அறிவிப்புகள்

எச்சரிக்கை - கவனிக்கவும்

என் ஜாமக்காரன் (E-Mail) இ-மெயிலை சிலர் தவறான முறையில் கையாண்டு வருவதாக செய்திகள் வந்தன. ஆகவே என் E-Mail HACK செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கிறேன்.

நீங்கள் இ-மெயிலில் செய்திகளை அல்லது கடிதத்தை எனக்கு அனுப்பினால் அதற்கு மட்டுமே நான் இ-மெயில் வழியாக பதில் அனுப்புகிறேன். நான் Forwarded Messages இதுவரைக்கும் யாருக்கும் அனுப்பியதில்லை.

எனக்கு FACE BOOKல் ACCOUNT எதுவும் இல்லை.

நான் FACE BOOK ஆரம்பிக்கும் எண்ணமும் இல்லை,

FACE BOOKல் ஜாமக்காரன் பெயரில் எது வந்தாலும் யாரும் அதை நம்பவேண்டாம்.

என் பெயரிலோ, ஜாமக்காரன் பெயரிலோ ஏதாவது தவறான தகவல் வந்தால் உடனே அதன் விவரம் எனக்கு அனுப்பி தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயம் மிக முக்கியமானதாகும். ஆகவே ஜாமக்காரன் வாசகர்கள் இதற்காக ஜெபிக்கவும்.

பிசாசு கம்பியூட்டர் - இன்டர்நெட் - இ-மெயில் - பேஸ்புக் மூலமாக இந்த கடைசி காலத்தில் கிறிஸ்தவ மக்களையும், ஊழியக்காரரையும் வஞ்சித்துக்கொண்டிருக்கிறான். எனவே கிறிஸ்தவ விசுவாசிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

- ஜாமக்காரன்


கோவை முன்னாள் பிஷப்.துரை
அவரது சகோதரரின் ரூ. கோடி சொத்து பறிமுதல்

தினத்தந்தி 26-2-2013 சேலம் பதிப்பு:
சென்னை பிப்.28 - கோவை C.S.I. டயோசீஸ்க்கு சொந்தமான ரூ 7 கோடியே 93 லட்சம் பணத்தை மோசடி செய்ததாக முன்னாள் பிஷப்.மாணிக்கம் துரை, அவரது சகோதரர் எம்.மூர்த்தி ஆகியோருக்கு எதிராக கோவை சி.பி.சி.ஐ.டி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். அதன் பேரில் இந்த விவகாரத்தில் கூடுதல் விசாரணைக்காக அமலாக்கப்பிரிவு இயக்கம் சார்பில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில், பிஷப்.மாணிக்கம் துரை மோசடி செய்த பணத்தில் சேலம் மாவட்டம் செட்டிசாவடி கிராமம் கே.எம்.ஆர்.நகரில் பிஷப்.துரை தனது மனைவி.சூடாமணிதுரை பெயரில் 11,405 சதுர அடியுள்ள சொத்தை வாங்கி முதலீடு செய்திருந்தது தெரியவந்தது.

இதேபோல், பிஷப்பின் சகோதரர் எம்.மூர்த்தி மோசடி செய்த பணத்தில் ஈரோடு மாவட்டம் அந்தியூர்-பவானி மெயின்ரோட்டில் ரெட்டைகரடு கிராமத்தில் 6.11 ஏக்கர் நிலம் வாங்கி இருந்ததும், அந்த இடத்தில் 10 ஆயிரம் சதுரஅடி அளவுள்ள கட்டிடம் கட்டி இருந்ததும், கரூர்-ஈரோடு மெயின்ரோட்டில் நஞ்சய் ஊத்துக்குளி கிராமத்தில் ஏக்கர் நிலம் வாங்கியதும், அதில் 10 ஆயிரம் சதுரஅடியில் கட்டிடம் கட்டியதும் பின்னர் 2 ஏக்கர் நிலத்தை பி.ராஜா என்பவருக்கு விற்பனை செய்ததும் சிபிசிஐடி போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கண்ட சொத்துக்களை பிஷப்.மாணிக்கம் துரையும், அரவது சகோதரர் எம்.மூர்த்தியும் டயோசீஸ் பணத்தை எடுத்து மோசடி செய்து மேற்படி சொத்துக்களை வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. பணமோசடி நடந்திருப்பதால் அமலாக்கப்பிரிவு இணை இயக்குனர் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மேற்கூறப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு ஏறத்தாழ ரூ. கோடி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


செக்ஸ் புகார்: கோயமுத்தூர் டையோசிஸ் ஆயர் கைது

கோவை மார்ச் 17 - பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த CSI கிறிஸ்தவ ஆயரை(கோயமுத்தூர்) சிங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர். கோவை திருச்சிசாலையில் உள்ள ஒண்டிப்புதூர் பகுதியில் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த ஜான்மார்க் (63) என்பவர் ஆயராக பணியாற்றி வருகிறார்.

இந்த ஆலயத்தில் உள்ள பெண்கள் ஐக்கிய சங்கத்தின் தலைவராக Rev.ஜான்மார்க்கின் மனைவி சசிகலா உள்ளார். ஞாயிற்றுக்கிழமை தோறும் சசிகலா தலைமையில் பெண்கள் ஐக்கிய சங்கத்தை சேர்ந்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவர். அப்போது Rev.ஜான்மார்க் அந்த பிரார்த்தனையில் ஈடுபடும் பெண்களிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இது குறித்து அந்த பெண்கள் கேட்டபோது, இந்த ஆலயத்தில் நான் உயரதிகாரி, நான் சொல்வதைதான் நீங்கள் கேட்கவேண்டும். இல்லையேல், உங்களை கொன்றுவிடுவேன் என கொலைமிரட்டலும் விடுத்தார் என்று கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கடந்த வாரம் 2013 மார்ச் 15ம் தேதி கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம், பாலியல் தொல்லை கொடுக்கும் சி.எஸ்.ஐ. ஆயர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். இந்த புகார் மனுக்குறித்து விசாரிக்க சிங்காநல்லூர் போலீசருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

கிறிஸ்தவ ஆலயத்துக்கு பிரார்த்தனைக்கு வரும் பெண்கள் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசர் 509 (பெண் வன்கொடுமை), 506 (1) (கைளால் கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து ஜான்மார்க்கை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் ஜான்மார்க், கோபி, கோவை கணபதி ஆகிய பகுதிகளில் உள்ள சி.எஸ்.ஐ சபை தேவலாயங்களில் ஆயராக பணியாற்றியபோதும், அங்குள்ள பெண்களிடம் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் நடந்து அங்குள்ள பெண்கள் போலீஸ் ஸ்டேஷனில் பல புகார்களை ஆயரைப்பற்றி எழுதி கொடுத்த விவரம் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட Rev.ஜான்மார்க்கை போலீசார் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தினசரி செய்திதாள்: 17 தினகரன், தினமலர்.

(குறிப்பு: இந்த ஆயர் பலமுறை அகப்படாமல் தப்பி இப்போதுதான் கையும் களவுமாக பிடிப்பட்டார். ஆனால் இவரைப்போல பெண் விஷயத்தில் பாலியல் பாவம் செய்து கொண்டிருக்கும் இன்னும் சி.எஸ்.ஐ ஆயர்கள் பலர் அகப்படாமல் பைபிளை கையில் பிடித்துகொண்டு அங்கி அணிந்து வலம் வருகிறார்கள். இப்படிப்பட்ட மேய்ப்பர்கள் மூலமாக சபை பரிசுத்தம் அடைவது எப்படி? எங்கும் பரிசுத்தம் குலச்சல் காணப்படுகிறது. சி.எஸ்.ஐ சபை மக்கள் இந்த காரியத்திற்காக ஜெபிப்போம்).


திருத்தம்:

2013 பிப்ரவரி மாத ஜாமக்காரனில் என் கடந்து வந்த ஊழிய பாதைகளைக்குறித்து பக்கம் 4ல் என் ஊழிய ஆரம்பத்தில் சிறுபிள்ளைகள் மத்தியில் ஊழியம் தொடங்கியபோது சகோ.N.ஞானராஜா அவர்களுடன் இணைந்து ஊழியம் செய்தேன். Rev.விக்டர் ஞானராஜா (திருச்சி) என்பவரோடு அல்ல என்பதை திருத்தி வாசிக்கவும்.


இலங்கை தமிழர்களுக்காக இந்தியாவில் மாணவர்கள் போராட்டம்

தமிழ்நாட்டில் எத்தனையோ ஆண்டுகளுக்குபிறகு மாணவர்கள் போராட்டத்தில் அரசியல்வாதிகள் கலப்பில்லாமல் சுயமாக எழும்பியிருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் இந்த போராட்டத்தின் நோக்கம் இல்லாமல்போய்விட்டது. இலங்கை போர்குற்றங்களுக்காக இலங்கை அதிபர்.ராஜபக்சேயை போர் குற்றவாளி என்று அறிவித்து பொருளாதார தடைவிதித்து தண்டிக்க வேண்டும் என்பது போராட்டம் நடத்திய மாணவர்களின் வேண்டுகோள் ஆகும். ஆனால் இது சாத்தியமாகுமா? இங்கு இருந்துக்கொண்டு போராடுவதால் பலன் உண்டாகுமா என்ற கேள்வி எழும்பியிருந்தால் நம் மாணவர்கள் இத்தனைபேர் போலீஸ் தடியடியில் சிக்கி அவதிப்பட்டிருக்கமாட்டார்கள். இலங்கை தமிழ்மக்கள் படுகொலையின் போருக்கு துணையாயிருந்து உதவி செய்த நாடுகளில் நம் இந்தியாவும் ஒன்றாகும். அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளுக்கும் இந்த படுகொலை போருக்கு பங்குண்டே!. இவர்கள் எப்படி ராஜபக்சேயை விசாரித்து நீதி வழங்குவார்கள். ஆகவே இந்த போராட்டம் நிச்சயம் தோல்வியில்தான் முடியும் என்று உலக அரசியல் ஆலோசகர்கள் கூறினார்கள். இலங்கையில் வாழும் தமிழர்கள் காந்திய வழியில் இனி போராடினால்தான் உண்டு. ஆனால் எங்கே? எப்படி போராடுவார்கள்?. இலங்கையில் குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதியில் வாழும் தமிழர்கள் துப்பாக்கி தூக்கவோ, சத்தம்போட்டு பேசவோ பெலனின்றி, கால் இழந்து, கையிழந்து எந்த சுதந்திரமுமற்ற நிலையில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் பெரும்பாலான தமிழர்களெல்லாம் வெளிநாடுகளில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தூரத்திலிருந்து செய்தி கேட்டு கண்ணீர்விடத்தான் முடியும். இலங்கையில் வாழும் மற்ற தமிழர்கள் சர்வாதிகார தலைமையை எதிர்த்து வாய்திறந்தால் இப்போது கிடைக்கும் சாப்பாட்டையும், வாழ்க்கையையும் தொலைக்கநேரும். இலங்கை சூழ்நிலை இப்படியிருக்கிறது. இலங்கை முழுவதும் சிங்கள மயமாக்கவேண்டும் என்ற வெறியுடன் செயல்படும் அதிபர்.ராஜபக்சேயின் திட்டத்திலிருந்து அவர் ஒருகாலும் பின்வாங்கமாட்டார். அண்டை நாடான இந்தியா முயன்றால் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைக்கும். ஆனால் இந்தியாவால் எதுவும் செய்யமுடியாதபடி ராஜபக்சே சீனாவையும், பாகிஸ்தானையும் கையில் வைத்துக்கொண்டு மிரட்டிகொண்டிருக்கிறார். ஆகவே, இந்திய வெளிநாட்டு கொள்கையின்படி இங்கு மாணவர்கள் என்ன போராட்டம் நடத்தினாலும் இலங்கை தமிழர்களுக்கு இந்தியாவின் மத்திய அரசால் ஒன்றும் செய்யமுடியாது. இப்படியே என்றைக்கும் இலங்கை இருக்காது.

சாதுமிரண்டல் காடு கொள்ளாது என்ற பழிமொழிபடி இயற்கையாக ஒருநாள் இலங்கை தலைமையும், அரசும் மாறினால் அல்லது நம் தேவன் மனம்இறங்கி சிங்கமக்களிடமும்,புத்த பிக்குகளிடமும் ஒரு அன்பின் அசைவு மாற்றம் உண்டாக்கினால் இலங்கை தமிழர்களுக்கு விடிவுகாலம் உண்டாகும். இலங்கை தமிழர்களுக்காக தினமும் ஜெபிப்பது நமது கடமையாகும். வேறு வழியில்லை.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN