இந்த தங்க புதையல் விவரம் 1). விவாசயத்துறை இணையமைச்சர் சரன்தாஸ் மஹந்த், 2).
இந்திய பிரதமர் மன்மோகன் சிங், 3). நிதியமைச்சர் ப.சிதம்பரம், 4).
உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, 5). கலாச்சார அமைச்சர் சந்திரேஷ்குமார் கட்டோச் மற்றும்
சுரங்க துறை அமைச்சகத்துக்கு தங்க புதையல் தோண்டப்போகும் விவரம் கடிதம்மூலம் அறிவிக்கப்பட்டது.
2013 அக்டோபர் 6ம் தேதி GSI டைரக்டர் ஜெனரல் ஏ.சுந்தரமூர்த்தி, மண்ணியல் ஆய்வாளர்கள் நடத்திய பூர்வாங்க பரிசோதனையில் தங்கம், வெள்ளி மற்றும் வேறுவகை உலோகமும், மண்ணுக்குள் இருக்கலாம் என்று அறிவித்தார்.
இது விஞ்ஞான பூர்வ அணுகுமுறைக்கு மாறாக GSI மற்றும் இந்திய அகழ்வாராய்ச்சி துறை (ASI) ஆகிய இரண்டு அமைப்புகளையும்
இந்திய அரசு முட்டாள்தனமான தங்க வேட்டையில் ஈடுபடுத்தி கட்டளையிட்டருப்பது
இந்திய விஞ்ஞானிகளை திகைக்க வைத்துள்ளது.
விவரம் அறிந்த அந்த ஊர்மக்களும் அந்த கோவிலின் பல பாகங்களில் இரவுவேளையில் திருட்டுதனமாக மண்ணை தோண்ட ஆரம்பித்தார்கள். வெளிஊர்களிலிருந்தெல்லாம் ஆட்கள் வந்து மண்தோண்ட ஆரம்பித்துள்ளார்கள்.
பகலில் இந்திய அரசாங்கம் இராட்சத இயந்திரம் கொண்டு தங்கத்தை தேடிகொண்டிருப்பார்கள். மறுபக்கம் ஊர்மக்கள் மண்ணை தோண்டிகொண்டிருந்தார்கள்.
டிவி சேனல்காரர்கள் ஏராளமான சேடிட்லைட் கனக்ஷனோடு இரவும்-பகலும் கேமராவுடன் கவனித்துக்கொண்டிருந்தனர். ஆள்நடமாட்டம் இல்லாத அந்த சின்ன கிராமத்தில்
மக்கள் கூட்டம் பெருக ஆரம்பித்தது. திடீர் கடைகள், ஓட்டல்கள் உருவாகின. பிரச்சனையும் உருவாக ஆரம்பித்தவுடன்
போலீசும், ராணுவமும் வரவழைக்கப்பட்டது. தோண்டிய இடத்தில் மண் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. மீண்டும் திடீர் சாமியார் 4000 டன் தங்கம் சொப்பனத்தில்
நானே கண்டேன் என்றார்.
இதன்மூலம் யாராலும் கவனிக்கப்படாமல் இருந்த இந்த சாமியாரின் பெயர், டிவியிலும், தினசரி பேப்பரிலும் வெளிவர ஆரம்பித்தது. யாராலும் அறியப்படாத சாமியார் இப்போது திடீரென்று பிரபலமானார். தான்மட்டும் தனியாக வாழ்ந்த அந்த சிறிய குடிசை சில வாரங்களில்
கட்டிடமாக எழும்பி அது ஆசிரமமாக மாறியதால், பெரிய பெரிய பணக்காரர்கள் சாமியரை தேடிவந்து அவரை வணங்கி ஆசி பெற்றுபோன வண்ணமாக இருந்தார்கள். முடிவில் அங்கு எந்த புதையலும் இல்லை என்று
இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்தியது.
|