CSI சபைகள்
கம்பெனியாக பதிவு செய்யப்பட்டதா?
சொசைட்டியாக பதிவு செய்யப்பட்டதா?
டிரஸ்ட்டாக பதிவு செய்யப்பட்டதா?

கம்பெனி சட்டத்தின்கீழ் CSIயின் அமைப்பு வருமானால் சபை மக்களின் பிரதிநிதிகள் முதலாளிகளாகிறார்கள். பிஷப் மற்றும் குருமார்கள் சபை மக்களின் ஊழியர்களாக மாறுகிறார்கள்! கம்பெனி என்றால் பிஷப்புக்கோ - குருவானவர்களுக்கோ ஆளுமை உரிமை இல்லை. அவர்களின் அதிகாரம் பிடுங்கப்படுகிறது. சமீபத்தில் அறிவித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு வித்தியாசமான விதத்தில் அமைந்துள்ளது. அதை வாசித்துப்பாருங்கள்.


ORDER (தமிழ் மொழிபெயர்ப்பு)

(இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 226வது ஷரத்தின் கீழ் மனுதாரரின் விண்ணப்பம் மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றத்தில் பேராணை மனு எண்: W.P.13895/10ஐ தாக்கல் செய்துள்ளார்கள். அதில் கம்பெனி பதிவாளரிடம் தான் கொடுத்த மனுமீது உரிய விசாரணை செய்து மனுவை முடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டி உள்ளார். அதன்படி இருபக்க வாதங்களையும் கேட்ட நீதியரசர் மனுதாரர், 1ம் எதிர்மனுதாரரான கம்பெனி பதிவாளரிடம் கொடுத்த மனுமீது இறுதி முடிவு எடுக்கவேண்டும். மேலும் எதாவது சந்தர்ப்பத்தில் இரண்டாம் எதிர் மனுதாரரான தென்னிந்திய திருச்சபையானது (CSI) கம்பெனி சட்டப்படி பதிவு செய்யப்பட்ட கம்பெனி அல்ல என்று முடிவு செய்யப்பட்டால் மனுதாரர் தாக்கல் செய்துள்ள மனுவை ஒன்றாம் எதிர் மனுதாரர் சட்டப்படியான அதற்கு உரிய மன்றத்தில் பரிகாரம் தேடுமாறு கூறி மனுவை அவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்ற வழிகாட்டுதலுடன் இப்பேராணை மனு முடிக்கப்பட்டுள்ளது).


(இதற்கு பதில் அளிக்க 3 மாதம் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே கால அவகாசத்தை நீட்டிக்க CSI மாடரேட்டர் அவர்கள் புறப்பட்டு போயிருக்கிறார். இந்த தீர்ப்பின் மூலம் பல மாற்றங்கள் CSIயில் உருவாகலாம். சபைமக்களின் அனுமதியில்லாமல் பிஷப்போ - மாடரேட்டரோ எந்த நிலத்தையும், கட்டிடத்தையும் விற்கவோ - வாங்கவோ முடியாது. நல்லதே நடக்கட்டும்).


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM