சில வருடங்களுக்குமுன் பெந்தேகோஸ்தே சபையான பிலிவர்ஸ் சர்ச் என்ற சபைகளின் பாஸ்டர்.கே.பி.யோகன்னான் (ஆத்மீக யாத்திரை ரேடியோ நிகழ்ச்சி மூலம் பிரபலமனாவர்). மார்தோமா சபையிலும்,
CSI சபையிலும், Jacobite சபையிலும் உள்ள அங்கத்தினரில் நூற்றுக்கணக்கான நபர்களை பிரிந்து வரசெய்து அவர்களுக்கு
முழுகி ஞானஸ்நானம் கொடுத்து தன் சபையில் சேர்த்துக்கொண்டார் அப்படிப்பட்ட மற்றும் அந்த
பெந்தேகோஸ்தே சபை பாஸ்டரை நமது
CSI மாடரேட்டரும், அதே கிழக்கு கேரளா டையோசிஸ் பிஷப்புமான Most Rev.K.J.SAMUEL அவர்களும்,
Rt.Rev.கிளாக்ஸ்டன் (South Kerala டையோசிஸ்) அவர்களும், இப்போது நமது
CSI மாடரேட்டராகவும், கன்னியாகுமரி டையோசிஸ்ஸின் பிஷப்பாகவும் இருக்கும்
Most.Rev.தேவகடாட்சம் அவர்களும், CNI (Church of North India) வட இந்திய திருச்சபை பிஷப்மார் இரண்டு பேர்களும், ஆக ஒரு
CSI மாடரேட்டர் இரண்டு CSI பிஷப்மார்கள், இரண்டு
CNI பிஷப்மார்கள் ஆகியவர்கள் தங்கள் செங்கோல்களை பிடித்து குறிப்பிட்ட இந்த 5 பிஷப்புகளும்,
கே.பி.யோகன்னான் அவர்கள் மீது கைகளை வைத்து அவரை பிஷப்பாக
CSI முறைப்படி அபிஷேகம் செய்தார்களே அது எந்த விதத்தில் நியாயமாகும்?.
தண்ணீர் ஞானஸ்நானம் குறித்து புத்தகம் எழுதினவரை
CSI-யைவிட்டு நீக்கின பிஷப்.டேனியல் முழுகி தண்ணீர் ஞானஸ்நானம் கொடுக்கும் ஒரு பெந்தேகோஸ்தே சபை பாஸ்டரிடமிருந்து கோடிக்கணக்கில் லஞ்சமாக பணம் வாங்கிக்கொண்டு அவரை
CSI முறைப்படி முன்னாள் மாடரேட்டருக்கும், சில CSI பிஷப்மார்களும் அவரை
பிஷப்பாக்கியது எந்த விதத்தில் நியாயம்?.
CSI பிஷப், மாடரேட்டர்களுக்கு ஒரு சட்டம்?,
அந்த சபையில் அங்கத்தினனாக இருக்கும் ஒருவருக்கு இன்னொரு சட்டமா?
இவர்களுக்கு மனசாட்சியில்லையா? தேவ பயம் இல்லையா?. இப்படிப்பட்ட விஷயத்தில் நியாயம் - அநியாயம் கேட்க ஒருவரும் இல்லையா?
CSI சினாடில் உள்ள மெம்பர்கள், ஆயர்கள் ஆகிய யாவரும் எங்கு போனார்கள்?
மானம், ரோஷம் உள்ள ஒரே ஒரு பிஷப்.Rt.Rev.ஜார்ஜ் ஐசக் வடக்கு கேரளா டையோசிஸ் அவர் ஒருவர்தான் பெந்தேகோஸ்தே பாஸ்டரை
CSI பிஷப்மார்கள் அபிஷேகம் செய்து பிஷப்பாக்கியது தவறு என்று கூறி எதிர்த்து கேள்வி கேட்டு பத்திரிக்கைகளுக்கு அறிக்கை கொடுத்தார். மட்டுமல்ல, இதற்கு முக்கிய காரணமான
CSIயின் முன்னாள் மாடரேட்டரும் மற்ற பிஷப்மார்களும் ராஜினாமா செய்யப்படவேண்டும், அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் அல்லது அவர்கள் அனைத்து
CSI மக்களிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அறிக்கைவிட்டார். அப்படியும் யாரும் மன்னிப்பும் கேட்கவில்லை, மாடரேடருக்கு
CSI சினாட் தண்டனை கொடுக்கவில்லை. ஆகவே நான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பிஷப் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அறிக்கைவிட்டதுமல்லாமல் பிஷப் பதவியை
ராஜினாமா செய்துவிட்டு நியாயத்துக்கு முன்மாதிரியானார்.
அவர் மனோரமா தினசரி பத்திரிக்கைக்கு பேட்டியளிக்கும்போது
CSIயில் யாராவது தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் எடுத்தார் என்று அறிந்தால்
CSI சட்டப்படி அவரை CSI சபையைவிட்டு முழுவதுமாக நீக்கிவிடுகிறோம். ஆனால்
CSI மாடரேட்டரும், மற்ற பிஷப்மாரும் தண்ணீரில் முழுகி
ஞானஸ்நானம் கொடுக்கும் பாஸ்டருக்கு பிஷப் பட்டம் கொடுத்தார்கள் என்றால், நாளை நான் என்
CSI சபையை எப்படி நடத்துவேன். தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் எடுத்த யாரையாவது நான் நீக்கினால்
பிஷப்மாராகிய நீங்கள் யோக்கியமா? என்று கேள்விகேட்டு அவன் கோர்ட்க்கு போனால்
நீதிபதி பிஷப்மார்களை பார்த்து என்ன நினைப்பார்கள்?. வெட்கி தலைகுனிவதை தவிர வேறு என்ன செய்யமுடியும் என்று கூறி பிஷப் பதவியை அவர் ராஜினாமா செய்தார்? அன்பான அனைத்து
CSI அங்கத்தினர்களுக்கும், ஆயர்களுக்கும், பிஷப்மார்களுக்கும் தாழ்மையாக நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால்,
CSI-க்காக பாடுப்பட்ட அந்த Prof.C.C.Jacob அவர்கள் குடும்பத்திடம் நடந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு அந்த குடும்பத்தை ஆறுதல்படுத்துங்கள்.
பிஷப்.டேனியல் அவர்கள் செய்த தவறை வேறு எந்த பிஷப்பும் செய்யாதிருக்க தீர்மானம் எடுங்கள். (கிழக்கு கேரளா டையோசிஸ்ஸில் உள்ள
Prof.C.C.Jacob அவர்களை நேசிக்கும் குடும்பங்களிடம் மன்னிப்பு கேளுங்கள். ஆறுதல்படுத்துங்கள்).
மனந்திரும்புதல் தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் எடுத்தவர்களின் கணக்கு
CSIயிலும், மார்தோமாவிலும், Jacobite-லும் தோண்டி ஆராய்ந்தால் ஏராளமான
பிஷப்மார், ஆயர்கள், சபை அங்கத்தினர்கள் பலர் ஞானஸ்நானம் எடுத்துள்ளார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கில் அகப்படுவார்கள். இப்போதும் ஞானஸ்நானத்தை
இரகசியமாக எடுத்த பிஷப்மார், ஆயர்கள் பலரை நான் அறிவேன். சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் சபையில் ஆட்கள் இருக்கமாட்டார்கள். சில பிஷப்மார், ஆயர்கள், அங்கத்தினர்கள் யாவரையும்விட்டு
CSI, மார்தோமா சட்டப்படி சபையை விட்டு நீக்கவேண்டி வரும். அவர்கள் எல்லாரும் இரகசியமாக ஞானஸ்நானம் எடுத்தவர்களாகும்.
கே.பி.யோகன்னான் அவர்களை
பிஷப்பாக அபிஷேகித்த விஷயத்தில் மிகப்பெரிய
CSIயின் சட்டமீறுதலை கிழக்கு கேரளா டையோசிஸ் பிஷப்பும், மாடரேட்டருமான
Most.Rt.Rev.K.J.Samuel அவர்களும் செய்துவிட்டார். அதைக்குறித்து இதுவரை அவர் மனஸ்தாப்பட்டதாக நான் அறியவில்லை.
கே.பி.யோகன்னனை பிஷப் ஆக்கிய விஷயத்தில் கலந்துக்கொண்டவர்களில் வடக்கு இந்தியா (CNI) சபை பிஷப் இரண்டு பேர்களுக்கும்,
CNI சினாட் அந்த இருவரின் பிஷப் பதவியை பறித்து சாதாரண ஆயராக ஊழியம் செய்யும் தண்டனையை கொடுத்தது. ஆனால் நம்
CSIயில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோடி ரூபாய்களும், லட்ச ரூபாய்களும் லஞ்சமாக பெற்று இவர்களில் சில பிஷப்மார்கள்
K.P.Yogannan அபிஷேக ஆராதனையில் கலந்துக்கொண்டு CSI சட்டத்தை மீறியிருக்கிறார்கள். கிழக்கு கேரளா டையோசிஸ் பொறுப்பாளர்கள்
CSI சபைக்காக பாடுபட்ட ஒரு நல்ல நபருக்கு தங்கள் CSI கல்லறையை மூடியிருக்கிறது. இது மிகப்பெரிய அநியாயம் ஆகும்.
Prof.C.C.Jacob அவர்கள் சாதாரண ஒரு
புத்தகம் எழுதியதற்கு தண்டனையாக அவருக்கு CSI கல்லறை கொடுக்கவில்லை,
CSI முறைப்படி அவரை அடக்க ஆராதனை செய்யவில்லை. ஆனால் நம் ஆண்டவர் மரித்த அந்த நபரை வெறுக்கவில்லை, கல்லறைக்குள் அவரை வைக்கும்முன்பே, அவருக்கு அடக்க ஆராதனை மறுத்த நிலையிலேயே
கர்த்தர் அவரை தன்னிடம் எடுத்துக்கொண்டார். கல்லறையோ, அடக்க ஆராதனையோ,
CSI பிஷப்போ அல்லது சட்டமோ ஒரு மனிதனை பரலோகம் கொண்டுபோகாது.
மனந்திரும்பின அனுபவத்தோடு மரித்தவர் மட்டுமே எப்படி அடக்கம் செய்தாலும் கடலில் மூழ்கிபோனாலும் பரலோகம் போகமுடியும்.
CSI பிஷப்புக்கு லஞ்சம் கொடுத்தால்
CSI சட்டத்தையே மாற்றலாம் என்று எல்லாராலும் பேசப்படுவது கேவலமாகும். திருமணத்துக்கு 3 ஓலைகள் வாசிக்காமலே பிஷப்புக்கு பணம் கொடுத்துவிட்டால் அந்த
திருமணத்தை பிஷப்பே நடத்திவிடுவார். இதுதான் CSIயின் பல டையோசிஸ்ஸின் இப்போதைய நிலை ஆகும். இதெல்லாம்
CSI சபை சட்ட மீறுதல் இல்லையா?
முதல் மனைவி உயிரோடு இருக்கும்போதே
பிஷப் தன் மகனுக்கு மற்ற பிஷப்மார் தலைமையில் ஆயர்கள் புடைசூழ
இரண்டாம் திருமணத்தை நடத்திவைத்து ஆசீர்வதிப்பார். சமீபத்தில் இப்படிப்பட்ட திருட்டு திருமணம் இரண்டு நடைபெற்றது. இதெல்லாம்
CSI சபை சட்டமீறுதல் இல்லையா?
பிஷப்புக்கு ஒரு
பெரும்தொகை லஞ்சமாக கொடுத்தால் போதும் தரவரிசையில் உள்ளவர்களுக்கு கல்லூரியில் வேலை தராமல்
ஆலயத்துக்கே வராத நபருக்கு காலேஜில் வேலை உறுதி. கேட்க வெட்கமாக இல்லை?.
இப்படியும் லஞ்சம் வாங்கும் சில பிஷப்மார்கள் இப்போதும் இருக்கிறார்கள். மனசாட்சியற்ற இப்படிப்பட்ட காரியங்கள்
CSI சபை பார்வையில் பாவமாக கருதப்படுவதில்லை. ஏன்?
சில
பிஷப்மாரை இரவில் சந்தோஷப்படுத்த சில டீச்சர்மார் தேவைப்படுகிறார்கள். திருமணமான இரண்டு குழந்தைகளுக்கு தாயானவளே, தன் புருஷன் அனுமதியுடன்
பிஷப் வீட்டுக்கு சென்று வந்ததை மொபைலில் படம் பிடித்துள்ளார்கள். பல சமயம் இரவு நேரங்களில் பிஷப் அந்த
டீச்சர் வீட்டில் படுத்திருந்து விடியற்காலை எழுந்து யாரும் அறியாமல் தன் வீட்டுக்கு வந்துசேருகிறார். இந்த வெட்ககேட்டுக்கு
பிஷப் மனைவியும் உடந்தை என்பதை கேட்கும்போது இவைகளை நம்பவே நம்மனம் மறுக்கிறது. இந்த வெட்கம் கெட்ட சம்பவத்தை எழுதவே கூசுகிறது.
இவைகளை CSI சபை சட்டம் அல்லது நம் வேதம் இதை அனுமதிக்கிறதா? இவைகளை கேள்வி கேட்க
டையோசிஸ்ஸில் தைரியம் உள்ள விசுவாசிகள் ஒருவர்கூடவா இல்லை?.
|