு முழு சுயாதீனம் உண்டு. ஆசரித்தால் அது கர்த்தருக்கென்று, ஆசரிக்காவிட்டாலும் அது கர்த்தருக்குகென்றுதான் (ரோம 14:5,6). இவ்வித மகிமையான விடுதலைக்காக அல்லேலுயா முழங்குங்கள். ஆனாலும் வாரத்தின் ஏழு நாட்களில் ஒருநாளைத் தேவனைத் கனப்படுத்தும்படி அவருக்காகவே செலவிடுவது ஆரோக்கியமான ஆசீர்வாதமான பழக்கம்.

ஆ). ஆகாரம்:
அப்படியே பழைய ஏற்பாட்டிலுள்ள ஆகாரத்துக்கடுத்த பிரமாணங்கள் புதிய உடன்படிக்கையின் கீழ் இருக்கும் நமக்கு கட்டளையல்ல. "புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறபடியால் கர்த்தருக்கென்று புசிக்கிறான். புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறான்" (ரோம 14:5). முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெற விரும்புவோர் இறைச்சியோ, இனிப்போ, காரமோ சாப்பிடக்கூடாது என்றதொரு புதிய "வெளிப்பாட்டை" சில ஆண்டுகளுக்குமுன் ஒரு ஊழியக்காரி கொண்டுவந்தான். "பிரியமானவரே, பலவித அந்நிய போதனைகளால் அலைப்புண்டு தியாதிருங்கள். போஜன பதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது. போஜன பதார்த்திங்களில் முயற்சி செய்கிறவர்கள் பலனடையவில்லையே" (எபி 13:9).

இ) ஆடை:
கண்ணியமாயிருக்கும் எந்த நாகரீக ஆடையையும் தயங்காமல் அணியலாம். அகலக் கால் சட்டையை பிரசங்கியாகிய நான் எப்படி அணியமுடியுமென ஒரு நண்பர் ஒருமுறை என்னைத் திட்டியே விட்டார். அது வசதியாயிருக்கிறதென்றாலும் விட்டாரில்லை. அதே நண்பரை ஈராண்டு கழித்து அகலக் கால்சட்டையில் பார்த்தேன். அப்பொழுது இறுக்கமான கால்சட்டை நாகரீகமாகவிட்டது. முகப்படவுர் மட்டும் போடும் சிலருக்கு உதட்டுச்சாயம் பூசும் மங்கையர் பயங்கர பாவிகளாய்த் தோன்றுவர். பவுடர் முகத்தின் தோற்றத்தையும் சாயம் உதட்டின் தோற்றத்தையும் நன்றாக்குகிறது. அவ்வளவுதான் வித்தியாசம் என அவர்கள் புரிந்துக்கொள்ள தவறுகின்றனர். சில சபைகளில் தலைக்கு சாயம் போடுதல், நகையணிதல் எல்லாம் பாவமென்றே கருதப்படுகிறது. இன்னும் சிலருக்கு பூ வைப்பது பாவம், ஆனால் பூப்போட்ட தாவணி அல்லது உடையணிவதில் தவறில்லை!. இதிலென்ன வித்தியாசம்? மலர்ந்த பூ முப்பரிமாணமுள்ளது. வரைந்த பூ இரு பரிமாணம்! ஒன்று இயற்கைப் பூ! அடுத்தது செயற்கைப் பூ! அவ்வளவுதான் தனி நபரது விருப்பங்களுக்கு விட்டுவிட வேண்டிய காரியங்களை உபதேசங்களாக்கிவிடாதிருங்கள்.

பிரமாண மார்க்கம் கட்டயாம் பெருமைக்கு வழிநடத்தும் என்றார் பக்தன் வாட்சமன் நீ எவ்வளவு உண்மை!.


3. இவ்வுபதேசம் பரிசுத்தத்திற்கு வழிநடத்துகிறதா, அல்லது கவலையீனமாய் நடக்கச் செய்கிறதா?

"ஒருவன் நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்.... இப்படிப்பட்டவர்களை விட்டுவிலகு" (1தீமோ 6:3-5).

உத்தம உபதேசம் எப்பொழுதும் பரிசுத்த வாழ்வுக்கே நடத்தும் என்பது பழம். பரிசுத்தரின் ஆணித்தரமான கருத்தாகும். நன்னெறிக்கு நடத்துவதே நல்லுபதேசத்தின் நோக்கு என்றார். A.W.டோசர், உபதேசக் கோளாரினால் நடத்தைக் கோளாருண்டாகும் என்றார். R.A.டோரி உபதேசம் வாய்க்கல்ல, வாழ்வுக்கு என்றார் ஜான் கால்வின்.

பரிசுத்தத்தில் வளருவதே நம்மைக் குறித்த தேவ சித்தம்... "பரிசுத்தமாயிருக்கிறவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்" (வெளி 22:11). பரிசுத்தமற்ற கிறிஸ்தவன் வேதம் போதிக்கும் அத்தனைக்கும் முரண்பட்டவன்.

ஒரு பிரசங்கத்தைக் கேட்டபின் அல்லது ஒரு புத்தகத்தை வாசித்தபின், நீதியின்மேல் எனது பசி தாகம் கூடியிருக்கிறதாவென சோதித்துப்பார்ப்பேன், நமது ஆத்துமாவிலிருந்து ஆகாததை அகற்றும் கூர்மை இருபுறமும் கருக்குள்ள பட்டயத்திலும் கூர்மையான வேத வசனத்திற்கே உண்டு. வசனமானது நம்மை எச்சரித்து "பிழைகளுக்கும் மறைவான குற்றங்களுக்கும், துணிகரமான பாவங்களுக்கும், பெரும் பாதகத்துக்கும்" நம்மை விலக்கி காக்கிறது (சங் 19:11-13).

கள்ளப்போதகர்கள் மக்களிருதயத்திலிருக்கும் தேவ பயத்தைப்கொன்று விடுவார். விடுதலை என்ற பெயரில் பாவம் செய்ய விடுவிப்புக்கொடுத்து விடுவார். தன்னைப் பிரியப்படுத்தவல்ல, தேவனைப் பிரியப்படுத்தவே கிறிஸ்தவன் விடுதலை பெற்றிருக்கிறான். சில பிரசங்கிகளுக்கு "எப்படி" செய்கிறோமென்பதைவிட "என்ன" செய்கிறோமென்பதே முக்கியம். அவர்களுக்கு முறையல்ல முடிவுதான் முக்கியம். இவ்விதப் போதனையினால்தான் ஊழியங்களில் எல்லாவித அட்டூழியங்களும், தலைவிரித்தாடுகின்றன. பிரியமானவரே, பரிசுத்தத்திற்கு கிரயம் செலுத்தவேண்டும். பரிசுத்தமாகுதல், சுயவெறுப்பு ஆகிய பிரசங்கங்களுக்கெல்லாம் கிராக்கியில்லாததால் பரிசுத்த வாழ்வுக்கு சவால்விடும் ஊழியரின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. மக்களைப் பரிசுத்தமாக்குவதல்ல, பரவசமாக்குவதே நிகழ்ச்சியின் நோக்காகிவிட்டது. ஆனால் சர்தையிலும் தங்கள் வஸ்திரங்கைளக் கறைப்படுத்திக்கொள்ளாத "ஒரு சிலர்" உண்டு அவர்கள்தான் முக்கியமானவர்கள். அவர்களோடு சேர்ந்துக்கொள்ளுங்கள்.


4. இவ்வுபதேசம் வலியுறுத்துவது வேதத்தையா அல்லது வெறுமனே உணர்ச்சிகளையும், அனுபங்களையுமா?

விசுவாசத்தில் வளருவதே கிறிஸ்தவ வாழ்க்கையின் வளர்ச்சியாகும். ஆசரிப்புக் கூடாரத்தில் அருமையானதொரு விளக்கமுண்டு. வெளிப்பிரகாரத்தில் சூரியவொளியும், உட்பிரகாரத்தில் விளக்கொளியும், மகா பரிசுத்த ஸ்தலத்திலோ இருள்மட்டுமே உண்டு. மகா பரிசுத்த ஸ்தலத்தில் தரிசித்து அல்ல, விசுவாசித்தே நடக்கமுடியும். (2கொரி 5:6).

மறுரூப மலையில் மகிமை கிறிஸ்து மீது இறங்கியதையும், பிதாவின் சத்தம் உண்டானதையும், நேரில் கண்ட, கேட்ட உன்னத அனுபவம் பேதுருவுக்கிருந்தது. ஆனால் கிறிஸ்து தான் மேசியாவென நிரூபிக்க "அதிக உறுதியான" தீர்க்கதரிசன வசனத்தையே முதன்மையாக வைக்கிறார். (2பேது 1:16-21). தாங்கள் கண்ட தரிசனங்கள், கேட்ட சத்தங்கள், பறந்து சென்ற அனுபவங்கள் இவைகளையே "தவறாதவை" எனச் சாதிக்கும் ஊழியர் கூட்டம் இன்று ஏராளம். மக்கள் அதை நம்பாவிடில் தேவகோபம் இறங்குமெனவும் பயங்காட்டுவர்!. மாறாக ஏராளம் தரிசனங்களும் வெளிப்பாடுகளும் பெற்றிருந்த பவுலின் தாழ்மையைப் பாருங்கள். "நானறியேன், தேவனறிவார், நானறியேன் தேவனறிவார்" எனத் திரும்பத் திரும்பச் சொல்லுவதைக் கவனியுங்கள். மட்டுமல்ல, அவனது மேன்மை பாராட்டலெல்லாம் "பலவீனங்கள், நிந்தைகள், நெருக்கங்கள். துன்பங்கள், இடுக்கண்கள்" ஆகியவைமீதுதான். (2கொரி 12:1-11) நான் ஒன்றுமில்லை என்பதே அவரது முடிவான கொள்கை! நவீன மேடைகளிலுள்ள அகங்காரப் பிரசங்கிகளையல்ல பவுலையே நான் பின்பற்றுவேன்.

நமது தேவன் அற்புதங்களின் தேவன், இன்று நமக்கு அடையாளங்கள் தேவைதான், ஆனால் வசனத்தை வலிறுத்தாத உபதேசமெதுவும் தினமும் அற்புதங்களைச் சோனாமாரியாய்ப் பொழிந்தாலும் அது எனக்குத் தேவையில்லையென்றார் மார்ட்டின் லூத்தர். அப்படியே தீர்க்கதரிசனம் உரைத்தல், ஆவியின் வரமானாலும், உரைக்கப்பட்டது வசனத்திற்கு உடன்பட்டிருக்கிறதா என நிதானிக்கும் முன் அதை ஏற்றுக்கொள்ளவேண்டியதில்லை. (1கொரி 14:29). நான் தரிசனம் ஒன்றும் கண்டதில்லை. சத்தம் ஒன்றும் கேட்டதில்லை. ஆனால் இரண்டும் உண்டு என்றறிவேன், அதை எழுதப்பட்ட வசனத்திற்கு அடுத்துதான் வைப்பேன் (எரே 23:28,29).


5. இவ்வுபதேசம் தேவனது மகத்துவத்தை ஆராதிக்க வழி நடத்துகிறதா அல்லது மனிதனின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறதா?

"நீங்கள் தேவர்களைப்போல் இருப்பீர்கள்" என்பதே மனிதனுக்கு வந்த முதல் சோதனை (ஆதி 3:5). சத்துருவானவன் தனது முறைகளை மாற்றிக்கொண்டாலும் அவனது முக்கிய சோதனை இதுவேதான். இயேசுவுக்கு வந்த மூன்று சோதனைகளின் அடிப்படைக்கருத்து இதுவேதான். நினைவிருக்கிறதா?

மனிதனை மையமாகக்கொண்ட இத்துர் உபதேசத்துக்கு எடுத்துக்காட்டுகள் ஏராளம். தேவனை கேள்வி கேட்பது ஓர் எடுத்துக்காட்டாகும். நமக்கு என்னதான் நிகழ்ந்தாலும் ஏனென்று கேட்க உரிமையில்லை. நமக்குப் பதில் சொல்ல தேவனுக்குக் கட்டாயமில்லை. "ஏன் கூடாது என்று?" என்று திருப்பிக் கேட்டுவிடுவார். அப்படியே நாம் ஒருபோதும் தேவனுக்குக் கட்டளையிடமுடியாது. ஜெபிக்கலாம். மன்றாடலாம். அவ்வளவுதான். ஏசா 45:11. ஐத் தவறாக அர்த்தப்படுத்துகிறோம். "என் கரங்களின் கிரியைகளைக் குறித்து எனக்குக் கட்டளையிடுவீர்களோ?" என்பதுதான் சரியான மொழியாக்கம் முன்னும் பின்னுமுள்ள வசனங்களை வாசித்துப்பார்த்தால் இந்தக்கருத்து தெளிவாகும். தேவபிள்ளைகள் என்னும் உறவில் நமக்குரிய ஆசீர்வாதங்களை உரிமைப்பாராட்டிக் கேட்கலாம். ஆனால் அதுவும் கல்வாரிப் புண்ணியங்களின் அடிப்படையில்தான். "அற்புதம் உங்கள் வாயில்தானிருக்கிறது" என்று பிரசங்கிகள் மக்களைப் பார்த்துச் சொல்லக்கேட்டிருக்கிறேன். நான் இதை விசுவாசிப்பதில்லை. அற்புதம் தேவனது கையிலிருக்கிறது. அதைச் செய்வதும் செய்யாததும் அவரது விருப்பம். அவர் ஏகாதிபதி. விருப்பம்போல் மாற்றிக்கொள்ளப்படும் தத்துவங்களைக்குறித்துக் கவனம்!.

ஆசீர்வதிக்கிறவரைவிட ஆசீர்வாதத்தையேப்பற்றியே பேசும் உபதேசமும் சீரானதல்ல. ஆபிரகாமின் நகைப்பு ஈசாக்குதான். முதிர்வயதில் பிறந்த குழந்தையுடன் ஆபிரகாமும் சாராளும் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்திருப்பார்கள். இக்குமாரனையே பலியிட தேவன் பணித்தார். மகனை ஆபிரகாம் பலீபிடத்தில் கிடத்தியதுபோதுதான் பலியாட்டைக் கண்டான். இப்பொழுதும் ஆசீர்வாதமல்ல. ஆசீர்வதிக்கிறவரே அவனுக்கு முக்கியம்!.

இருபத்துநான்கு மூப்பருக்கு கீரிடம் அணிவித்தவர் தேவனே. ஆனால் தேவனொருவரே பாத்திரரானதால் அவர் பாதத்தில் கிரீடங்களைக் கழற்றி வைத்தனர். உண்மையான தீர்க்கதரிசயான யோவான் ஸ்நானகனின் கோட்பாடு "நான் சிறுகவும் அவர் பெருகவும் வேண்டும்" என்பதே உண்மையான போதனையாகிய பவுலின் கோட்பாடு "நான் தினமும் சாகிறேன்" என்பதே புரிகிறதா?.


6. இவ்வுபதேசம் என்னைத் தீவிர நற்செய்திப் பணிக்குள் நடத்துகிறதா... அல்லது சோம்பேறியாய் உட்காரச் செய்கிறதா?

அப்போஸ்தலன் தீர்க்கதரிசி, சுவிசேஷகன், மேய்ப்பன், போதகன் ஆகிய எந்த ஊழியனானாலும் அவனது பணி "சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காக" தேவ மக்களை ஆயத்தப்படுத்துவதேயாகும் (எபே 3:12,13). ஊழியமில்லா உபதேசம் கனியில்லா மரம், உபதேசமில்லா ஊழியம் வேரில்லா மரம் என்றார் டால்பட் சேம்பர்ஸ். பாவிகளை இரட்சிக்கவே கிறிஸ்து உலகிற்கு வந்தார். பாவிகளைச் சந்திக்க பரிசுத்தவான்களை இயக்கவே ஆவியானவர் வந்தார். தேவனது நிகழ்ச்சி நிரலில் இன்று முக்கியமானது உலகு நற்செய்தி மயமாக்கப்படுவதே. அப்பொழுது முடிவு வரும். வேதத்தின் இறுதி அழைப்பும் நற்செய்திப் பணியின் அழைப்பே "வாருங்கள், பருகுங்கள்". (வெளி 22:17). நேராகவோ மறைமுகவாகவோ நற்செய்திப் பணியைத் தாக்கும் பிரசங்கிகள், போதகர்களைக்குறித்து எச்சரிக்கை!. ஆத்துமாதாய அக்கினியை அணைத்துப்போட பொதுவாக இரு உபதேசங்கள் திரித்துக் கையாளப்படுகின்றன. ஒன்று முன்குறித்தல்(Predestination) எனும் உபதேசம். அடுத்தது, பூரணமாகுதல் (Perfaction) எனும் உபதேசம். யாரெல்லாம் இரட்சிக்கப்படுவாரென தேவனுக்கு தெரியும் எப்படியாவது அவர்களை அவர் இரட்சித்து விடுவார். நாம் அதில் ஒன்றும் செய்வதற்கில்லை என்பது முதல் விவாதம். ஆனால் "எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட... தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார்.. என்றும் 'எல்லா மனிதருக்காகவும் நாம் விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும், ஸ்தோத்திரங்களையும் ஏறெடுக்க வேண்டுமென்றும் நாம் போதிக்கப்பட்டிருக்கிறோம்" (1தீமோ 2:1-4). "காலையில் விதைக்கவேண்டும். மாலையில் தளரக்கூடாது. ஏழு பேருக்கும் எட்டு பேருக்கும் பங்கிட்டுக்கொடுக்கவேண்டும். எது வாய்க்குமென்று நாமறியோமே" (பிர 11:1-9).

பூரண உபதேசவாதிகள் இவ்விதம் விவாதிப்பார்கள். "நீயே பூரணமாகாதிருக்கையில் பிறருக்குப் பிரசங்கிக்கச் செல்லுவாவேன்?" ஆனால் இவ்வுலகிலிருக்கையில் ஒருவரும் பூரணப்படுவதில்லை என்பதுதான் உண்மை. நடைமுறை வாழ்வை அழுத்திக்கூறும் அப்போஸ்தலன் யாக்கோபு கூறியுள்ளதைக் கேளுங்கள். "நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்" (யாக் 3:2). "உலகமெங்கும் பரவிச் சென்ற சீடர்களில் பூரணர் ஒருவருமில்லை" மேலை நாடுகளிலிருந்து இந்தியா வந்த ஒரு மிஷனரியும் பூரணரல்ல. அவர்கள் நாடுகளிலிருந்த பூரண உபதேசவாதிகளுக்கு செவிமடுக்காமல் இந்தியாவுக்கு வந்த மிஷனரிகளுக்காகத் தேவனைத் துதிக்கிறேன். மற்றபடி எனது பூட்டனார் விக்கிரங்களை விட்டுத் திரும்பியிருக்கமாட்டார். நான் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறக்கும் சிலாக்கியம் பெற்றிருக்கமாட்டேன். "வேறே ஆடுகள்" மற்ற பட்டணங்கள். இதுவே இயேசுவின் இதயக்கதறலாயிருந்தது. கிறிஸ்துவின் இச்சிந்தையைத் தரித்து, பிற உபதேசங்களைத் தவிர்ப்போம். நற்செய்திப்பணியை ஊக்குவிக்காத எந்த உபதேசமும் வேண்டாம். வேண்டவே வேண்டாம்.


7. இவ்வுபதேசம் அல்லது ஊழியம் ஆவிக்குரிய ஒருமனப்பாட்டுக்குள் நடந்துகிறதா அல்லது பிரிவினை உண்டாக்குகிறதா?

சபையிலுள்ள அனைத்து ஊழியங்களின் நோக்கமும், விசுவாசிகளை "ஆவியின் ஒருமைக்குள் காத்து" "அறிவின் ஒருமைக்குள் வழிநடத்துவதே" (எபே 4:3-11). "நான் இவர்களுக்காக வேண்டிக் கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும், .. அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்க.. வேண்டிக்கொள்கிறேன்" என்றார் இயேசு. (யோவா 17:20-21). பிரிவினைகளெல்லாம் பொதுவாக நபர்களைச் சுற்றித்தான் "பவுலைச் சேர்ந்தவன்.... அப்பொல்லோவைச் சேர்ந்தவன்.. கேபாவைச் சேர்ந்தவன்.." இது தவிர்த்து நான்காவது குழு ஒன்றுமுண்டு. கிறிஸ்துவைச் சேர்ந்தவன் சபைப்பிரிவு பாகுபாடற்றவன்? சபைக்குப் பெயர் வைத்தது தேவன். பெயர் பிரித்தது மனிதன் (What God nominated, man denominated) பிரிவினை பாவம்!. சபைப்பிரிவு பாகுபாடுகளை முழுக்க முழுக்க எதிர்த்துப்பேசிவிட்டு முடிவில் பல சபைகளில் திருப்தியில்லாது வெளிவந்தோரையெல்லாம் சேர்த்து இன்னொரு சபைப்பிரிவு உண்டாக்கும் பிரசங்கிகள் பலருண்டு. இதற்கு முடிவேயில்லை. ஒரு சில உபதேச வலியுறுத்தல்களினாலும் பிரிவினைகள் உண்டாகின்றன. தேவனது "முழு" ஆலோசனையில் ஒரு சில "பகுதிகள்" மட்டும் அளவுக்குமீறி அழுத்தப்பட்டு மற்றவை விட்டுவிடப்படுகின்றன. இது ஒரத்திற்கும் பிரிவினைக்கும்தான் வழி நடத்தும். சமநிலை இழக்கப்படுகின்றது. "தேவனைக் கண்டு பிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு: மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திப் பண்ணுவாய்?" (நீதி 25:16). நல்லதோர் அறிவுரையல்லவா?. பிரிவினைகளுக்கு வழிவகுத்த ஒருபுறச்சாய்வுக்கான எடுத்துக்காட்டுகள் சபைச் சரித்திரத்தில் ஏராளம்.

எப்பொழுது பார்த்தாலும் ஞானஸ்நானம் ஞானஸ்நானம் என்று பேசிக்கொண்டிருந்தால் பாப்திஸ்து சபை! சபையில் பெண்கள் பேசுவதையே எப்பொழுது பார்த்தாலும் எதிர்த்துக்கொண்டிருந்தால் பிரதரன் சபை! எப்பொழுதும் பாஷை பாஷை என்றால் பெந்தேகோஸ்தே சபை! ஓய்வுநாள் ஓய்வுநாள் என்றதால் ஓய்வுக்காரர் சபை! இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஐந்து குருடர் ஒரு யானையைத் தடவிப்பார்த்து அது என்ன என்று சொல்லத்தொடங்கினார்களாம். ஒருவன் அது சுவர் என்றானாம். அடுத்தவன் அது கயிறு என்றானாம்.. மன்னிக்கவும். உங்களுக்குத்தான் கதை தெரியுமே! மறந்துவிட வேண்டாம்!. அவனால் முடியும். தாய் உறங்கும்போது அவனால் உறங்கவோ, சலனமின்றி இருக்கவோமுடியும். ஒரு ஸ்டெதெஸ்கோப் வழியாக தாயின் வயிற்றை சோதித்தால் குழந்தையின் இதயத்துடிப்பை நன்றாய் கேட்கமுடியும்.

பதினெட்டுக்கும் இருபத்து நான்குக்குமிடையேயுள்ள நாட்களில் குழந்தையினுடைய இருதயத்திலிருந்து உடலின் இதரப்பாகங்களுக்கு இரத்த ஓட்டத்திற்கான ஆரம்பநிலை உருவாகி விடுகிறது என்று ECG பரிசோதனை வாயிலாக அறியலாம். குழந்தை உருவாகிய பதினெட்டாம் நாள் முதல் அதன் இதயம் துடிக்கத் தொடங்குகிறது.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM