கோவை மார்ச்
17 - பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த
CSI கிறிஸ்தவ ஆயரை(கோயமுத்தூர்) சிங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர். கோவை திருச்சிசாலையில் உள்ள ஒண்டிப்புதூர் பகுதியில் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இங்கு ஒண்டிபுதூர் பகுதியை சேர்ந்த
ஜான்மார்க் (63) என்பவர் ஆயராக பணியாற்றி வருகிறார்.
இந்த ஆலயத்தில் உள்ள பெண்கள் ஐக்கிய சங்கத்தின் தலைவராக
Rev.ஜான்மார்க்கின் மனைவி சசிகலா உள்ளார். ஞாயிற்றுக்கிழமை தோறும் சசிகலா தலைமையில் பெண்கள் ஐக்கிய சங்கத்தை சேர்ந்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவர். அப்போது
Rev.ஜான்மார்க் அந்த பிரார்த்தனையில் ஈடுபடும் பெண்களிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.
இது குறித்து அந்த பெண்கள் கேட்டபோது, இந்த ஆலயத்தில் நான் உயரதிகாரி, நான் சொல்வதைதான் நீங்கள் கேட்கவேண்டும். இல்லையேல், உங்களை கொன்றுவிடுவேன் என கொலைமிரட்டலும் விடுத்தார் என்று கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கடந்த வாரம்
2013 மார்ச்
15ம் தேதி கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம், பாலியல் தொல்லை கொடுக்கும் சி.எஸ்.ஐ. ஆயர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர். இந்த புகார் மனுக்குறித்து விசாரிக்க சிங்காநல்லூர் போலீசருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.
கிறிஸ்தவ ஆலயத்துக்கு பிரார்த்தனைக்கு வரும் பெண்கள் அளித்த புகாரின் பேரில், சிங்காநல்லூர் போலீசர்
509 (பெண் வன்கொடுமை),
506 (1) (கைளால் கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து ஜான்மார்க்கை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் ஜான்மார்க், கோபி, கோவை கணபதி ஆகிய பகுதிகளில் உள்ள சி.எஸ்.ஐ சபை தேவலாயங்களில் ஆயராக பணியாற்றியபோதும், அங்குள்ள பெண்களிடம் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் நடந்து அங்குள்ள பெண்கள் போலீஸ் ஸ்டேஷனில் பல புகார்களை ஆயரைப்பற்றி எழுதி கொடுத்த விவரம் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட
Rev.ஜான்மார்க்கை போலீசார் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
தினசரி செய்திதாள்: 17 தினகரன், தினமலர்.
(குறிப்பு:
இந்த ஆயர் பலமுறை அகப்படாமல் தப்பி இப்போதுதான் கையும் களவுமாக பிடிப்பட்டார். ஆனால் இவரைப்போல பெண் விஷயத்தில் பாலியல் பாவம் செய்து கொண்டிருக்கும் இன்னும் சி.எஸ்.ஐ ஆயர்கள் பலர் அகப்படாமல் பைபிளை கையில் பிடித்துகொண்டு அங்கி அணிந்து வலம் வருகிறார்கள். இப்படிப்பட்ட மேய்ப்பர்கள் மூலமாக சபை பரிசுத்தம் அடைவது எப்படி? எங்கும் பரிசுத்தம் குலச்சல் காணப்படுகிறது. சி.எஸ்.ஐ சபை மக்கள் இந்த காரியத்திற்காக ஜெபிப்போம்).
|