சிலுவை ஆலயத்தின்மேல் வைப்பது. ஆலய டேபிளில் வைப்பது அது ஒரு கிறிஸ்தவ ஆலயம் என்று புறஜாதியார் எளிதில் அறிந்துக்கொள்ள ஏதுவுண்டாகும். ஆனால் அந்த
சிலுவையை பார்த்து வணங்கினால் அதுவே விக்கிரக வணக்கமாகிவிடும். ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷம் வரை வேதம் முழுவதுதிலும் கர்த்தர் வெறுக்கிற முக்கிய விஷயம்
விக்கிரக ஆராதனை ஆகும். சரியான விசுவாசிகள் ஆராதிக்கும் சில சபைகளில் எந்த சிலுவையையும், சிலுவை அடையாளத்தையும் பார்க்கமுடியாது.
என் வீட்டில் இயேசுவின் படம் பலவருடமாக என் பெற்றோரின்காலம் முதல் மாட்டப்பட்டுள்ளது. அப்படியே ஒரு சிலுவை படமும் உண்டு. ஆனால் நாங்கள் யாரும் அதை பார்த்து ஜெபிப்பதோ, அதை பார்த்து கைகூப்புவதோ இல்லை. ஆகவே சிலுவை ஒரு அடையாள சின்னமாக அல்லது நினைவு சின்னமாக தேவையானால்மட்டும் உபயோகிக்கலாம். இயேசுகிறிஸ்து உலகமனைத்து மக்களுக்காகவும் நமக்கு பதிலாகவும்
சிலுவை தண்டனையை ஏற்றுக்கொண்டு நாம் தண்டிக்கப்படாமல் நம்மை அவர் இரட்சித்தார் என்று அந்த சிலுவைப்பற்றி மற்றவர்களுக்கு விளக்கம் கூறி அறிவிக்க அதை காட்டி பயன்படுத்தலாம். ஆனால்
சிலுவையை வணங்கிவிடக்கூடாது அது விக்கிரக ஆராதனை ஆகிவிடும்.
பிஷப்மார்களுக்கு எப்படி விசேஷ அங்கி யூனிபார்ம் ஆக பயன்படுகிறதோ அப்படியே கழுத்தில் சிலுவை தொங்கவிடுவதும் அவரவர் சபையின் ஒழுங்கு ஆகும். ஜெபிக்கும்போது சிலுவையின் அடையாளத்தை நெற்றியில் வரைய சொல்லி நிறையபேர் எதிர்ப்பார்க்கிறார்கள். நானும் வருகிறவர்களின் விருப்பப்படி
சிலுவை அடையாளத்தை ஒரு சிலருக்கு வரைந்து ஜெபித்ததுண்டு. ஜெபிக்கும்போது இந்த சிலுவை அடையாளம் உங்கள் நெற்றியில் வரைவதால் அல்ல.
சிலுவையின் அர்த்தத்தை விளங்கி அந்த சிலுவையில் அறையப்பட்டவரை உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கூறி அவர்களுக்காக ஜெபிப்பேன். சிலுவை வரைந்தால் நெற்றியில் காணப்படாது. ஆனால் சிலுவை நாயகனாகிய
கிறிஸ்து உள்ளத்தில் வந்துவிட்டால் அப்படிப்பட்டவர்களுக்கு சிலுவையை
வெளியிலோ, கழுத்திலோ அணிந்துக்கொள்வதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. சிலர் சிலுவையை மணியில்கோர்த்து
காரில் முன்னே மாட்டிவைப்பார்கள். அந்த சிலுவை கார் ஓட்டுபவரை காப்பாற்றும் என்ற தவறான அபிப்ராயத்தை நல்ல ஆழமுள்ள ஆவிக்குரிய விசுவாசிகள் கூட நம்புகிறார்கள்!. இது எத்தனை முட்டாள்தனம்!. கார், லாரி, விபத்துக்கள் நடந்தால் கவனித்து பாருங்கள்.
சிலுவை மாலை அல்லது சிலுவையின் அடையாளத்தை காரின் பின்னால் அல்லது முன்புறம் வரைந்த வண்டியும்
கவிழ்ந்து கிடக்கும். சிலுவை இடாமல் பிள்ளையார் சிலை வைக்கப்பட்ட வண்டியும்
கவிழ்ந்து கிடக்கும். வண்டி ஓட்டுபவர் சரியாக ஓட்டாமல்போனால்
சிலுவை என்ன செய்யும். சிலுவை நாயகனாகிய கிறிஸ்து உங்கள் உள்ளத்தில் இருந்தாலும் ஒருவேளை விபத்து நேரிடலாம். ஆனால் அந்த விபத்தில் கர்த்தர் நம்மை பாதுகாப்பதையும் சிறு காயங்களுடன் நம் ஆயூளை நீட்டி உதவுவதையும் உணரலாம்.
இரண்டு
பிஷப்மார் தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் உள்ளவர்கள்போலீஸ் பிடியில் சிக்கினார்கள். பெண் ஒருவளோடு
விபச்சாரம் செய்யும்போது அவர்கள் அகப்பட்டார்கள். இது கற்பனை கதையல்ல,
பத்திரிக்கை செய்தி: போலீஸ் ஸ்டேஷனில் அதிகாலை டூட்டிக்கு வந்த போலீஸ் அதிகாரி அந்த பிஷப்புடன் பேசும்போது
கழுத்தில் சிலுவையை அணிந்துக்கொண்டு இப்படிப்பட்ட பாவம் செய்துவிட்டீர்களே!. எப்படி உங்களுக்கு பாவம் செய்ய தைரியம் வந்தது? என்று கேட்டார். அதற்கு அந்த
பிஷப் நான் சிலுவையை இரவில் கழற்றிவைத்துவிடுவேன் என்றார். அதன் அர்த்தம் பாவம் செய்யும்போது சிலுவையை கழற்றிவிட்டு
பாவம் செய்து முடித்தவுடன் அதை மறுபடியும் மாட்டிக்கொள்வேன் என்பதாகும். கழுத்தில் தொங்கவிடும், சாதராண மர சிலுவைக்கு கொடுக்கும் மரியாதை அதற்கு காண்பிக்கும் பயமும்,
இயேசு காண்கிறவர் என்ற உணர்வும் இவர்களுக்கு இருந்திருந்தால் இப்படி பாவம் செய்வார்களா?.
சிலுவை பிசாசைவிரட்டும் என்று பலர் நம்புகிறார்கள். அதனால் பிசாசு பிடித்த நபரை ஜெபத்துக்கு அழைத்து வந்தால்
தலையில் சிலுவையை வைத்து ஜெபிப்பார்கள். அல்லது வேத புத்தகத்தை தலையில் வைத்து ஜெபிப்பார்கள். இவைகள் யாவும்
மூட நம்பிக்கைகளாகும். இந்த சிலுவைக்கும், வேதபுத்தகத்திற்கும் பிசாசு பயப்படாது. சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமே பிசாசு பயப்படும்.
வேதபுத்தகத்தில் எழுதப்பட்ட வசனத்துக்கு பிசாசு பயப்படும், ஆனால் வேதபுத்தகத்துக்கு பயப்படாது. தயவுசெய்து வசனத்தை சரியாக வாசியுங்கள்: வசனத்துக்கு கீழ்படியுங்கள். இயேசுகிறிஸ்துவையும், அவர் அறையப்பட்ட சிலுவையையும், சிந்திய இரத்தத்தின் நோக்கத்தையும் அறிந்து உணர்ந்து ஜீவித்தால்
அதுதான் அர்த்தம் உள்ள கிறிஸ்த ஜீவியம்.
இங்கிலாந்து தேசத்தில் என்னை இரண்டு
கிறிஸ்தவ ஆலயங்களுக்கு அழைத்து சென்றார்கள். அந்த ஆலயம் பூட்டி பராமரிக்கப்படாமல் பாழடைந்து இருந்தது. காரணம் அந்த ஆலயத்தில்
பிசாசு குடியேறியிருக்கிறதாகவும், அதனால் யாரும் அந்த பக்கமாகக்கூட போவதில்லை என்றும் கூறக் கேட்டேன். இப்படிப்பட்ட மூட நம்பிக்கை வெள்ளைக்காரர்களிடம் நிறைய உண்டு.
இதில் நான் குறிப்பிடுவது என்னவென்றால் அந்த ஆலயத்தில் நடுவே. இயேசு
சிலுவையில் அறையப்பட்ட காட்சியுள்ள பெரிய மர சிலுவை வைக்கப்பட்டுள்ளது. மேசையில் 3 சிலுவைகள் உண்டு. ஞானஸ்நான தொட்டியில்
சிலுவை ஆலய வாசல்படியில் சிலுவை, ஆலயத்தின் கோபுரத்தில் சிலுவை. ஆனால்
ஆலயத்தின் உள்ளேயோ பிசாசு. இது எப்படியிருக்கிறது!. ஆகவே, மர சிலுவை அல்லது
தங்க சிலுவையை கழுத்தில் தொங்கவிடுவதில், வீட்டில் அல்லது வாகனத்தில் தொங்கவிடுவதில்,
நெற்றியில் இடும் சிலுவை அடையாளத்தில் நம்பிக்கை வைக்கவேண்டாம், இவைகள் எதுவும் உங்களையோ, உங்கள் பிள்ளையையோ, உங்கள் வாகனத்தையோ
காப்பாற்றாது. இயேசுகிறிஸ்து உங்கள் உள்ளத்தில் வரவேண்டும்.
சிலுவையின் அர்த்தம் உங்களுக்கு புரியவேண்டும். கிறிஸ்துவின் வேத வசனம் உங்கள் மனதில் எப்போதும் பதியவைத்து அதை தியானித்துக்கொண்டேயிருந்தால் நீங்கள்தான் உண்மை கிறிஸ்தவர்.
உங்களுக்குள் இருக்கிறவர் பரிசுத்த தெய்வமான இயேசுகிறிஸ்து என்ற எண்ணம் உங்களை எல்லா பாவத்துக்கும் விலக்கும் எல்லா ஆபத்துகளிலிருந்தும் காப்பாற்றும். சிலுவை வெளியே வைப்பதில் பிரயோஜனமல்ல. அந்த
சிலுவையில் அறையப்பட்டவரை உங்கள் மனதின் உள்ளே அழையுங்கள்.
இதோ இருதய வாசலை தட்டுகிறேன். கதவை திறந்தால் உள்ளே வருவேன் என்று இயேசு கூறுகிறார்.வெளி 3:20. |