CSI சபையில் நவீன உபதேசம்
மறுபடியும் CSI சபைகளுக்குள் நவீன உபதேசங்கள்
பிரவேசிக்க தொடங்கிவிட்டது.

கேரளத்தில் கடந்த ஓணம் பண்டிகைகளில் ஞாயிறு காலை ஆராதனையில் கேரளத்திலும், வெளியிலும் சில CSI ஆயர்கள் பிரசங்கம் தொடங்குவதற்குமுன் கைகூப்பி சபை ஜனங்களை பார்த்து உங்கள் எல்லாருக்கும் என் ஓணம் வாழ்த்துக்கள் உரித்தாகுக என்று அறிவித்தது. சபை ஜனங்கள் அதிர வைத்தது. இப்படி இந்து விக்கிரக தெய்வங்களை புகழ்த்தி இந்துக்களின் பண்டிகையில் கிறிஸ்தவ சபை மக்களுக்கு வாழ்த்து கூறி சபை ஜனங்களை உற்சாகப்படுத்தி அந்த விக்கிரக புகழ்ச்சி ஆராதனையில் சபை மக்கள் யாவருக்கும் பங்கு உண்டாக்கிய சம்பவமும், நம் தெய்வம் விரும்பாத நிகழ்ச்சியும் நம் சபைகளில் தொடர்ந்து நடந்துக்கொண்டிருப்பது மனவேதனையை அளிக்கிறது.


தீபாவளி வாழ்த்துக்கள்:

கேரளம் போலவே, தமிழ்நாட்டிலும் கிறிஸ்தவ சபைகளில் தீபாவளி வாழ்த்துதலை சபை ஜனங்களுக்கு ஆயர் அறிவித்தாக அறிந்து மிக வேதனைப்படுகிறோம்.

ஓணம் பண்டிகையும், தீபாவளி பண்டிகையும், கேரள கலாச்சார அடிப்படையில் உள்ள பண்டிகை என்றும், தீபாவளியும் தமிழ் கலாச்சார பண்டிகை என்றும் விளக்கம் கூறி கிறிஸ்தவர்களும் இதை கொண்டாடலாம் என்று அறிவிக்கும் சபை ஆயர்கள் நம் தெய்வமான இயேசுகிறிஸ்துவின் எதிரிகளாவார்கள். ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை வேதத்தில் நம் தேவன் விக்கிரக வணக்கத்தை வெறுக்கிறவர் என்பதை அறிந்தும் நம் கிறிஸ்தவ சபை ஆயர்கள் இந்து மதத்தினரின் பண்டிகையை கொண்டாடுவதும், பண்டிகையின் வாழ்த்துதல் ஜனங்களுக்கு அறிவிப்பதும் சபைக்கு சாபத்தை கொண்டுவரும் செய்கையாகும். சபை ஜனங்கள், அல்லது சபை கமிட்டி இவைகளை எதிர்த்து கூறாததால் இது இன்னும் பெலமாக சபைக்குள் பிரவேசிக்கும் அதோடு சபை ஆராதனைக்குள்ளேயே இந்துமத பண்டிகையை கொண்டாடவும் இவர்கள் துணிவார்கள்!. எச்சரிக்கிறேன். இதைக்குறித்து பிரசங்க மேடையில் அந்த குறிப்பிட்ட ஆயர்கள் கூறியதாவது: ஓணம் பண்டிகையானாலும், தீபாவளி பண்டிகையானாலும் அவைகளை இந்துமத பண்டிகை என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் அது இந்தியர்களின் கலாச்சார பண்டிகை என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் இந்துமத மக்களிடமிருந்து நாம் விலகாமல் அவர்களின் அன்பை பெற உதவும் என்று ஞானமாக அந்த தவறை நியாப்படுத்துகிறார்கள். நான் சொல்லுகிறேன். இவைகள் இந்தியர்களின் கலாச்சார பண்டிகையல்ல. இந்துமத விக்கிரக தெய்வங்களின் பண்டிகையாகும்.

கேரளத்தில் ஓணத்தைக்குறித்து சபை ஆயர் கூறியபோது நம் தெய்வம் இயேசுகிறிஸ்து மனிதர்களுக்கு வேண்டி தியாகம் செய்து மரணத்துக்கு தன்னை ஒப்புவித்தார். அதேபோல கேளர பண்டிகையான ஓணம் கதையில் வரும் மகாபலி என்ற ராஜா கேரள ஜனங்களுக்காக தன்னையே அர்ப்பணித்தார் என்பது கேரள புராணத்தில் கூறப்படுகிறது. அந்த தியாகத்தின் அடிப்படையில் சபை ஜனங்களுக்கு ஓணம் வாழ்த்து நான் கூறியதில் என்ன தவறு? என்று சபை ஆயர் ஆராதனையில் கூறினார்.

மகாபலி என்ற ராஜா உண்மையில் கேரளத்தில் வாழ்ந்தாரா? நாட்டு ஜனங்களுக்கு நன்மைகள் செய்தாரா? என்பதை ஆராய நான் விரும்பவில்லை. ஆனால் மகாபலியின் புராண கதையை வாசித்து அறியும்போது கேரள இந்துமக்கள் ஆராதிக்கும் வாமணன் என்ற இந்துமத தெய்வத்துடன் ஒருமுறை மகாபலி என்ற ராஜா பேசும்போது வாமணன் என்ற தெய்வமாகிய நீங்கள் என்ன கேட்டாலும் நான் தருவேன் என்று வாக்கு கூறினார் என்று கேரள இந்துக்களின் புராணம் கூறுகிறது. அப்போது வாமணன் என்ற தெய்வம் தன் இரண்டு கால்களை வைக்க பூமியில் இரண்டு இடம் எனக்கு தந்தால்போதும் என்றாராம். கால்களை வைக்க சிறு இடம் தானே என்று நினைத்து உடனே தருகிறேன் என்றாராம் ராஜா. உடனே வாமணன் என்ற தெய்வம் தன் உடம்பை வானத்தையும், பூமியையும் தொடும் வண்ணம் பூதாகாரமாக தன் உடம்பை மாற்றிக்கொண்டு தன்னுடைய ஒரு காலை பூமியில் பதித்தாராம். இப்போது அடுத்த கால் வைக்க இடம் இல்லை. இந்த காலை வைக்க இடம் தா? என்றாராம். உடனே மகாபலி ராஜா என் தலையில் காலை வைத்துக்கொள்ளுங்கள். நான் வாக்குமாறாத ராஜா என்றாராம். உடனே வாமணன் என்ற அந்த தெய்வம் மகாபலி என்ற அந்த ராஜாமீது தன் காலை பதித்து அப்படியே பூமிக்குள் அமிழ்த்துவிட்டார். இப்படியாக கேரள மக்களை காப்பாற்ற தன்னையே அர்ப்பணித்த மகாபலி ராஜா மரித்துப்போனார். அதை நினைவுக்கூறும் விதத்தில் கேரளா இந்துமத மக்கள் ஒவ்வொரு வருஷமும் வீட்டின்முன் பூக்கள் வைத்து அலங்கரித்து பொங்கல் வைத்து அலங்கரித்தால் இந்த மகாபலி ராஜா வருடம் ஒருமுறை அந்த வீட்டிக்கு வந்து அந்த குடும்பத்தை ஆசீர்வதிப்பதாக கேரள இந்துமத மக்கள் நம்புகிறார்கள். இதுதான் ஓணம் பண்டிகையின் கதை வேறு கதையும் உண்டு. எது எப்படியோ இந்த இந்துமத தெய்வ பண்டிகையை கிறிஸ்தவ சபை மக்கள் எப்படி கொண்டாடமுடியும். ஆகவேதான் நான் கூறுகிறேன்: இது கேரளா கலாச்சார பண்டிகை அல்ல. கேரள இந்துக்களின் பண்டிகை. நம்முடைய தெய்வம் வருடம் ஒருமுறை நம்மை சந்திப்பதில்லை. எல்லா நாளும் எல்லா நேரமும் நம்மோடும் நமக்குள்ளும் வாசம் பண்ணுகிறவர். யோ 14:23,24. சங் 121:4. நம்முடைய தெய்வம் உறங்காதவரும், ஓய்வு எடுக்காதவருமாவார் என்று வேதம் கூறுகிறது. முக்கியமாக நாம் அறியவேண்டியது, நம் தேவன் மரித்தவர் அல்ல. அவர் ஜீவிக்கிறவர். அப்படியிருக்க செத்த தெய்வத்தை கிறிஸ்தவ சபைகளில் கொண்டாடுவது எப்படி? இதை சபை மக்கள் ஆயர், பிஷப்மார் சிந்திக்கவேண்டும்.

தீபாவளியும் அதேபோல நரகாசூரனை இந்துமத தெய்வ அவதாரம் கொன்றதால் ஜனங்கள் சந்தோஷப்பட்டு விளக்கு வைத்து, ஒளி ஏற்றி, பட்டாசு வைத்து அந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள். நம்முடைய தெய்வம் இயேசுகிறிஸ்து பாவிகளை இரட்சிக்க உலகத்தில் வந்தார். அந்த கொடூரன் நரகாசூரனையும்கூட மனம்திரும்பவைத்து அவனையும் பரலோகத்தில் சேர்க்கும் குணம்தான் நம் தெய்வத்தின் லட்சணம். அப்படியிருக்க ஒருவனை கொல்ல அவதாரம் எடுத்த அந்த தெய்வத்தைக்குறித்து சந்தோஷப்படுவது எப்படி? அப்படிப்பட்ட இந்துமத விக்கிரக தெய்வத்தின் பண்டிகையை கிறிஸ்தவ மக்கள் சந்தோஷமாக கொண்டாடுவது எப்படி?.

அப்படிப்பட்ட விக்கிரக தெய்வத்தின் பண்டிகையான தீபாவளிக்கு கிறிஸ்தவ சபைகளில் வாழ்த்து தெரிவிப்பது எப்படி? நம் கிறிஸ்தவர்கள், நம் தெய்வத்தைப்பற்றியே அறியவேண்டிய விதத்தில் இன்னும் அறியவில்லை.

ஒருமுறை ஒரு இந்து டாக்டர் என்னை பார்த்து கிறிஸ்மஸ் காலத்தில் Wish you a Happy Christmas உங்களுக்கு என் கிறிஸ்மஸ் வாழ்த்து என்றார். உடனே நான் அவரிடம் நீங்கள் இயேசுவை தெய்வமாக ஏற்றுக்கொண்டீர்களா? என்றேன். இல்லை என்றார். இப்போதாவது இயேசுகிறிஸ்துவை தெய்வமாக ஏற்றுக்கொள்ள விருப்பமா? என்றேன், இல்லை! என்றார். அப்போது கூறினேன். அப்படியானால் நீங்கள் எனக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து கூறுவது அல்லது கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டை அனுப்புவது பொருந்தாது. அது அர்த்தம் இல்லாததது என்றேன்.

காரணம், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவர் எனக்காக பிறந்தார் என்றும் என் பாவத்தை மன்னிக்க கிறிஸ்து மரித்தார் என்று நம்புகிறவர்களுக்குதான் கிறிஸ்து தெய்வமாக இருப்பார். அந்த சந்தோஷத்தை உணர்ந்து கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களோடுமட்டும் வாழ்த்து தெரிவித்து பகிர்ந்து கொள்வதுதான் பொருத்தமானது என்றேன். அவர் முகம் மாறிவிட்டது. நான் கூறியது. அவருக்கு பிடிக்கவில்லை. உடனே அவர் அதனால்தான் நீங்கள் எங்கள், தீபாவளிக்கு வாழ்த்து அட்டை அனுப்புவதில்லையா? என்றார். ஆமாம். அப்படி உங்களுக்கு தீபாவளி வாழ்த்து அட்டை அனுப்பினால் நீங்கள் செய்யும் தவறுக்கு நான் உடன்பட்டவனாவேன். அப்படி வாழ்த்து அட்டையை உங்களுக்கு அனுப்பினால் தவறான அந்த பண்டிகையை நீங்கள் சந்தோஷமாக கொண்டாடுங்கள் என்று நான் உங்களை உற்சாகப்படுத்தியவன் ஆவேன். தயவுசெய்து என்னை புரிந்துக்கொள்ளுங்கள் என்றேன். ஆனால் அந்த டாக்டர் என்னை வெறுக்க ஆரம்பித்தார்.

அன்பானவர்களே, நாம் உயிருள்ள தேவனாகிய இயேசுகிறிஸ்துவை ஆராதிக்கிறவர்கள். ஆகவே தீபாவளிக்கு, ஓணத்துக்கு இப்படிப்பட்ட பண்டிகைகளுக்கு இனாம் வசூலிக்க வருபவர்களுக்கு தீபாவளி - ஓணம் பண்டிகைக்கான இனாம் கொடுக்கக்கூடாது. அவர்களுக்கு வேறு நல்ல தேவையுள்ள காரியங்களுக்கு உதவிகளை செய்யலாம். அவர்கள் இந்து என்றும், முஸ்லீம் என்றும் பாராமல் பணஉதவிகள் செய்வதில் தவறேதும் இல்லை. ஆனால் பண்டிகைக்காக இனாம் கொடுத்தால் அவர்களின் தவறுக்கு நாமும் உடன்பட்டவர்களாவோம் என்பதை மறக்கவேண்டாம். கிறிஸ்மஸ் தினத்தன்று விருந்துக்கு இந்துக்களை அழைத்தால் அவர்கள் தீபாவளிக்கு அல்லது ஓணத்துக்கு உங்களை அழைக்கும்போது நீங்கள் அவர்கள் வீட்டுக்கு போகவேண்டிவரும். இப்படிப்பட்ட விஷயங்களில் ஞானமாக அவர்கள் மனம் புண்படாதபடி அவர்கள் அழைப்புக்கு ஞானமாக பேசி மறுப்பு தெரிவித்துவிடுங்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள்தான் கிறிஸ்மஸ் சந்தோஷம் அனுபவிக்க இயலும். அதை புரிந்துக்கொண்டு இனி இப்படிப்பட்ட தீபாவளி, ஓணம், பொங்கல் ஆகிய இப்படிப்பட்ட இந்துமத பண்டிகை நாட்களில் நம் சபைகளின் பாஸ்டரோ, பிஷப்போ, ஆயரோ வாழ்த்து கூறினால் சபை மக்களாகிய நாங்கள் அதை வெறுக்கிறோம் என்று தைரியமாக கூறுங்கள். சபையில் கமிட்டியாக, அங்கத்தினனாக அதன் விவரத்தை அறிவித்து எச்சரியுங்கள். நவீனமுறையில் இந்து மத உபதேசம் மெல்லமெல்ல சபைக்குள் ஆயர்கள் மூலமாக உள்ளே புக ஆரம்பிக்கிறது!. அனுமதிக்க வேண்டாம்!. எச்சரிக்கை!.

யாராவது ஒருவர் உங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் அல்லது ஓணம் வாழ்த்துக்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம் என்று கடிதம் எழுதினால், உடனே அவர்களுக்கு நீங்கள் கடிதம் எழுதி எங்களுக்கு தீபாவளி பண்டிகை இல்லை. ஓணம் பண்டிகையும் இல்லை. நாங்கள் இயேசு கிறிஸ்துவை ஆராதிக்கிறவர்கள் என்று எழுதி அறிவித்திடுங்கள். எச்சரிக்கை!, எச்சரிக்கை!!.


புதிய பெண் பிஷப் ஒருவர் ஆசியாவிலேயே
நம் CSIயில் முதலாவதாக தெரிந்தெடுக்கப்பட்டார்:
Bishop Rt.Rev.E.Pushpa Lalitha

CSI & CNI சரித்திரத்தில் ஆசியாவிலேயே ஒரு பெண்ணை பிஷப்பாக தெரிந்தெடுக்கப்பட்ட வேத விபரீதம் தென் இந்தியாவில் CSI சபைகளில் ஏற்பட்டுள்ளது. தென் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் ஒரு பெண் ஆயரான Rev.E.Pushpa Lalitha அவர்கள் CSI சினாட் பிஷப்பாக தெரிந்தெடுக்கப்பட்டுவிட்டார்.

இதற்கு நம் மாடரேட்டர் Rt.Rev.தேவகடாச்சம், மற்றும் உள்ள நம் சினாட் பொறுப்பாளர்கள், தமிழ்நாட்டு சினாட் மெம்பர்கள் யாவரும் உடந்தை. நம் தமிழ்நாட்டு சினாட் மெம்பர்கள் யாரும் இதற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தாக தெரியவில்லை. கர்த்தர் அங்கீகரிக்காத காரியத்துக்கு நம் தமிழ்நாட்டு ஆயர்கள், சினாட் மெம்பர்கள் யாவரும் உடந்தையாக இருந்தார்கள் என்பதை அறியும்போது நம் தமிழ் CSI சபையில் உள்ள எல்லாருக்கும் அது தலைக்குனிவாகும்.

பெண்களால் எந்த வேலையையும், ஊழியத்தையும் செய்யமுடியும். ரோம 16ம் அதிகாரத்தில் முழுவதும் பெண் ஊழியக்காரர்களைப்பற்றி குறிப்பிட்டுள்ளது. பிரிஸ்கில்லாள் என்ற பெண் மூலமாக இரண்டு சபைகள் உருவாகியுள்ளது. இவைகள் எதையும் நான் மறுக்கவில்லை.

ஆனால் சபையில் ஆயர் (இடையன்), மேய்ப்பன் ஊழியத்தை பெண்கள் செய்ய வேதம் அனுமதிக்கவில்லை. 1கொரி 14:34,35, 1 தீமே 2:11-14 இந்த வசனங்களை வாசியுங்கள்.

சபைகளில் உங்கள் ஸ்தீரிகள் பேசமாமலிருக்க்கடவர்கள். பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை. அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும். வேதமும் அப்படியே சொல்லுகிறது.

அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள். ஸ்தீரிகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.

ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள்.

உபதேசம் பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை. அவள் அமைதலாயிருக்கவேண்டும்.

என்னத்தினாலெனில் முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.

மேலும் ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை. ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.

பிஷப்.... ஒரே மனைவியை உடையவனாக இருக்கவேண்டும். 1தீமோ3:2, 1 தீமோ 3:1-7, தீத்து 1:5-7.

நான் மனுஷனையோ, தேவனையா (யாரை) பிரியப்படுத்தப்பார்க்கிறேன். நான் இன்னும் மனுஷரை பிரியப்படுத்துகிறவனாகயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் அல்லவே!. கலா 1:0.


கேரளா C.S.I. ஆயர் ஒருவர் தன்னுடைய
மனவேதனையோடு ஜாமக்காரனுக்கு எழுதிய கட்டுரை:
சபைமேய்ப்பன் (பாஸ்டர்) அல்லது ஆயர் ஊழியம்
பெண்களுக்கு வேதம் அனுமதிக்கிறதா?

பொதுவாக பெண்களுக்கு சம அந்தஸ்து, அதிகாரம், பதவி இவைகள் வகிக்க உரிமை உண்டா? என்பது அரை நூற்றாண்டு காலமாக பேசப்படும் சர்ச்சைக்கான விஷயமாகும். ஆனால் இன்று நாட்டை ஆள்வதிலிருந்து, விமானம் ஓட்டுவதிலிருந்து, போலீஸ், ராணுவம் போன்ற கடினமாக வேலைகளைகூட பெண்களும் செய்யமுடியும் என்பதை நிரூபித்து கொண்டிருப்பதை கண்கூடாக காண்கிறோம். அதனால் இப்போது சபையிலும் பெண்கள் மேய்ப்பனாக (பாஸ்டராக) ஆயராக, பிஷப்பாக பெண்கள் ஏன் பொறுப்பெடுக்கக்கூடாது? ஏன் அவர்களை இந்த ஊழியங்களில் ஒதுக்கவேண்டும் என்று பலரால் இப்போது பேசப்படுகிறது.

பெண்களுக்கென்று சரீரத்தில் மாதம் ஒருமுறை ஏற்படும் சில பெலவீனங்களினால் அவர்களை சபை ஊழியத்திலிருந்து தள்ளிவைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று பெண்கள் இப்போது எல்லா இடங்களிலும் போர் கொடி பிடிக்க ஆரம்பித்துவிட்டனர்.

வேதத்தில் மேலே குறிப்பிட்டபடி பெண்களுக்கு வேதத்தில் ஊழியத்தில் பலவித பங்களிப்பு உள்ளபோது நாம் ஏன் அவர்களை மேய்ப்பன் ஊழியத்தில்மட்டும் தள்ளிவைக்கவேண்டும்?.


இயேசுகிறிஸ்துவின் பார்வையில் பெண்களின் ஊழியம் எப்படிப்பட்டது?

இயேசுகிறிஸ்துவை மரியாள் பெற்றெடுத்ததால் இன்று உலகமெல்லாம் உள்ள சில கிறிஸ்தவ சபைகள் மரியாளுக்கு தெய்வத்தின் அந்தஸ்து கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

யோவ 4:7-39 சமாரிய ஸ்தீரியைப்போல ஆவிக்குரிய விஷயத்தில் சமாரிய பெண்ணோடு ஒப்பிட வேறு யாரும் இல்லை. அவள் சாட்சியின் மூலம் ஏராளமான பெண்கள் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தார்கள் என்றாலும் கிறிஸ்துவால் அனுப்பப்பட்ட அப்போஸ்தலர் கூட்டத்தில் ஒரு பெண்ணையும் இயேசுகிறிஸ்து தெரிந்தெடுக்கவில்லை ஏன்?. யோ12ம் அதிகாரத்தில் பெத்தானியா வீட்டில் பல ஆவிக்குரிய இரகசியங்களை இயேசுவின் பாதத்திலிருந்து படித்த சாட்சியுள்ள அந்த பெண் மரியாளுக்கு ஏன் இயேசுகிறிஸ்து ஊழியம் கொடுக்கவில்லை?. இந்த பெண் இயேசுவை மிகவும் நேசித்தவள் என்பதை லூக் 7:47ல் கூறப்படுகிறது. பெண்களின் ஊழியத்தைக்குறித்து அதன் முக்கியத்துவத்தைக்குறித்தும் இயேசுகிறிஸ்து போகுமிடமெல்லாம் புகழ்ந்து பேசினாலும், பெண்களை மேய்ப்பன் (பாஸ்டர்) ஆயர் ஊழியத்துக்கு ஏன் தெரிந்தெடுக்கவில்லை. மாற் 14:9. இயேசு 12 பேரை அப்போஸ்தலர்களாக தெரிந்துகொண்டார். அதன்பின் அநேக பெண்களையும், தன் ஊழியத்தில் சேர்த்துக்கொண்டும், அப்போஸ்தலர் ஸ்தானத்தை இயேசுகிறிஸ்து ஏன் பெண்களுக்கு கொடுக்கவில்லை?. யோவ 6:70,லூக் 6:13, மத் 15ம் அதிகாரத்தில் கானானிய ஸ்திரீயின் பதிலைக்கேட்டு இவள் எல்லாரையும்விட விசுவாசத்தில் உயர்ந்தவள் என்று புகழ்ந்திட்டும் அப்போஸ்தல ஊழியத்தில் ஒரு பெண்ணைக்கூட கர்த்தர் தெரிந்தெடுக்காதது ஏன்? ஒருவேளை உலக சமூக மக்களுக்கு பயந்ததால், அல்லது யூத கலாச்சாரத்துக்கு பயந்ததாலா? இயேசு பெண்களை மேய்ப்பன் (பாஸ்டராக) ஆயராக தெரிந்தெடுக்காதிருந்தார்? ஒருபோதும் அல்ல. வசன அடிப்படையிலும், அவருடைய கொள்கை அடிப்படையிலும் அந்த ஊழியர் பதவியை பெண்களுக்கு இயேசு கொடுக்கவில்லை.

வேதத்தில் தீர்க்கதரிசனத்திற்கும், வசனத்திற்கும் எதிராக எதுவும் நடக்கக்கூடாது என்பதில் இயேசுகிறிஸ்து கவனமாக இருந்தார்.

இயேசுவை சிலுவையில் அறைந்தபோது பல ஆண்கள் ஓடிப்போனார்கள். ஆனால் பெண்கள்தான் தைரியமாக அங்கு நின்றார்கள். இயேசு உயிர்த்தெழுந்தபோது முதல் தரிசனம் கிடைக்க மரியாளுக்குதான் அந்த பாக்கியம் கிடைத்தது. இருட்டாக இருந்தாலும் கல்லறைக்கு செல்லும் தைரியம் பெண்ணான மரியாளுக்கு இருந்தது. இயேசுவின் மரணத்துக்குபின்னும் இயேசுவை நேசிக்கும் அன்பும், தைரியமும் பெண்ணான மரியாளுக்கு இருந்தது. இத்தனை தைரியம், இத்தனை சாட்சியுள்ள வாழ்க்கை. வேறு எந்த ஆணுக்கும் இல்லாதிருந்தது. என்றாலும் ஒரு பெண்ணையும் இயேசு கிறிஸ்தவ ஊழியத்தில் தலைமை பொறுப்பை எங்கும் எந்த இடத்திலும் கொடுக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும். இயேசு பரமேறிய பிறகு மேலறையில் 120 பேர்களோடு இயேசுவின் தாயும் மற்ற பெண்களும் அங்கு இருந்தபோதும் மரித்துப்போன யூதாஸ்காரியத்துக்கு பதிலாக குலுக்கு சீட்டு இட்டு ஒருவனை தெரிந்தெடுக்க அப்போது அப்போஸ்தலர்கள் ஒரு ஆணைத்தவிர எந்த பெண்ணையும் அவர்கள் யோசிக்கவில்லை. குலுக்கு சீட்டில் மத்தியாஸ் பெயர் வந்தது. ஆனால் அங்கிருந்த மற்ற பெண் ஊழியக்காரிகள் யாரும் அந்த அப்போஸ்தல அந்தஸ்து தங்களுக்கு வேண்டும் என்றோ? அந்த சீட்டில் பெண் பெயரையும் சேர்க்கவேண்டும் என்றோ அங்கு கூடியிருந்த எந்த பெண்களும் உரிமை கொண்டாடவில்லை!.


அப்போஸ்தலர்களின் பார்வையில் பெண்களின் ஊழியம்:

பெண்களைக்குறித்து தாழ்வாக எழுதியவர் பெண்களை வெறுக்கிறவர் என்றெல்லாம் இப்போதுள்ள சில வேத சாஸ்திரிகளால் குற்றம் சாட்டப்படுகிறவர் பவுல் அப்போஸ்தலராவார். என்றாலும் 2 பேது 3:15ல் பேதுரு பவுலைக்குறித்து சாட்சி கூறும்போது அவர் இயேசுகிறிஸ்துவின் தாசன் என்றும், விசுவாசத்தின் ஆழத்திலிருந்து முத்துக்களை எடுத்து தந்தவர் என்றும், பவுல் ஞானத்தில் பூர்ணமுள்ளவன் என்றெல்லாம் பேதுரு மூலமாக சாட்சிபெற்று இருந்தார். ஆகவே பவுல் பெண்களைக்குறித்து தாழ்வாக கருதுகிறார் என்ற குற்றச்சாட்டு முட்டாள்தனம் என்று பேதுரு கூறுகிறார். அப் 6ம் அத்தியாயத்தில் ஊழியத்துக்காக தெரிந்தெடுத்த கூட்டத்தில் விதவைகள், மற்றும் பெண்கள் பல விசுவாசிகள் அங்கிருந்தாலும்,ம் அங்கிருந்தவர்களில் 7பேரை பந்தி விசாரிக்கும் ஊழியத்தில் தெரிந்தெடுக்கும்போது அத்தனை பேரும் ஆண்களாகவே தெரிந்தெடுத்தார்கள். அங்கு எந்த ஒரு பெண்ணையும் தெரிந்தெடுக்கவில்லை!. முதல் அதிகாரத்தில் பெண்களுக்கு எந்த பதவியையும் கொடுக்காமல் மத்தியாசை யூதாஸ் காரியூத்துக்கு பதில் தெரிந்தெடுத்தது பட்ச்சபாதகமாக காணப்பட்டிருக்குமானால் அப் 2ம் அதிகாரத்தில் கிடைத்த பெந்தேகோஸ்தேயின் அற்புதமான பரிசுத்தாவியின் அந்த அனுபவம் அங்கிருந்த பெண்கள் உட்பட அத்தனைப்பேருக்கும் கிடைத்திருக்குமோ?. பெண்களை சேர்க்காமல் ஆண்களான 7 பேர்களை மட்டும் தெரிந்தெடுத்தது அநியாயமாக இருந்திருக்குமானால் அந்த 7பேரில் ஒரு ஆளான ஸ்தேவான் அற்புதங்களும், அடையாளங்களும் செய்து இரத்த சாட்சியாக மரிக்கும் பாக்கியம் கிடைத்திருக்குமா?. ஸ்தேவான் ஊழியம் மூலமாக ஆத்துமாக்களின் எண்ணிக்கை பெருகியிருக்குமா? யூத ஆசாரியர்கள் பலர் ஸ்தேவான் மூலமாக கிறிஸ்துவின் விசுவாசிகளாக மாறியிருப்பார்களா?

நன்றாக ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். அந்த காலத்தில் பெண்களையும், கர்த்தர் வல்லமையாக உபயோகித்ததால் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்கள். அது சபை ஒழிந்துபோக வேண்டுமானால் சபையில் உள்ள பெண்களை அழிக்கவேண்டும் என்ற எண்ணத்தில்தான் பெண்களை ஜெயிலில் அடைத்தார்கள். அப் 8:3. அப் 8:!12ல் பிலிப்பு ஊழியம் மூலம் முதலில் இரட்சிக்கப்பட்டவர்கள் பெண்களாக இருந்தார்கள். இந்த பெண்கள் மூலமாக சபை பெரிதும் வளர்ந்தது என்றாலும் பெண்களுக்கு அப்போஸ்தல பதவியையோ, ஆசாரிய ஊழியத்துக்கு சமமான எந்த ஊழியத்ததையும் பெண்களுக்கு கொடுக்கப்படவில்லை.

அப் 9:39 யோப்பாவில் தபித்தாள் என்ற பெண் பேதுரு மூலமாக மரணத்திலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டவள். மேலும் தபித்தாள் அநேகரால் நல்ல சாட்சி பெற்றவளாக இருந்தும், ஜெபகுழுக்களை அவள் தொடங்கி பலரை ஆதாயப்படுத்தியும் அவளுக்கு ஊழியத்தில் தலைவியாக ஒரு பதவியையும் கொடுக்கவில்லை.

பெண்களை நாயைப்போல் அலட்சியப்படுத்தி அடிமைப்போல, பெண்களை நடத்திய அந்தகால கட்டத்திலேயே அப் 13:50ல் கனம் பொருந்திய பெண்களின் வார்த்தைக்கு மதிப்பு இருந்தது என்றாலும், கனம் பொருந்திய விசுவாச பெண்கள் மிக அதிகமாக ஆதி சபையில் இருந்தபோதும் அப் 14:23 சபைகளில் ஆண்களைத்தான் மூப்பன்மார்களாக நியமித்தார்கள்.

அப் 16:14 லீதியாள் என்ற பெண் ஊழியக்காரி மூலமாக பலர் இயேசுவை ஏற்றுக் கொண்டார்கள். அத்தனைபேரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். பெரிய ஜெபக்குழுவை அவள் தன் வீட்டில் நடத்திக்கொண்டிருந்தாள். பவுலும்-சீலாவும் அந்த கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆகவே அந்த வீட்டிலும் அன்றைய கிறிஸ்தவ சமூகத்திலும் பெண்களுக்கு தனி மதிப்பு இருந்தது. அவர்கள் உதாசீனம் செய்யப்படவில்லை என்பது அறிய முடிகிறது.

பவுல் பெண்களை உதாசீனப்படுத்துகிறவர் என்று இப்போது கூறுகிற சிலருக்கு 1 கொரி 7:3,4ல் மனைவியை புருஷன் கனப்படுத்தவேண்டும் என்றும் புருஷனின் சரீரத்துக்கு அவன் அல்ல அவன் மனைவிக்குதான் அதிகாரம் என்று புருஷன் மனைவியை கைவிடக்கூடாது என்றும் பவுல் தெளிவாககூறி பெண்களுக்கு மதிப்பளித்து எழுதுகிறார். இப்படிப்பட்டவராகிய பவுல் எப்படி பெண் உரிமைக்கு எதிரானவர் என்று கூறமுடியும்.

1கொரி 11,14ம் அதிகாரங்களில் பவுல் எழுதுவதை சிலர் தவறாக வியாக்கியானம் செய்கிறார்கள். கிறிஸ்துவின் தலை தெய்வம் - புருஷனின் தலை கிறிஸ்து - ஸ்திரீயின் தலை புருஷன் என்று எழுவது அங்கிகரிக்கமுடியாதது என்று கூறலாமா? பெண் புருஷனின் மகிமையாகிறாள் என்று கூறப்படும்போது பெண் இல்லாமல்போனால் புருஷனுக்கு மகிமை இல்லையே?.

1 கொரி 11:10ல் பெண்கள் தூதர்களிமித்தம் முக்காடு இடவேண்டும் என்று கூறுவதை தவறாக வியாக்கியானிக்கக்கூடாது. முக்காடு பெண்களை கனப்படுத்தும் செயலாகும். மற்றபடி அவர்களை அடிமை ஆக்கும் காரியமல்ல.

For this ought the women to have power on her head because of the angles (KJV). கர்த்தருக்குள் புருஷன் இல்லாமல் மனைவியில்லை - மனைவியில்லாமல் புருஷன் இல்லை என்று பவுல் கருதுகிறார். இதன்மூலம் பெண்-ஆண் இருவரையும் சமமாகத்தான் பவுல் கருதுகிறார்.

ஆனால் இந்த பிரச்சனை அந்த காலத்தில் பெரிய சர்ச்சையாக புதிய ஏற்பாட்டு சபையில் இருந்தது.

1கொரி 11:13 இந்த விஷயம் அந்த காலத்தில் வாக்குவாதமாக இருந்தது. அதனால்தான் பவுல் வாக்குவாதம் கர்த்தரின் சபைக்கு கிடையாது என்றார்.

அந்த கால சபையில் தீர்க்கதரிசனம், வெளிப்பாடு பிரச்சனைகள் காணப்பட்டது. அப்படியே அந்நியபாஷை, பரவசபேச்சு இவைகள் யாவும் எல்லை மீறி போனாதால் குறிப்பாக பெண்கள் உணர்ச்சி வசப்படுவதில் பலவீனமானவர்கள், ஆராதிப்பதிலும், பாடுவதிலும் பெண்கள் சத்தம்தான் மிக அதிகமாக காணப்பட்டது. ஆகவே பவுல் அவைகளை கட்டுப்படுத்தும் விதமாக கண்டிக்கும் விதமாக பெண்களைக்குறித்து எழுதவேண்டியதானது!.


பழைய ஏற்பாட்டில் பெண்களின் செயல்:

ஒரு மனைவியானவள் புருஷனுக்கு எதிராக அந்நிய தெய்வ விக்கிரங்களை வணங்குகிறவளாக இருந்தாள். அவள் ராகேல் ஆகும். ஆனால் விசுவாச பிரயாணத்தில் தன் புருஷன் ஆராதிக்கும் தெய்வத்துக்கு விரோதமாக தான் இனி செயல்படக்கூடாது என்று தீர்மானித்து அவள் வழியிலேயே அந்த விக்கிரகங்களையெல்லாம் குழித்தோண்டி புதைத்துவிட்டு புருஷனின் விசுவாச ஜீவியத்துக்குள் இணைந்துவிட்டாள். ஆதி 35:4.

அடுத்தது, பெண்ணாகிய மிரியாம் அக்காலத்தில் தலைவர் பதவிக்காக போட்டியிட்டாள். எண் 12:1. தர்க்கம் செய்தாள். மோசேயின் மனைவியை சுட்டிக்காட்டி ஒப்பிட்டு பிரச்சனை உண்டாக்கியதால் மிரியாம் குஷ்டரோகத்தால் தண்டிக்கப்பட்டாள். அதனால் அவள் சரீரம் அழுகி நாற்றம் எடுத்து பாளையத்துக்கு புறம்பே தள்ளப்பட்டாள். கட்டாயப்படுத்தி மற்றவர்மேல் குற்றம் சுமத்தி ஒரு ஊழியத்தை அல்லது பதவியை ஏற்க நினைப்பதின் பழைய ஏற்பாட்டின் விளைவை கவனிக்கவும்.

நியாயப்பிரமாணத்தோடு ஒத்துவராததும், அப்போஸ்தலர்கள் அனுமதிக்காததுமான பெண் பதவியை வலுகட்டாயமாக பறித்தெடுத்ததால் அதன் விளைவு எப்படியிருக்கும் என்பதை உணரவேண்டும்.

எண் 16ம் அதிகாரத்தில் அபிஷேகிக்கப்பட்ட மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக 250 பேர்கள் எழும்பி 4 பேர்களின் தலைமையை குறித்து போட்டியிட்டபோது மோசே அவர்களை பார்த்து கர்த்தருக்கு விரோதமான தன்மைக்காக போட்டியிடுவது ஆபத்து என்று எச்சரித்தார்.

ஊழிய தலைமை கர்த்தரால் தெரிந்தெடுக்கப்படுவதால் அது தேவ பார்வையில் மிகவும் ஆபத்தானதாகும். ஜாக்கிரதை!.

லேவி 10:6ல் ஆரோனின் பிள்ளைகளாக இருந்தாலும் ஜனங்களை திருப்திபடுத்த நாதாபும், அபியூவும் அந்நிய அக்கினியை பலபீடத்தில் கொண்டுவந்ததால் லேவி 10:6ல் சர்வ சபையின் மேலும் தேவகோபம் உண்டாக காரணமாக அமைந்தது.

லேவி புத்தகத்தில் பெண்கள் மாதவிடாய் காலத்தின் தீட்டை குறித்து எழுதப்பட்டதால் பெண்கள் தலைமை ஏற்பதில் அதையே தடையாக கருதலாமோ! என்று வாக்குவாதம் உண்டு. இப்போது மாதவிடாய் இரத்தபோக்கை நிறுத்த பல வைத்தியங்கள் உண்டு.

லேவி 15ம் அதிகாரம் முழுவதும் வாசித்தால் புருஷனையும் தீட்டுப்படுவதில் பெண்களுக்கு சமமாக கூறலாம்.

புருஷனின் விந்து ஸ்கலிதம் லேவி 15:19 பெண்களின் மாதவிடாய் தீட்டுக்கு சமம். லேவி 15:1-18. மேலும் ஆண்களின் குறிப்பிட்ட இந்த விந்து ஸ்கலிததீட்டு பெண்களின் மாதவிடாயைவிட பெரிய தீட்டாக கருத இடம் உண்டு. இதன் காரணமாகத்தான் ஸ்தீரியை ஊழியத்தில் சேர்க்கவேண்டுமானால் 1 தீமோ 5:9ல் பவுல் கூறுவது 60 வயதுக்கு கீழே உள்ள இளம்விதவைகளை சேர்க்கவேண்டாம் என்றார்.

இப்படிப்பட்ட வயதுமுதிர்ந்த ஸ்தீரிகளாக தெபோரா, எஸ்தர், மகதலேனா மரியாள், பெத்தானி மரியா, யாக்கோபின் அம்மா மரியா இவரெல்லாரும் பெண்களின் ஊழியத்தில் பிரதானமானவர்கள் என்றாலும் இவர்கள் யாரும் திருவிருந்திலோ (பரிசுத்த மேஜையிலோ), சபை முக்கிய ஸ்தானத்திலோ நிற்க விரும்பவில்லை.

சொந்த குடும்பத்தையும், பிள்ளைகளையும் கர்த்தருக்கென்று வளர்த்துவது பெண்களின் ஊழியத்திலேயே மிக சிறந்த ஊழியமாகும். பெண்களுக்கு சபை பாஸ்டர் (ஆயர்), பிஷப் என்ற பதவியைவிட குடும்பத்தை ஆவிக்குரிய வழியில் நடத்துவதும் பிள்ளைகள் கர்த்தருக்கென்று தெய்வ பயத்தில் வளர்துவதுமே மிக உயர்ந்த ஊழியம் ஆகும்.


Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM