வேதம் கூறுகிறது: மாலை நேரத்தில் இரண்டு தூதர்கள் சோதோமுக்கு அந்நியர்களைப்போல் வந்தார்கள். லோத்து இரக்கமுள்ளவனாக இருந்தான், மேலும் அந்த நாட்களின் வழக்கத்தின்படியேயும், அந்த
தூதர்களையும் தன் வீட்டினுள் அழைத்து இராத்தங்கச் செய்தான். அவர்கள்
தேவ தூதர்கள் என்பது அவனுக்குத் தெரியாது. அவன் செய்தது பிரயாணகளுக்கு செய்யும் உபசரிப்பின் ஒரு பகுதியே ஆகும்.
அந்த மனிதர்கள் லோத்துவை சந்திக்க வந்த செய்தி, சோதோமுக்குள் பரவியபோதுதான்
சோதோமின் உண்மையான குணாதிசயம் வெளிப்பட்டது.
அவர்கள் படுக்கைக்குச் செல்லும்முன், அந்த நகரத்தைச் சேர்ந்த
வாலிபர் முதல் கிழவர் வரை அனைவரும் லோத்துவின் வீட்டை சூழ்ந்து கொண்டு, லோத்துவை வெளியே அழைத்து
"இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படி அவர்களை அனுபவிக்கும்படி
வெளியே கொண்டுவா என்றார்கள்" (வசன 5).
சோதோமின் புருஷனர்கள்
ஓரினச்சேர்க்கையாளர்கள் (ஹோமே செக்ஷுவல்). எனவேதான் அந்த இரண்டு புதிய மனுஷர்களையும் வெளியே கொண்டுவரும்படி லோத்துவை வற்புறுத்தினார்கள். இந்த
இயற்கைக்கு மாறான இப்படிப்பட்ட வெட்கக்கேடான சம்பவத்தைப் போன்ற ஒன்றை வேதத்தில் வேறு எங்கும் காணமுடியாது.
மாம்ச இச்சையினால் தூண்டப்பட்டு, வாலிபர் முதல் கிழவர் வரை திரளான மனிதர்கள் அந்த புதிய ஆண் மனிதர்களை தேடிவந்து வெட்கமின்றி வெளிப்படையாகக்கேட்டனர்.
அவர்கள் கூக்குரலுக்கு பதில் செய்யும்படி லோத்து கூறிய காரியம் அதிலும் பயங்கரமானது. அந்த ஆண்களுக்கு பதிலாக
"தன்னுடைய இரண்டு வாலிப பெண்களைத் உங்களுக்கு தருகிறேன் என்றும், தன் சொந்த மகள்களை
அவர்கள் தங்கள் இஷ்டம்போல் பயன்படுத்திக்கொள்ளட்டும்" என்றும் கூறினான். அதில் விருப்பமில்லாத அந்த கூட்டம், வீட்டிற்கு வந்த ஆண்கள்(புருஷர்கள்)தான் வேண்டும் என்றுக்கூறி வீட்டின் கதவை உடைக்க முயற்சித்தனர். அதனால், லோத்துவை, அந்த
தேவ தூதர்கள் வீட்டிற்குள்ளாக இழுத்துக்கொண்டதுடன் அந்த மனிதர்களுக்குக் குருட்டாட்டம் பிடிக்கச் செய்தனர். அவர்களுக்கு வாசல்படி எது என்று தெரியாதபடி தவித்தனர் என்று அர்த்தம் கொள்ளலாம்.
அந்த நேரத்தில்தான், லோத்துவுக்கு தன்னிடத்தில் வந்த அந்த
இரண்டு மனிதரும் யார் என்பதை உணர்ந்து கொண்டான். அவர்கள் சோதோமை அழிக்கும்படி
தேவனால் அனுப்பப்பட்டவர்கள். ஆனால் அதற்க முன்னதாக,
லோத்தும் அவனது குடும்பமும் அழிவிலிருந்து தப்புவிக்க கடைசி வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். லோத்து தன் மருமகன்களிடம் சென்று
வருகிற அழிவைக்குறித்துக்கூற, அவர்களோ அதைக்கேட்டு லோத்து ஏதோ நகைச்சுவையாகக் கூறுகிறார் என்று சிரித்தனர். கிழக்கு வெளுக்கும் வேளையில், லோத்து, அவன் மனைவி மற்றும் இரண்டு பெண் பிள்ளைகளும் சோதோமை விட்டு வெளியேறுமாறு தேவதூதர்கள் அவர்களை துரிதப்படுத்தினார்கள் (வ15). இல்லையெனில் அவர்கள் அனைவரும் பட்டணத்திற்கு வரும் தண்டனையில் அகப்பட்டு அழிய நேரிடும் என்று கூறினார்கள். ஆனால் வ.16ல்
"லோத்து தாமதித்துக்கொண்டிருக்கும்போது.." என்று வாசிக்கிறோம். ஏன் அவன் தாமதித்தான்? ஏனெனில் அவன்
பட்டணத்தை நேசித்தப்படியால் அங்கு அவன் நண்பர்கள், அயலகத்தார், உடன் ஊழியர்கள் என்று அனைவரும் இருந்தனர். அதே சமயம் இங்குதான் உலகத்தின் அனைத்து சந்தோஷமும் இருந்தது. லோத்தும் அவன் மனைவியும் மகிழ்ந்திருக்கும்படியான நல்ல வாழ்க்கை இருந்தது. அவன்
ஓரினச்சேர்க்கையாளன் (ஆண்புணர்ச்சியாளன்) அல்ல. அதே சமயம் அவன் அதை
எதிர்த்து செயல்படவும் இல்லை. மாறாக சோதோமின் கீழ்தரமான செயல்களோடு அவன் வாழ விரும்பினான். ஏனெனில் லோத்து சோதோமின் அனைத்து காரியங்களோடு சோதோமை நேசித்ததினால் அப்படி வாழ விரும்பினான்.
லோத்து உலகத்தில் அன்பு கூர்ந்தான். தேவன் உலகத்தில்
அன்பு கூர்ந்ததைப்(யோ 3:16)போல் அல்ல. மாறாக,
"உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும்" (1யோ 2:15) என்று யோவான் குறிப்பிட்டுள்ளதை போன்று அவனின் அன்பு காணப்பட்டது.
தேவனின் அன்பு பரிசுத்தமானது. மீட்கும் தன்மைக்கொண்டது. அது முற்றிலுமாக உலகத்தின்
தீமையின்று வேறுபட்டது. டி.எல்.மூடி அவர்கள் மிக அழகாக இந்த சத்தியத்தை ஒரு உதாரணத்தின் மூலம் கூறியுள்ளார். படகு தண்ணீரில் காணப்பட்டால்
அது நல்லது. ஆனால் படகில் தண்ணீர் காணப்பட்டால் அது அழிவுக்கேதுவானது. லோத்து தாமதித்தன் காரணம். படகில் தண்ணீர் இருந்ததினால், அவன் சோதோமை நேசித்தப்படியால் அவனும் அழிந்து போகத்தக்கதாக அழிவின் விளிம்பில் காணப்பட்டான். லோத்துவிடம் காணப்பட்ட குழப்பத்தைக்குறித்து
டான் கோல் என்பவர் இவ்விதம் எழுதுகிறார். லோத்துவின் ஆத்துமா மிகவும் சாதுரியமானது. ஆனால் அதுவே அவனை அழிவின் விளிம்பிற்கு அழைத்துச்சென்றது. அவன் வெறுப்பும், கோபமாய் இருந்திருக்கவேண்டிய வேளையில் அமைதியாய் இருந்தான். பாவத்தைக்கண்டு சாதுரியமாய் இருப்பதைவிட கூர்மையற்ற கத்தியாய் இருப்பதே மேல்.
லோத்து ஒரு அரசியல்வாதி. பிரச்சனைகளின் மத்தியில்
சமரசம் பேசுவதில் வல்லவன். அவன் நாவு மிக மென்மையானது. அதனால்தான். அவன் பிழைக்கச் சென்ற இடத்திலும் பாவம் நிறைந்த அம்மக்கள் மத்தியில்
தலைவனாக உயர முடிந்தது. ஆனால் அவனுக்கு நேரிட்ட சம்பவத்தில் அவன்
அநீதியைக்கண்டு, தேவ நீதியினால் பொங்கி எழுந்திருந்திருக்கவேண்டும். மென்மையான போக்கையோ, சமாதானப்படுத்தும் வார்த்தைகளையோ சமரச வார்த்தைகளைத்தான் அவன்பேசியிருந்திருக்கக்கூடாது.
லோத்து, அவனுடைய மனசாட்சியில் மிகவும்
பெலவீனமாய் காணப்பட்டான். பாவத்தைக்குறித்து உணர்வு சோதோமுக்குள்ளே அவன் வசிப்பதற்கு அசௌகரியமாய் காணப்பட்டாலும், சோதோமை வெறுத்து அதைவிட்டு வெளியேறுவதற்கு அவன் விரும்பவில்லை. எனவே சோதோமின் சூழலோடு அவன் இணக்கமாய் இருந்தான். அப்படியில்லாதிருந்திருந்தால் அவன் என்றைக்கோ சோதோமைவிட்டு வெளியேறி இருந்திருப்பான். போதுமான
மனசாட்சி இல்லாததே அவனை அங்கு தங்கச்செய்தது. ஆனால், ஆபிரகாமோ, தேவனுக்குப் கீழ்ப்படிந்து வாழ்ந்து, பிள்ளைகளைக்குறித்த வாக்கு நிறைவேறாத சூழலிலும், வாக்குப் பண்ணப்பட்ட நாட்டில் வாழ்ந்து வந்தார்.
வக்கிரங்கள் நிறைந்த நகரத்தின் மதிப்பீடுகளைக்குறித்து லோத்துவின் உணர்வுகளும்
வக்கிரங்களாக மாறிப்போயின. உண்மையில் லோத்து இந்த உலகத்தோடு ஒன்றி, அதன் மயக்கத்தில் காணப்பட்டதால்தான், தன்னால் மலைக்கு
ஓடிப்போகமுடியாதென்றும், உயிர் பிழைக்க அருகிலுள்ள நகரத்திற்கு ஓடிப்போக உத்தரவு அருளவேண்டும் என்று தூதர்களிடம் கெஞ்சினான். சோதோமை விட்டு வெளியேறுவது அவனுக்கு
கடினமாய் இருந்திருக்கவேண்டும். அல்லது அந்த தேவ தூதர்களின் வார்த்தையை அவன்
நம்பாதிருந்திருக்கவேண்டும். உண்மை எதுவாயினும், அந்த தூதர்கள் அப்படியே ஒத்துக்கொண்டனர். ஏனெனில் லோத்தும் அவன்
குடும்பமும் சோதோமைவிட்டு வெளியேறும் வரை அவர்களால் ஒன்றும் செய்யக்கூடாதிருந்தது.
அதன் தொடர்ச்சியாக அநேக சம்பவங்கள் நடந்தேறின. முதலாவதாக,
இரட்டை நகரங்களான, சோதோம் - கொமோரா ஆகிய இரு நகரங்களும் வெளிச்சம் மிகுந்த அந்த பகல் நேரத்தில், கந்தகத்தாலும் அக்கினியினாலும் அழிக்கப்பட்டன (வ23-25).
இரண்டாவதாக,
லோத்துவின் மனைவி பின்னிட்டுப்பார்த்து உப்புத்தூண் ஆனாள் (வ 25),
மூன்றாவதாக, அதற்கு அடுத்த நாளில் ஆபிரகாம்
அழிவைக்கண்ட பட்டணங்களைப் பார்வையிட்டான். (வச 27).
நான்காவதாக, லோத்துவின் சொந்த மகள்கள் தன் சொந்த தகப்பனுக்கு
மதுவைக் குடிக்க கொடுத்து அவனோடு தகாத சரீர உறவுகொண்டனர். (வ 30-38). இது எத்தனை பெரிய பயங்கரம். உலகம் கேட்டிராத பயங்கரமாகும்.
இந்த கடைசி சம்பவம் மிகவும்
இழிவானது. இது ஏன் வேதத்தில் ஏன் இடம் பெற்றுள்ளது என நம்மில் அநேகர் வியப்படைவதுண்டு.
அம்மோனியர் மற்றும் மோவாபியரின் துவக்கத்தைக்குறித்து கூறுவதற்காக இந்த சம்பவம் வேதத்தில் இடம் பெற்றுயிருக்கலாம் அல்லது லோத்துவின் குடும்பம் எவ்வளவாக கறைபடிந்த தீமை நிறைந்த குடும்பம் என்பதை அது தெரிவிக்கிறது.
சோதோம் அழிந்துவிட்டது என்றாலும், சோதோமின் பாவஆவி, லோத்து தங்கியிருந்த
குகையில் மறுபடியும் பிறந்தது. எனவே பாவம் என்பது இடம் சார்ந்தது அல்ல. அது இருதயம் சார்ந்தது என்பதை அறிகிறோம்.
நகரங்கள் தீமையானது அல்ல, நகரங்களில் வாழும் மக்களே தீமையானவர்கள். இருதயங்கள் மாற்றம் பெறாவிட்டால்,
எத்தனை நகரங்களை நாம் அழித்தாலும், பாவம் பள்ளத்தாக்குதல்களிலும்,
வயல்வெளிகளிலும் வேர்ப்பற்றி வளரக்கூடியது.
ஏன் ஆண்டவர் இந்த
இரட்டை நகரங்களை அழித்தார்?.
ஆதி 19ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்களை நாம் தொகுத்துப்பார்க்கும்பொழுது, அநேக கேள்விகள் நமக்குள் எழும்பக்கூடும். இந்த சம்பவங்கள் அனைத்தும் தேவனின் செயல்களை மையமாகக் கொண்டே அமைந்துள்ளன. ஏன் இந்த
இரட்டை நகரங்களைமட்டும் தேவன் அழித்தார், மற்ற அநேக
நகரங்களும் திராளான பாவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது ஏன் இந்த நகரங்கள் மட்டும் அழிவைக் காணவேண்டும்? அக்கினியும், கந்தகத்தினால்? இவ்வளவு சீக்கிரத்தில்? அது அழிக்கப்படவேண்டும்?
1. ஒழுக்கக்கேடு அதிகம் நிறைந்து காணப்பட்டது.
ஓரினசேர்க்கையைக்
(ஆண்புணர்ச்சியைக்) குறித்து தேவன் என்ன எண்ணுகிறார் என்று ஒருவர் அறிந்துக்கொள்ள வேண்டுமெனில், அதற்கான அனைத்துப் பதில்களையும் இந்த அதிகாரத்தில் பார்க்கமுடியாது. ரோமர் முதலாம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளவைகளுக்கு உதாரணமாக ஆதி 19ம் அதிகாரம் அமைந்துள்ளது.
ஓரினச் சேர்க்கையை(ஆணோடு-ஆண், பெண்ணோடு-பெண் தவறான புணர்ச்சிக்கு) அனுமதிக்கும், ஆதரவளிக்கும் எந்தவொரு நாடும் அல்லது நகரமும் தேவனின் நியாயத்தீர்ப்பின் கீழ்வரும் என்பதை மறக்கக்கூடாது.
பாலியல் (Sex) உறவில், தேவனுடைய வழிகளை முற்றிலும் தள்ளிவிட்டதற்கு ஓரினச்சேர்க்கை (ஆணோடு-ஆண் சேர்க்கை) அடையாளமாக உள்ளது. தேவனுடைய பரிசுத்த வழிகளைத் தள்ளிவிட்டதற்கு ஆதாரமாக மூன்றுவித மாற்றங்களைக் மனிதன் ஏற்படுத்திக்கொண்டதைக்குறித்து ரோம 3:23-27ல் கூறுகிறது. முதலாவது, வ 23ல் அழிவில்லாத தேவனுடைய மகிமையை, அழிவுள்ள மனுஷர், மிருகம், பறவைகளின் ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். அடுத்ததாக, தேவனுடைய சத்தியத்தைப் பொய்யாக மாற்றினார்கள் (வச 25). இறுதியாக, சுபாவ அநுபோகத்தை சுபாவத்துக்கு விரோத அநுபோகமாக மாற்றினார்கள் (வ.26,27). தேவனையும், தேவனுடைய வழிகளையும் வெறுப்பவர்களுக்கு ஓரினச் செயலே இறுதியாக உள்ளது.
எனவேதான் ஓரினச் சேர்க்கையைக்குறித்து
...அக்கிரமம் (ஆதி 19:7). என்றும்,
....அருவருப்பு (லேவி 18:22 20:13) என்றும்,
...மதிகேடானது (நியா19:23-24) என்றும், சுபாவத்திற்கு மாறானது,
...உணர்ச்சிமயமானது (ரோ1:27) என்றும்,
...விபச்சாரம் (யூதா 7) என்றும் வேதம் ஒரே குரலில் கண்டிக்கிறது. இது இயற்கையான வாழ்விற்கு மாற்றானது அல்ல, மாறாக, தேவனுடைய திட்டத்திற்கு எதிரானதும், வருத்தத்தையும்,
பாவத்தையும் மரணத்தையும் பலனாக கொண்டது.
2. தேவனற்ற மனிதர்களுக்கு இது திருஷ்டாந்தமாக உள்ளது. யூதா வ 7ல்..."சோதோம் கொமோரா பட்டணத்தார்களும்,
அவர்களைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல விபச்சாரம் பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்." தேவன் இந்த பாவமான நகரங்களை அழித்ததன் மூலம், தேவன் பாவத்தை தண்டிக்கிறவர் என்பதை தேவனற்ற மக்கள் அறிந்துக்கொள்வார்கள். சவக்கடலைப்போன்று இன்று பண்டைய நகரங்களான
சோதோமும் கொமோராவும் இன்று ஒன்றுமில்லாமல் பயனற்று காணப்படுகின்றன.
3. சுற்றிலுமுள்ள நகரங்களுக்கு தேவன் இரக்கம் செய்யும் செயலாக அந்த அழிவு காணப்பட்டது. சோதோமையும் கொமோராவையும்
சடுதியாய் அழித்ததினால், அங்குக் காணப்பட்ட அக்கிரமம் மேலும் பரவாதபடி தேவன் உறுதி செய்தார். ஒட்டு மொத்த தண்டனை, பொதுவான நன்மைக்கு வழி வகுத்தது. இந்த நகரங்கள் மிகவும் அக்கிரமம் நிறைந்து காணப்பட்டு தேவன் அவற்றை அழித்ததின் மூலம் இந்த பூமியிலிருந்து
ஒழுக்கக்கேட்டை அகற்றினார்.
4. நீதி, வித்தியாசத்தை ஏற்படுத்த தோற்றுப்போனதினால் தேவன் அழிவை கட்டளையிட்டார். உப்பு சாரமற்றுபோனால், அதன் பயன் எப்படியோ, அப்படியேதான் சோதோமுக்கும் நடந்தது. 2 பேதுரு 2:8ல்
"அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு, நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமான்" என்று லோத்துவைக்குறித்து நாம் வாசித்தாலும், லோத்து அந்த நகரத்தின்மீது அன்பு கொண்டடிருந்ததினால், அதில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பெலன் சற்றுமின்றி காணப்பட்டான். அதனால், அவன் தன்னுடைய சாட்சியை இழந்ததுடன், தன்னுடைய குடும்பத்தையும் இழந்ததுடன், இறுதியில் ஏறத்தாழ தன் சொந்த வாழ்வையும் இழந்தவனாகத்தான் காணப்பட்டான். இந்த சம்பவத்திலிருந்து நான்கு பாடங்கள்:
|