நிஷானி இந்த பெயரை இதுவரை நான் கேட்டதில்லை. இதற்கு முன்னும் நான் கேட்டதில்லை. கர்த்தர் அந்த பெயரை எனக்கு காட்டினார். உன் கண்பார்வை இப்போது சுகமாகிறது. கர்த்தர் சொல்கிறார், நீ சுகத்தோடு இந்த கூட்டத்தை விட்டுப்போகலாம். அப்படியே அவள் சுகம் பெற்றாள். இப்படி டிவியில் கூறியது அற்புத ஊழியர்.சகோ.ஜான்சாமுவேல் அவர்கள் ஆவார்.
இதே நாளில் வியாழன் அன்று
இமயம் TV,
ஆசீர்வாதம்
TV இவைகளில் பேசிய பல ஊழியர்கள் இஷ்டத்துக்கு ஜெபத்தில் பல பெயர்களை கூறினார்கள், பலரைப்பற்றி வெளிப்பாடு கூறுகிறார்கள்.
கர்த்தர் காட்டுகிறார், கர்த்தர் சொன்னார் என்று மளமளவென்று கொஞ்சம்கூட தெய்வபயமற்று, பரிசுத்த ஆவியானவர் பெயரில்தான் இவ்வளவு பெரிய
பொய்களை அள்ளி வீசி பயம் அல்லது கூச்சம் கொஞ்சம்கூட இல்லாமல் ஜனங்களை தன் பக்கம் இழுக்க இப்படி இவர்கள் பேசுகிறார்கள். இப்படி பொய் சொன்ன இவர்கள் தங்கள் மரணத்துக்குபின் உள்ள
நித்திய வாழ்க்கையைப்பற்றி அக்கறையற்றவர்கள், நரக ஆக்கினைப்பற்றி பயம் இல்லாதவர்கள், வாழ்கிறவரைக்கும் வாழுவோம், மரித்தபின் நமக்கு என்ன நேர்ந்தால் என்ன? என்ற
இருதய கடினத்துக்கு இவர்கள் போய்விட்டார்கள்.
அறிந்திருந்தும் தவறு செய்கிறவன் அநேக அடிகள் அடிக்கப்படுவான் என்று வேதம் போதிக்கிறது. ஆகவே வேதம் தன் எச்சரிப்பை இவர்களுக்கு தெரிவித்துவிட்டது. ஆகவே இவர்கள் தொடர்ந்து ஜெபத்தில் இப்படிப்பட்ட பொய்பேசட்டும் விட்டுவிடுங்கள், திருந்தமாட்டார்கள். நாம் என்ன செய்ய? இவர்களுக்காக ஜெபிக்கத்தான் செய்யலாம், ஆலோசனை கூறலாம்! எச்சரிக்கலாம்! மேலும் வேறு
என்ன செய்யமுடியும்?
ஆவியானவர் மனிதனோடு எப்போதும் போராடமாட்டார் என்று வேதம் கூறுகிறது. ஆனால் இந்த ஊழியர்களால் ஏமாற்றப்படும் மக்கள் வசனத்தை விட்டு விலக்கப்படுகிறார்களே! அவர்களை நினைத்துதான் பாரப்பட்டு இவர்கள் என்மேல் கோபப்பட்டாலும் பரவாயில்லை என்று திரும்பதிரும்ப சளைக்காமல் நான் இவைகளைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். என்றைக்காவது இந்த கள்ள ஊழியர்களை மக்கள் இனம் கண்டுக்கொள்ளமாட்டார்களா? விழிப்புணர்வு பெறமாட்டார்களா? இந்த ஆதங்கம் எனக்குள் அதிகமாகிறது. இதன் உண்மை விவரம் அறிந்தவர்கள் தயவுசெய்து இந்த மாதிரி ஜெபத்தில் பெயர் அழைக்கும் ஊழியம் செய்யும் இப்படிப்பட்ட எல்லா
மந்திரவாத ஊழியக்காரர்களின் பெயர்களையும் ஜெபத்தில் எழுதி வைத்து ஜெபியுங்கள்.
அதோடு மட்டுமல்லாமல் இப்படிப்பட்ட ஊழியர்களிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படியும், இப்படிப்பட்ட ஊழியர்களை கிறிஸ்தவ விசுவாசிகள்
ஊக்கப்படுத்தாதிருக்கவும் வாசகர்களாகிய நீங்கள் மற்றவர்களிடமும் இதை பகிர்ந்துக்கொள்ளுங்கள். |