CSI டையோசிஸின் சரித்திரத்தில் கேட்டிராத வேதனையுள்ள செய்தி

CSI சினாட் பொது செயலர் திரு.பிலிப் அவர்கள் தாக்கப்பட்டார்.

CSI உருவாகியது 1947ம் ஆண்டு ஆகும். மொத்தம் 22 திருமண்டலங்கள் இணைந்து, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு,(இலங்கை) ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து CSI சபைகள் அடங்கிய டையோசிஸ்ஸின் தலைமை ஸ்தாபனம் CSI சினாட் என்று அழைக்கப்படுகிறது.

கடந்த 66 ஆண்டு கால வரலாற்றில் நடந்திராத அவமானகரமான சம்பவம் கடந்த 2013 பிப்ரவரி மாதம் CSI சினாட் கமிட்டியில் நடந்தது.

தமிழ்நாடு தூத்துக்குடி - நாசரேத் டையோசிஸ்ஸின் பிஷப்.Rt.Rev.Dr.ஜெபசந்திரன் அவர்கள் மேல் ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்பியது. ஆனால் சினாட் வழக்கம் போல் நடவடிக்கையை எடுக்காமல் குற்றசாட்டுகளை ஊறப்போட்டது. அதன்பிறகு அவர் மேல் குற்றச்சாட்டுகள் மிக அதிகமாகவே CSI சினாட் செயற்குழு பிஷப்மீது நடவடிக்கை எடுத்தது.

CSI சினாட் செயற்குழு கூட்டத்தில் தர்ணா செய்த
பிஷப்.ஜெபசந்திரன் தரையில் அமர்ந்துள்ளார்.

பிஷப்.ஜெபசந்திரன் அவர்களை பிஷப் பொறுப்பிலிருந்து நீக்கி அவரை சஸ்பெண்ட் செய்கிறது என்ற சினாட் நிர்வாக கமிட்டி எடுத்த தீர்மானத்தை மாடரேட்டர்.தேவகடாட்சம் அவர்கள் முன்னிலையிலும மற்றும் சினாட் கூட்டத்தில் கலந்துக்கொண்ட நான்கு பாஷைகள் பேசும் நான்கு மாநில பிஷப்மார்கள், மெம்பர்கள் கூடிய அக்கூட்டத்தில் CSI சினாட் செயலர் திரு.பிலிப் அவர்கள் சஸ்பெண்ட் அறிக்கையை வாசித்தார். உடனே தூத்துக்குடி பிஷப்.ஜெபசந்திரன் அவர்கள் பிலிப் அவர்களின் சட்டையைப்பிடித்து இழுத்து அவரை தாக்கி, அறிக்கையை படிக்கவிடாமல் தடுத்ததோடு மட்டுமல்லாமல் MLA, MP அரசியல்வாதிகள் கூட்டத்தில் வழக்கமாக நடப்பதைப்போல் மைக்கை பிடித்து எடுத்து எறிந்தார். இந்த சண்டையில் தூத்துக்குடி பிஷப்புக்கு உதவியாக சினாட் செயற்குழு உறுப்பினர் கோயமுத்தூர் டையோசிஸ்ஸை சேர்ந்த திரு.அமிர்தம் அவர்களும் பிஷப் அவர்களுக்கு உதவியாக பிஷப்புடன் சேர்ந்து திரு.பிலிப்பை தாக்கி அவை நாகரீகம் இல்லாமல் கெட்ட வார்த்தைகளை உபயோகித்து ஏசினார். இவைகள் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி பிஷப்புடன் சேர்ந்து பிலிப் அவர்களை தாக்கி கெட்ட வார்த்தைகளை பேசியதாக கூறப்பட்ட சகோ.அமிர்தம் அவர்கள் உடனே அங்கேயே தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால் சினாட் அவருக்கு உடனே மன்னிப்பு கொடுத்தாக அறிவித்தது. ஆனால் பிஷப்.ஜெபசந்திரன் அவர்கள் மன்னிப்பு கேட்கவில்லை. எழுத்து மூலமாகவும் மன்னிப்பு கேட்க ஆலோசனை அளிக்கப்பட்டது. அதற்கும் அவர் செவிசாய்க்கவில்லை. ஆகவே அவர் பிஷப் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்று ஏகமானதாக தீர்மானம் எடுக்கப்பட்டதாக சினாட்டில் அறிவிக்கப்பட்டது. பிஷப்.ஜெபசந்திரன் அவர்கள் சண்டைப்போட்டு கெட்ட வார்த்தைகளை உபயோகித்தது (சினாடில்) இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் மற்ற மாநில பிஷப்மார்கள் முன்னிலையில் நடந்ததால் தமிழ்நாட்டு CSI சபைகளுக்கு பெரும் தலைக்குனிவை உண்டாக்கிவிட்டது.


CSI டையோசிஸ்ஸில் நடக்கும் அநியாயங்களின் பட்டியல்:

மிஷனரிமார்கள், ஆயர்மார்கள், உபதேசியார் ஆகியவர்களின் பிராவிடன்ட் ஃபண்ட், பணம், பென்ஷன் பணம் ஆகியவற்றை டையோசிஸ் நிர்வாகம் அரசாங்க வங்கியில் இதுவரை சேர்க்காமலும் டையோசிஸ் சார்பில் இவர்கள் பணத்துடன் சேர்த்து மேலே கூறப்பட்ட ஊழியர்களுக்காக சேர்த்து அடைக்க வேண்டிய பணமும் இதுவரை அரசாங்க வங்கியில் சேர்க்கப்படாமல், பணம் பேங்க்கில் அடைக்காததால் ஆரம்ப காலத்திலிருந்து ஊழியர்கள் கணக்கில் வரவு வைக்கப்படவேண்டிய வட்டி பணம் பல கோடிகள் ஊழியர்கள் கணக்கில் வங்கியில் இல்லை என்பதாக CSI சினாடுக்கும், பிராவிடன் ஃபண்ட், பென்ஷன் அதிகாரிகளுக்கும் ஊழியர்கள் சிலராக புகார் எழுதி அனுப்ப ஏற்பாடுகள் நடக்கிறது. இது உண்மையானால் இது பெரும் கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு டையோசிஸ் அதிகாரிகள் முதல் பிஷப்மார்வரை ஜெயிலுக்கு போகவேண்டி வரும். இவர்களுக்கு பெரும் ஆபத்தும், அவமானமும் காத்துக்கொண்டிருக்கிறது. இது டையோசிஸ் நிர்வாகிகளும், பிஷப்மாரும் டையோசிஸ் ஊழியர்களுக்கு செய்யும் பெருத்த துரோகம் ஆகும்.


வேலை நியமனத்திலும் ஊழல்:

டையோசிஸ் வேலை நியமனத்தில் குறிப்பாக தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆகியோரின் வேலை நியமனத்தில் பல வருடமாக வரிசையில் காத்துக்கிடக்கும் எத்தனையோ CSI டையோசிஸ்ஸில் CSI சபை அங்கத்தினரின் பிள்ளைகள், மனைவிமார்கள் வரிசைப்படி காத்துக்கிடக்க வேலை நியமான லிஸ்டில் இல்லாத நபருக்கு பணிநியமனம் கொடுத்த துரோக குற்றச்சாட்டில் டையோசிஸ் நிர்வாகத்தினருடன் பிஷப் அவர்களும் குற்றவாளியாகிறார். இந்தவிதமான அநியாயத்துக்கு பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம்போக ஏழைகளுக்கு பண வசதியில்லை. ஆனால் அவர்களின் ஏமாற்றம் கண்ணீராகமாறி தேவசமூகத்தில் சென்றால் கர்த்தரே இந்த குற்றச்சாட்டுக்கு பொறுப்பானவர்களை தண்டிப்பார் என்பது நிச்சயம். இந்த சம்பவங்களும் சினாட்டில் குற்றச்சாட்டாக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் நியாயம் தீர்க்கவேண்டிய தலைவரின் டையோசிஸ்ஸிலேயே இதே நியமனம் குறித்த குற்றச்சாட்டு எழும்பியுள்ளது. அப்படியானால் சினாடின் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பது நம்மால் யூகிக்கமுடிகிறதே!.


எங்கும் ஊழல் - எதிலும் ஊழல் தெய்வபயம் ஒழிந்துப்போனது.

இப்போதுதான் CSI சினாட்டுக்கு பிஷப்மார்கள்மீது நடவடிக்கை எடுக்கும் புது தைரியம் உண்டாகியிருக்கிறது அதற்காக பாராட்டுகிறோம். இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய CSI பிஷப்மார்கள் பட்டியல் நீண்டுள்ளது. சீக்கிரம் நடவடிக்கை எடுத்தால் CSI சபைகள் நல்ல ஒழுங்குக்கு வரும். நடவடிக்கை CSI சினாட் தலைமையிலிருந்தும் ஆரம்பிக்கப்படவேண்டும். ஜெபிப்போம்.

சில வருடங்களுக்குமுன் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்க உதவி ஸ்தாபனமான ERD அனுப்பி உதவிய பல கோடிகளில் ஊழல் செய்து களவாடிய பணத்தை சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு கொடுக்காமல் பல கோடிகள் தன் மகள் பெயரில் சினாட் பொறுப்பாளர்கள் சிலர் பல கோடிகளை வங்கியில் போட்டுவைத்ததை போலீஸ் கண்டுபிடித்தது. சினாடில் பொதுசெயலர் இன்னும் சம்பந்தப்பட்டவர்கள் பொதுசெயலரின் கர்ப்பிணியான நிலையில் இருந்த மகள் ஆகியவர்களை போலீஸ் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். கடலே இல்லாத இடங்களில் உள்ள CSI பிஷப்மார்களும் சுனாமி உதவி தொகையில் தங்களுக்கும் பங்குவேண்டும் என்று வாங்கிப்போன அநியாயங்களும் CSIயில் நடந்தது. சுனாமி உதவி தொகை அனுப்பிய அமெரிக்க உதவி ஸ்தாபனமான ERD, CSI மீது வழக்கு தொடுத்துள்ளது. ERD உதவி ஸ்தாபனம் CSI சினாடிடம் கொடுத்த பணத்துக்கு கணக்கு கேட்கிறது. பணம் வாங்கின எந்த பிஷப்பும் திருமண்டலத்தில் இதுவரை கணக்கு ஒப்புவிக்கவில்லை. பிரதமமந்திரிக்கு ERD தகவல் அனுப்பியுள்ளது. நீதிமன்ற வழக்கை CSI சினாட் வேண்டுமென்றே வாய்தா வாங்கி வருடகணக்கில் நீட்டிக்கொண்டு போகிறார்கள். இப்போதுள்ள சினாட் புதிய கமிட்டி சுனாமி நிதி கணக்கை சம்பந்தப்பட்ட பிஷப்மார்களிடத்தில் கேட்டு வாங்குவார்களா?

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல நிர்வாகத்தை கவனிக்க Rev.ஜேசுசகாயம் நியமனம்:

தூத்துக்குடி: மே 3-2013, தினகரன்: தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகத்தை கவனிப்பதற்காக பிரதம பேராயர் பிரதிநிதியாக மதுரையை சேர்ந்த CSI குருவானவர்.ஜேசுசகாயம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய திருச்சபையின் பிரதம பேராயர்.தேவகடாசம் அவர்கள் தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல குருவானவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள கடிதம்:

சென்னையில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி நடந்த தென்னிந்திய திருச்சபையின் தலைமை செயலக (சினாடு) நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல பேராயர் ஜெபச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.



Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM