கேள்வி - பதில்
ஜாமக்காரனின் பதில்கள்

கேள்வி:  இலங்கை பெந்தேகோஸ்தே சபை (TMP)யின் அதிகாரப் பத்திரிக்கையான பெந்தேகோஸ்தே பேரொலி என்ற மாத இதழில் டிசம்பர் 2010 மாத பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் எழுதப்பட்ட பிரசங்கத்தில் பரலோகத்தில் பிதாவின் மடியில் செல்லப்பிள்ளையாயிருந்து எப்பொழுதும் அவர் சமூகத்தில் களிகூர்ந்து கொண்டிருந்த தேவக்குமாரன் பூமிக்கு அனுப்பப்பட்டார் என்று எழுதியிருக்கிறார்களே! அப்படியானால் இயேசுகிறிஸ்து குழந்தையாக இருந்தாரா?

பதில்:  முன்பே ஜாமக்காரனில் எழுதினேனே! பெந்தேகோஸ்தே சபை CSI & லூத்தரன் சபையாக மாறிக்கொண்டு வருகிறது. அதனால் பெந்தேகோஸ்தே சபைகள் மனந்திரும்பவேண்டும் என்று பலமுறை எழுதினேனே! அது பிழை! இன்னும் ஒருபடி கீழாக பெந்தேகோஸ்தே சபைகள் குறிப்பாக TPM சபை, கத்தோலிக்க சபையாக கீழிறங்கி 10ம் வகுப்பிலிருந்து 1ம் வகுப்புக்கு பின்னோக்கி போய்க்கொண்டிருக்கிறது என்பதை இதன்மூலம் உறுதியாக்குகிறார்கள். நல்ல செய்தியில் இப்படி ஒரு கன்னி பேச்சு - இது இவர்களின் ஆழமான செய்தியில் அறியாமையும் கலக்கிறது என்று அர்த்தமாகிறது. யாரோ புதியவர்கள் அந்த செய்தியை எழுதியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். முதிர்ச்சியுற்றவர்கள் அப்படி எழுதமுடியாது.

இவர்களின் கருத்துப்படி பிதாவின் மடியில் இயேசுகிறிஸ்து குழந்தையாக விளையாடிக்கொண்டிருந்தது உண்மையானால், கத்தோலிக்க சபையினரின் குழந்தை இயேசு உபதேசமும் சரி என்றாகுமே! இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால் TMPன் பத்திரிக்கையில் இயேசு பிதாவின் மடியில் விளையாடுகிறார் - கத்தோலிக்க சபையின் இயேசு மரியாளின் கைகளில் விளையாடிக்கொண்டிருக்கிறார். அவ்வளவுதான். இவர்களின் குழந்தை இயேசுக்கள் நமக்கு எந்த விதத்தில் உதவி செய்யும் குழந்தை கைசூப்பி கொண்டிருக்குமேயல்லாது நமக்கு எந்த விதத்தில் உதவியாக இருக்கும். வானத்தையும், பூமியையும் ஆளும் சகல அதிகாரம் படைத்தவரை, நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரை இவர்கள் எப்படி குழந்தையாக்கி கொச்சைப்படுத்தி அறிவிக்க மனம் வந்தது. இதைத்தான் சிறுப்பிள்ளைத்தனம் என்பது.


CSI சபைகளிலும் குழந்தை இயேசுவின் தாலாட்டு பாட்டு:

நம் CSI, லூத்தரன் சபை கீர்த்தனை பாட்டு புத்தகத்தில் சில பாட்டுகள் இயேசு குழந்தையை தூங்க வைப்பது போல எழுதப்பட்டுள்ளது. பழைய கால கிறிஸ்தவ கவிஞர்கள் அனுபவித்து எழுதிய பாடலிலும் சில கவிகள் ஏற்கமுடியாததாக உள்ளன. அவை பெத்தலையில் பிறந்தவரை பாட்டின் கருத்துக்கள் யாவும் அர்த்தமுள்ளவைகள்தான். ஆனால் இடைசெருகலாக கவிஞர் எழுதாத வார்த்தைகள் சேர்க்கப்பட்டு ராகத்துக்காக பாடப்படுகின்றன. குளிரும் பனியும் தொட்டிலிலே... ஆராரோ தூங்கு பாலா இந்த வார்த்தையெல்லாம் நவீன சேர்ப்புகள். அப்படியே "ஏதுக்கழுகிறாய் நீ" இயேசு குழந்தையாக இருந்தபோது அழுதுகொண்டிருக்கும்போது அதை நேரில் பார்த்தவர்கள்போல் கற்பனை செய்து பாடப்பட்ட பாடலாகும். இது கிறிஸ்தவர்களிடம் பிரபல்யமாக ஆகிவிட்டது. இதன் வார்த்தை ஏதும் ஆவிக்குரியவர்கள் சிந்திக்க ஏற்றதல்ல். நல்ல ஆவிக்குரிய ஆழமான பாடல் எழுதும் FMPB (விஷ்வவாணி) சகோ.எமில் ஜெபசிங் அவர்கள்கூட ஒரே ஒருமுறை தாலாட்டு பாட்டு எழுதினார்.

ஆரீரோ! ஆரீரோ!! ஆரீரோ!!! தூங்கு பாலா,
     காணக்கூடாத என் தங்கமல்லோ
     காடுமேடு செல்ல அல்லோ, காணாத ஆட்டினை தேட அல்லோ!
     என் கர்த்தாதி கர்த்தனல்லோ, ஆரீரோ! தூங்கு பாலா......

இந்த பாட்டில் இயேசுகிறிஸ்து உலகத்துக்கு வந்த நோக்கத்தை பாடல் வரிகளில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஏன் இயேசுகிறிஸ்துவை தூங்கவேண்டும் என்றார் என்று எனக்கு புரியவில்லை. ஞாயிறு பள்ளிகளில் சிறு பிள்ளைகளுக்கு ராகத்துக்காகவும் சிறு உள்ளங்களுக்காகவும் இப்படிப்பட்ட பாடல்களை உபயோகிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். பொதுவாக நான் கூற விரும்புவது இயேசுகிறிஸ்துவை ஆராரோ ஆரீரோ பாடி தூங்கவைத்துவிடாதீர்கள். என்ன தாலாட்டினாலும் அவர் தூங்குவதுமில்லை,அவர் உறங்குவதுமில்லை. சங் 121:4.


கேள்வி:  இந்தியாவுக்கு சமீபத்தில் வருகை தந்த உலக பிராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ சபைகளின் தலைவர் ஆர்ச் பிஷப் (போப்புக்கு சமமானவர்) அவர் ஹோமோ செக்ஸ் மற்றும் லெஸ்பியன் ஆணோடு-ஆண், பெண்ணோடு-பெண் திருமணம் செய்துகொள்வதை நான் ஆதரிக்கிறேன் என்று வெளியரங்கமாகவே பேசியிருக்கிறாரே! அது இந்திய தினசரி பத்திரிக்கைகளில் வந்துள்ளதே?

பதில்:  அவர் நம்முடைய பிராட்டஸ்டன்ட்டு சபைகளுக்கு தலைவராக தெரிந்தெடுத்தார்களே, அந்த பிஷப்மார்களைத்தான் குற்றம் சொல்லவேண்டும். ஆர்ச் பிஷப் Dr.Rowan Williams அவர்கள் சோதோம் கொமாராவுக்கு பிஷப்பாக இருக்கவேண்டியவர் நமக்கு தலைவராக அமைந்துவிட்டார் என்ன செய்ய? இந்த பிழையான கொள்கைகளுக்காகத்தான் அவர் இந்தியா வருவதை நம் தமிழ்நாட்டிலும், இந்தியாவில் பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தார்கள். கருப்புகொடி காட்டி, துண்டுப்பிரதிகள் வெளியிட்டு தங்கள் எதிர்ப்பையும், வெறுப்பையும் வெளிப்படுத்தினார்கள். அவர்களை வாழ்த்துகிறேன். ஆனால் ஆர்ச் பிஷப் அவர்கள் ஆணோடு-ஆண் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்பதை ஆதரித்து நம் இந்திய ஆள் பேசினது இன்னும் வெறுப்பையளிக்கிறது. Dr.Mani Chacko, (Director of ECC), அவர்கள் ஆர்ச் பிஷப் அவர்கள் மிக பரந்த கொள்கையுடையவர், Liberal - சுதந்திர கிறிஸ்தவ கொள்கையுடையவர். ஆகவே அவர் ஹோமோ செக்ஸை (Homo-Sex) ஆதரித்து பேசியதில் தவறில்லை என்றார். என்ன செய்வது? இன்னும் எவ்வளவு சீக்கிரம் நம் இந்தியாவில் CSI & CNI சபைகளிலும் ஆணும்-ஆணும், பெண்ணும்-பெண்ணும் திருமணம் செய்வதையும் அதை நம் குருவானவர்களும், பிஷப்மார்களும் முன்னின்று நடத்தி வைத்து அவர்களை ஆசீர்வதிப்பதையும் நம் சந்ததியிலேயே பார்ப்போமோ! என்ற பயம் வர ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே ரிட்டயர்ட்டான தமிழ்நாட்டு பிஷப் ஒருவர் இந்த பாவத்தில் பிடிப்பட்டார். ஆகவே இந்த திருமணங்கள் நம் இந்தியாவில் நடக்கும் நாட்கள் வெகுதூரத்தில் இல்லை. இது வெட்கக்கேடு ஆகும். இந்த ஆர்ச் பிஷப் அவர்களின் இத்தகைய பாவக்கருத்தை ஆதரிக்கும் நம் பிஷப்மார்கள் எத்தனை பேர்களோ, அவர்களுக்கு வெட்கம், மானம், சூடு, சொரணை ஏதும் இனி இருக்காமல் போய்விடும்.


கேள்வி:  தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டிணம் CSI சபை உதவிகுருவானவர் ஆராதனை முடிவில் ஆசீர்வாதம் கூறும்போது தாய்-தந்தை-சுதன்-தூயஆவி என்று நான்கு பெயரால் ஆசீர்வாதம் கூறுகிறார். சபை மக்கள் அப்படி கூறி ஆசீர்வாதம் செய்யவேண்டாம் என்று எவ்வளவு கூறியும் அதை அவர் நிறுத்தவில்லை?. இதற்கு ஒரு ஆலோசனை கொடுங்கள்.

பதில்:  நீங்கள் எழுதியபடி மதுரை அரசரடி வேதாகம கல்லூரிக்குள் இருந்த ஒரு சிலரின் மூளையிலிருந்து வந்த குப்பைத்தான் அது. உங்கள் சபையின் தலைமை குருவானவரின் அனுமதியில்லாமல் இது வெளிவராது. இது பல வருடங்களுக்கு முன்பே இந்த தவறான உபதேசம் தமிழ்நாட்டில் தலைதூக்க தொடங்கியது. கடவுளை நாம் ஏன் தாயாக அழைக்கக்கூடாது? கடவுள் ஆணா - பெண்ணா? இந்த சர்ச்சை பலவருடங்களுக்கு முன்பே அரசரடியிலும், பெங்களுர் UTC வேதாகம கல்லூரியிலும் ஆயர் படிப்புக்காக படிக்கும் மாணவர்களுக்குள்ளே எழும்பியது. அதை ஒரு துண்டு பிரசுரமாகவே வெளியிட்டார்கள்.

  நான் கேரளா மாநிலத்தில் மணர்காடு என்ற ஊரில் பிரசங்கம் செய்யும்போது (அங்கு வாழும் பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்களாவர்) இஸ்லாமியர் என் முதல் பிரசங்கத்தை கேட்டு மறுநாள் சில கேள்விகளுடன் கூடிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து, துண்டுபிரதியில் நாங்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு டாக்டர் பதில் கூறிவிட்டு பிரசங்கிக்க சொல்லுங்கள் என்றார்கள். என் கைக்கு துண்டுபிரதி கிடைத்தது. அது மலையாளத்தில் எழுதப்பட்டதால் எனக்கு வாசிக்க தெரியவில்லை. அருகில் உள்ளவரிடம் வாசிக்க சொல்லி கேள்விகளை குறித்துக்கொண்டு அத்தனைக்கும் மேடையிலேயே பதில் கூறினேன். இஸ்லாமியர் என் கூட்டத்தில் பிரச்சனை உண்டாக்குவார்கள் என்று எதிர்ப்பார்த்தோ என்னவோ சில போலீஸ்காரர்கள் மைதானத்தில் ஓரங்களில் நின்றிருந்தார்கள். அவர்கள் கேட்ட கேள்விகளில், முதலாவதாக எழுதப்பட்டது கிறிஸ்தவர்களாகி (நஸ்ரானிகள்) நீங்கள் பிதா தன்னுடைய ஒரே மகனை பலியாக சாவதற்கு இந்த உலகத்தில் அனுப்பினார் என்கிறீர்கள் - பிதாவுக்கு மகன் இயேசுவானால் தாய் எங்கே? இது அவர்களின் முதல் கேள்வி?

  யோவான் 3:6ல் தன் ஒரே பேரானாகிய குமாரனை இவ்வுலகுக்கு அனுப்பி இவ்வளவாய் உலகத்தை அன்பு கூர்ந்தார் என்ற வசனத்திலும் தந்தை-மகன் என்ற உறவு எப்படி வந்தது? அந்த உறவு உண்மையானால் தாய் எங்கே? தாயில்லை என்றால், தாயில்லாமல் மகன் எப்படி வந்தார்? இப்படி பல கேள்விகள் கேட்டிருந்தார்கள். எல்லா கேள்விக்கும் பதில் கூறிவிட்டுத்தான் அன்றைய பிரசங்கம் செய்தேன். அதன்பிறகு நடந்த இரண்டு நாள் கூட்டத்திலும் முகமதியர் யாரும் கேள்விகளே கேட்காமல் அமைதியாக சாலையில் நின்று எந்த தொல்லையும் கொடுக்காமல் என் செய்தியை கவனித்தார்கள்.

இஸ்லாமியர் கேட்கும் கேள்வியும் சந்தேகமும் இன்று கிறிஸ்தவர்களுக்கும் உண்டு.
     பிதாவின் பாசத்தை- பிதா பெயரிலும்
     மகனின் உறவை - இயேசுவின் பெயரிலும் காட்டப்படுகிறது.

  பொதுவாக உறவினர் அல்லது நண்பர் ஒரு வீட்டில் தங்கினால் அந்த வீட்டாரின் பையனை அழைக்கும்போது மகனே எழுதுவதற்கு பேப்பர் கொண்டுவா? என்றார். பெண் பிள்ளையானால் மகளே குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொண்டுவா இப்படியெல்லாம் அழைப்பது மகன், மகள் என்ற அன்பின் உரிமை பாராட்டும் வார்த்தைதான் அது. அவர்கள் தான் பெற்ற பிள்ளை அல்லாதிருந்தாலும் மகள் அல்லாதிருந்தாலும் தான் பெற்ற மகனுக்கு கொடுக்கும் மகளுக்கு கொடுக்கும் அன்பை அல்லது மகன்முறை அந்தஸ்தை நாம் அங்கு மாற்றார் பிள்ளைகளுக்கு கொடுக்கிறோம். அதுபோலவே பெற்ற தகப்பன் ஒருவன் தன் ஒரே பிள்ளையை (ஒரே பேரான குமாரனை) சாவதற்க்கென்று திட்டமிட்டு அனுப்ப (எந்த தகப்பனுக்காவது) மனம் வருமா? ஆனால் என் மக்களை பாவத்திலிருந்து கழுவி எடுக்க இது அல்லாது வேறு வழியில்லை என்று கண்ட கர்த்தர் தகப்பன்-மகன் பாசத்தின் மூலமாகதான் உலகை எத்தனையாய் நேசிக்கிறார் என்ற உண்மையை உணர்த்த கர்த்தரால் உபயோகிக்கப்பட்ட வார்த்தைதான் ஏக சுதன், ஏக மகன், ஒரே பேரானாகிய குமாரன், பிதா (அப்பா) என்ற வார்த்தையெல்லாம் உபயோகிக்கப்படுகிறது. மற்றப்படி பிதாவுக்கு மனைவியுமில்லை - மகனுமில்லை. தாயுமில்லை, தகப்பனுமில்லை! ஆதியும் அந்தமும் அவரே - அல்பேவாவும், ஓமேகாவும் அவரே! என்பதை நாம் அறியவேண்டும். ஆனால் அதேசமயம் கடவுளை தாயாகவும், மூத்த அண்ணனாகவும், தந்தையாகவும் நினைத்து உரிமை அல்லது உறவு கொண்டாடலாம்.

  நம் கீர்த்தனை பாடலில் சத்தாய் நிஷ்களமாய் என்ற முதல் கீர்த்தனையிலேயே அம்மா! உன்னையல்லால் எனக்கார்துணை, யாருறவே! என்று கிறிஸ்தவ கவிஞர் மனமுருக பாடினார். சூழ்நிலையில் சந்தர்ப்பத்தில் உணர்ச்சி பொங்க ஏசு அப்பா என்றும் அம்மா என்றும் பாச உறவோடு, நம்பிக்கையோடு அப்படி உருவகப்படுத்தி நம் தனிப்பட்ட ஜெபத்தில் (பொது இடத்தில் கூடாது) (ஆராதனையிலும் கூடாது) அழைத்துக்கொள்ளலாம்.

  சமீபத்தில் வந்த ஒரு பாடலில் "உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை.. உம்மை அப்பானு கூப்பிடவா? உம்மை அம்மான்னு கூப்பிடத்தான் ஆசை ... உம்மை அம்மானு கூப்பிடுவேன்? உம்மை அப்பானு கூப்பிடுவேன்" என்ற பாட்டில் அடுத்த வரிகள் அப்படி உரிமை கொள்வதின் காரணத்தை அருமையாக பாடல் வடிவில் அமைத்துள்ளார். என்னை தாயைப்போல சுமந்ததை பார்த்தால், கருவில் என்னை சுமந்து காப்பாற்றியதை பார்த்தால், ஏந்தி என்னை வழி நடத்தியதையெல்லாம் உணர்ந்தால், உம்மை அம்மானும், அப்பானும் கூப்பிடலாம் என்கிறார். ஆக இப்படி பாச உணர்வுகளில் கடவுளை மனதில் உணர்ந்து பாட்டால் புகழ்ந்து பாடலாம். அது கவிஞர்களின் உருவக நயம். ஆனால் அதை உபதேசம் ஆக்கிவிடகூடாது. அதை சபையில் அல்லது அவிசுவாசிகள் மத்தியில் பாடிவிடக்கூடாது! பேசக்கூடாது. காரணம் அவர்களுக்கும் முகமதியர்களுக்கும் வந்த சந்தேகம் போலவே, நம் தேவனைக்குறித்து சந்தேகம் கிறிஸ்தவர்களுக்கே எழுப்பி குழம்பிவிடுவார்கள். ஒருவேளை அப்படிப்பாட நேர்ந்தால் அதற்கான விளக்கம் கூறவேண்டும்.

  ஆனால் உங்கள் நாகப்பட்டினம் CSI ஆயர் மிகவும் மோசம். வேத புத்தகத்தில் குறிப்பிட்ட தெய்வத்தன்மையை திரியோகம் என்பதை மாற்றி தெய்வத்தை நான்கு பேராக துண்டு துண்டாக்கி அறிவித்தது தெய்வ தூஷணமாகும். உங்கள் சபை கமிட்டியில் நம்பிக்கையில்லா தீர்மானம் போட்டு அவரை நீக்குங்கள். இது கிறிஸ்தவ அடிப்படை உபதேசத்துக்கே மிக கேடு உண்டாக்கும். இது மற்ற சபைக்கும் பரவினால் ஆபத்து. ஆரம்பத்திலேயே அதை நிறுத்துங்கள்.

  தாய் தான் பெற்றப்பிள்ளையை மறப்பாளோ! அப்படி மறந்தாலும் நான் உங்களை மறக்க மாட்டேன் என்று கூறிய நம் ஆண்டவர், பிள்ளையை மறக்கும் தாயாக அல்லது வேறு எந்தவித தாய் ஸ்தானத்திலும் தன்னை அழைக்க விரும்பமாட்டார்.

  பழைய ஏற்பாட்டில் பிதாவுக்கு அர்த்தமுள்ள பல நாமங்கள் உண்டு. அதில் எங்கேயும் தாய் அல்லது பெண்ணாக கர்த்தரை சித்தரிக்கவில்லை - நீங்கள் கூறிய இந்த சம்பவம் உண்மையாக இருந்தால் நாகப்பட்டினம் சபை மக்கள் சீக்கிரம் நடவடிக்கை எடுங்கள்.

  நீங்கள் புறப்பட்டுபோய் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுங்கள் என்று இயேசு கற்பித்தார். உங்கள் ஆயர் இந்த முக்கிய உபதேசத்துக்கு எதிரியாகும்.

அதையே பவுல் நிருபத்தின் கடைசி வரியாக கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையும் பிதாவாகிய தேவனின் அன்பும், பரிசுத்தாவியினுடைய ஐக்கியமும் உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக ஆமென். 2 கொரி 13:14 என்று ஆசீர்வாதம் கூறி முடிக்கிறார். இதை ஆதாரமாக வைத்துதான் எல்லாவித கிறிஸ்தவ சபைகளும் இதே ஆசீர்வாதத்தை சபைமுடிவில் அறிவிக்கிறார்கள். அந்த அறிவிப்பு நிச்சயம் நமக்கு ஆசீர்வாதமாகவே அமையும். அதனால்தான் சபையில் ஒரு சிலர் பிரசங்கம் முடிவில் ஆசீர்வாதத்துக்கு தலையை காட்டிவிட்டுபோகும் தவறான கொள்கை உடையவராகவும் இருக்கிறார்கள். அப்பப்பா! என்னென்ன புது உபதேசங்கள் பிசாசு சபையில் கொண்டுவருகிறான்! உடனே இதை நிறுத்த சபை நடவடிக்கை எடுங்கள்.


கேள்வி:  நான் 27.12.2010 நெல்லை சங்கர் நகர் CSI ஆலயத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். திருமண ஆராதனையில் காணிக்கை எடுத்தார்கள். எனக்கு மனம் வேதனைப்பட்டது. அநேக இந்து மக்கள் புறமதஸ்தர்கள் திரண்டு வந்த அந்த திருமண ஆராதனையில்கூட அவர்கள் காணிக்கை எடுத்தது நெல்லை திருமண்டலத்தில் மற்ற எந்த இடத்திலும் நான் கண்டதில்லை? பொறுக்கமுடியாமல் நான் சபை பொறுப்பாளரை அந்த காணிக்கையைக்குறித்து விசாரித்தேன். அதற்கு அவர் எங்கள் பிஷப் கல்யாண ஆராதனைகளிலும் காணிக்கை எடுக்கும்படி ஆர்டர் போட்டுருக்கிறார் என்றார். இது நம் CSI சட்டத்துக்கு உகந்ததா?

பதில்:  ஐயா, நானும் இப்படிப்பட்ட சம்பவத்தை முதல்முறையாக கேள்விபடுகிறேன். நம் பிஷப் ஐயா திருமணத்தில் காணிக்கை எடுக்கும்படி நிச்சயமாக கட்டளையிட்டு இருக்கமாட்டார் என்று திட்டமாக நம்புகிறேன்.

  வட இந்தியா - தென் இந்தியா CSI - CNI சபைகளில் ஆயிரக்கணக்கான ஆராதனையிலும் கன்வென்ஷனிலும் நான் பிரசங்கம் பண்ணியிருக்கிறேன். ஆனால் திருமண ஆராதனையில் காணிக்கை வாங்குவதை நான் எங்கும் கேள்விப்படவில்லை.

  மணமகன் அல்லது மணமகள் குடும்பத்தினரிடம் ஆலய பராமரிப்பு செலவு, மின்சார செலவுக்காக ஒரு தொகையை ஆரம்பத்திலேயோ முடிவிலோ வாங்கி விடுகிறார்கள். திருமண ஏற்பாட்டிற்கென தனி தொகையும் வாங்கி ரசீதும் கொடுத்துவிடுகின்றனர். திருமண ஆராதனையில் பெண்-மாப்பிள்ளையிடம் தட்டை நீட்டி அல்லது வேதபுத்தகத்தை திறந்து அதில் காணிக்கை வாங்கிக்கொள்கிறார்கள். அப்படியிருக்க பொதுமக்கள் கலந்துகொள்ளும், பல மதத்தினர் கலந்துக்கொள்ளும் திருமண நிகழ்ச்சிக்கு காணிக்கை வாங்குவது நாகரீகம் அல்ல. சிலர் புறமதத்தினர் எதற்கு எங்களிடம் காணிக்கை வாங்குகிறீர்கள் என்று வாய்திறந்து கேட்டுவிட்டால் நம் மானமே போய்விடும். கல்யாணத்துக்கு மொய் கேட்டு வாங்கும் சில கிராம மக்கள் போல் இவர்கள் காணிக்கைக்கு அலைகிறார்களே என்று நினைக்கமாட்டார்கள்? சில இடத்தில் குருவானவர் சம்மதம் இல்லாமல் பணத்தில் வெறியாய் இருக்கும் சபை பொறுப்பாளர்களின் பிழையான சாட்சியில்லாத செயலாக இது இருக்கும். இதைக்குறித்து நம் நெல்லை பிஷப் ஐயா அவர்களுக்கு தனியாக கடிதம் எழுதியிருப்பேன். ஆனால் மற்ற CSI சபை குருவானவர்களும், சபை பொறுப்பாளர்களும் இந்த சம்பவத்தைக்குறித்து அறியவேண்டி உங்கள் கேள்விக்கான பதிலை ஜாமக்காரனில் வெளியிடுகிறேன். இப்படிப்பட்டவர்கள் திருமண ஆராதனை முடிந்து Parish Hallலில் கூட காணிக்கை எடுத்தால் ஆச்சரியம் இல்லை. இப்படி காணிக்கை எடுப்பது சபையில் மொய் வாங்கும் பரம்பரை புறமதஸ்தர் பழக்கத்துக்கு சமம். ஆக திருமண ஆராதனையில் காணிக்கை எடுப்பது நாகரீகமற்ற செயல் என்பதுதான் என் பதிலாகும்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN