|
|
|
ஜாமக்காரன் வாசக குடும்பங்கள் ஒவ்வொருவருக்கும்
எங்களது மனமார்ந்த
கிறிஸ்மஸ் & புத்தாண்டு 2014
நல்வாழ்த்துக்கள்
டாக்டர்.புஷ்பராஜ் மற்றும் குடும்பத்தினர்
|
|
வாழ்த்துகிறோம்! வரவேற்கிறோம்!! |
|
|
Rt.Rev.Timothy Ravinder |
கோவை CSI திருமண்டலத்தில் புதிய பிஷப்பாக
Rev.TIMOTHY RAVINDER அவர்கள் பிஷப்பாக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிய பிஷப் Rt.Rev.TIMOTHY
RAVINDER, Bsc., BD., அவர்களை ஜாமக்காரன் வாசகர்கள் சார்பிலும், என் சார்பில் வாழ்த்துகிறோம்.
கோயமுத்தூர்
CSI டையோசிஸ்ஸிக்கு ஏற்பட்ட கடந்தகால கெட்ட பெயர்களை மாற்றி திருமண்டலத்தை வசன அடிப்படையில் நடத்த கர்த்தர்தாமே பிஷப் அவர்களுக்கு ஞானத்தையும், கிருபையும் அளிப்பாராக.
திருமண்டல ஆயர்கள், மண்டல நிர்வாகிகள் யாவரும் பழைய மனக்கசப்புகளை நீக்கி இயேசுகிறிஸ்துவின் அன்பில் இணைந்து புதிய பிஷப் அவர்களின் கையை பெலப்படுத்துவார்களாக. நானும் என் வாசகர்களும், புதிய பிஷப் ஐயாவுக்காகவும், நிர்வாகிகளுக்காகவும் தொடர்ந்து ஜெபிப்போம் என்று உறுதி கூறுகிறோம்.
|
|
மெத்தடிஸ்ட் சபை ஆலயம் வியாபார கடையாக மாறியது: |
ஆலயம் கட்ட வழியில்லாமல் எவ்வளவோ சபை மக்கள் தவித்துக்கொண்டிருக்க மெத்தடிஸ்ட் மிஷனரிகள் அரும்பாடுபட்டு
கொடைக்கானல் மலை ஏறி மிக பிரம்மாண்டமான மெத்தடிஸ்ட் ஆலயத்தை கட்டியிருக்கிறார்கள். ஆலயத்தைச்சுற்றி பல கோடி மதிப்புள்ள பிரம்மாண்டமான நிலம்.
மெத்தடிஸ்ட் சபை ஊழியர்கள் சரியானப்படி சபையை நடத்தாததால் சபை சிதறடிக்கப்பட்டு சபை மக்கள் அருகில் உள்ள
CSI ஆலயத்தில் இணைந்தார்கள். மெத்தடிஸ்ட் ஆயரும் தன் ஊருக்கு திரும்பி சென்றுவிட்டார். சென்னையை தலைமையிடமாக கொண்ட
மெத்தடிஸ்ட் சபை பிஷப்மார், பொறுப்பாளர்கள் திட்டமிட்டு இரகசியமாக ஆலயத்தைச் சுற்றியுள்ள நிலங்களை
Shopping Complex கட்ட பல கோடிகளுக்கு விற்றுவிட்டனர். இப்போது அங்கு கட்டிடம் எழும்பிக்கொண்டிருக்கிறது என்று கேள்விபட்டபோது மனம் வேதனைப்படுகிறது. அந்த
மெத்தடிஸ்ட் ஆலயம் பல வருடங்களாக வெறுமனே பூட்டிக்கிடப்பதால்
அந்த ஆலயத்தை அசம்பளீஸ் ஆஃப் காட் சபையினர் விலைக்கு கேட்டுப்பார்த்தனர். மற்ற சபைக்கு விலைக்கு கொடுத்தால்
மெத்தடிஸ்ட் ஸ்தாபனத்துக்கு அவமானமாக போய்விடும் என்று அதை
துணிக்கடைக்கு (Textiles) வாடகைக்கு கொடுத்துவிட்டனர். ஆலயத்தின் ஆயர் அறையை ஒட்டியுள்ள பாகங்களை தங்கும் விடுதியாக்கி பெண்களை திருட்டுதனமாக அழைத்துவந்து டூரிஸ்ட்கள் போல அந்த ஆலய அறைகளில் தங்கி ஆலயகட்டிடத்தை கறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்காகவா ஜான்வெஸ்லி மிஷனரி மெத்தடிஸ்ட் சபையை ஸ்தாபித்தார்?. ஆலய முகப்பில்
சிலுவை கம்பீரமாக இருக்கிறது. (மெத்தடிஸ்ட் சபையின் எம்பளம்) அடையாள சின்னம் மட்டும் அப்படியே இருக்கிறது.
சிலுவையையும், மெத்தடிஸ்ட் அடையாளத்தையும் இவர்கள் விட்டுவைத்தது ஆச்சரியமாக இருக்கிறது. இப்போது அவைகளை மெத்தடிஸ்ட் நிர்வாகத்தின் அடையாள சின்னமாக மாத்திரம் இருக்கிறது. மெத்ததெய்வ பக்தியுள்ள மற்ற சபை மக்கள் மெத்தடிஸ்ட் நிர்வாகிகளின் இந்த அலட்சிய சிந்தையையும், வியாபார நோக்கத்தையும் கேள்விப்பட்டு வேதனையோடு பார்த்து செல்கின்றனர்.
இதை வாசிக்கும் தெய்வபயம் உள்ள தமிழ்நாட்டு ஊழிய
பாரம் உள்ள ஊழியர்கள், குறிப்பாக மெத்தடிஸ்ட் சபையில் உள்ள
கௌரவமுள்ள விசுவாசிகள் யாராவது கொடைக்கானலில் மிஞ்சியிருந்தால் இந்த ஆலயத்தில் மறுபடியும் ஆராதனை நடக்க ஏற்பாடு செய்யுங்கள் அல்லது மற்ற சபையினருக்காவது ஆராதிக்க வாடகைக்கு கொடுங்கள். தேவ ஆலயம் ஒருநாளும்
விபச்சார விடுதியாக மாறக்கூடாது. வியாபார ஸ்தலமாகவும் மாறக்கூடாது?. மெத்தடிஸ்ட் தலைமை இதற்கான நடவடிக்கை எடுப்பார்களா?
|
|
இந்தியா & வெளிநாடுகளில் வசிக்கும் ஜாமக்காரன் வாசகர்களுக்குமட்டும் உள்ள விசேஷ அறிவிப்பு: |
5 வருடங்களுக்கு ஒருமுறை வாசகர்களின் விலாசம் புதுப்பித்தல் செய்வதை வாசகர்களாகிய நீங்கள் அறிவீர்கள். ஆகவே இந்த ஜாமக்காரனில் ஒரு
Inland Letter வைத்து அனுப்புகிறேன். ஜாமக்காரன் பத்திரிக்கையை தொடர்ந்து பெறவிரும்புகிறவர்கள் இதில்வைத்து அனுப்பும்
Inland Letter Form-ஐ பெரிய எழுத்துக்களில் பூர்த்தி செய்து அதாவது தனி எழுத்தில் உங்கள் விலாசத்தை எழுதி அதில்
பின்கோடு குறிப்பிட்டு கவரின்மேலே 2.50 பைசா ஸ்டாம்ப் ஒட்டி தபாலில் சேர்த்துவிடுங்கள். கண்டிப்பாக 2.50 பைசா ஸ்டாம்ப் ஒட்ட மறக்கவேண்டாம்.
(சந்தா எதுவும் அனுப்ப வேண்டாம்). நீங்கள் அனுப்பும் (Inland
Letter) லெட்டர் எனக்கு வந்து சேர்ந்தால்தான் அடுத்த பிப்ரவரி 2014 ஜாமக்காரன் உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். ஒருவேளை நீங்கள் அனுப்பிய விலாச புதுப்பித்தல்
Inland Letter எனக்கு கிடைக்காமல்போனால் அல்லது தபால் ஆபீஸில் தவறிப்போனாலும்
ஜாமக்காரன் உங்களுக்கு அனுப்பபடமாட்டாது. 2014 பிப்ரவரி மாத தமிழ் ஜாமக்காரன் கிடைக்காமல்போனால் நீங்களாகவே எனக்கு ஒரு கடிதம் எழுதினால்போதும் உடனே உங்கள் விலாசத்தை கம்ப்யூட்டரில் பதித்து புதிய விலாசப்பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படும். அதன்பின் தொடர்ந்து ஜாமக்காரன் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ஏற்பாட்டுக்கு அதாவது
புது விலாச பட்டியல் தயாரிக்க நீங்கள் Inland Letter-ல் உங்கள் விலாசம் குறிப்பிட்டு எழுதி எனக்கு அனுப்பி ஒத்துழைப்பு தரவேண்டுகிறேன்.
வெளிநாடுகளில் உள்ளவர்கள்: உங்கள் விலாசத்தை தெளிவாக எழுதி கவரில் வைத்து தபாலில் சேர்த்துவிடவும்.
குறிப்பு: பலர் வீடு மாறியுள்ளனர், பலர் சொந்த நாடுகளுக்கு திரும்பிவட்டனர். அவர்கள் விலாசத்துக்கு பலவருடமாக ஜாமக்காரன் போய்கொண்டிருக்கிறது. அதை சமீபத்தில் அரபு தேசங்களுக்கு போனபோது சுமார் 100 ஜாமக்காரனை என்முன் கொண்டுவந்து போட்டு இந்த ஜாமக்காரன் பக்கத்து பிளாட் கட்டிடத்தில் உள்ளவருக்கு வந்துகொண்டிருந்தது. அவர் இந்தியாவுக்கு திரும்பிபோய் பல மாதங்களாகிறது என்றபோது நான் மிகவும் நொந்துபோனேன். ஆகவேதான் விலாசம் புதுப்பித்தல் மிக அவசியமாகிறது. இது சந்தா இல்லாமல் அனுப்பப்படுவதால் ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மரித்துபோயிருந்தாலும் விவரம் அறியாததால் ஜாமக்காரனை அனுப்பிக்கொண்டேயிருக்கிறோம். ஆகவே சிரமம் பாராமல் எனக்கு பணம் ஏதும் அனுப்பாமல் உங்கள் விலாசத்தைமட்டும் எழுதி புதிய விலாசபட்டியலில் இணைந்துக்கொள்ளுங்கள். ஒத்துழைப்பீர்கள் என்று நம்பி நன்றி கூறுகிறேன்.
- டாக்டர்.புஷ்பராஜ்
|
|
வாசகர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு: |
இதே ஜாமக்காரனில்
புதிய விலாசப்பட்டியல் அறிவிப்பை கவனித்து உங்கள் விலாசம் எழுதி அனுப்பி
புதுபித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் தொடர்ந்து ஜாமக்காரன் உங்களுக்கு கிடைக்கும்.
ஜாமக்காரனை வெறுப்பவர்களுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம், ஜாமக்காரன் வேண்டாம் என்றால் இதில் வைத்துள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மிக அவசரம்.
- ஜாமக்காரன்
|
|
ஆலோசனை- ஜெபத்துக்கு தொடர்புக்கொள்பவர்கள் கவனிக்கவும்: |
ஒவ்வொரு மாதத்திலும் வாரத்தில் செவ்வாய்கிழமை முதல் புதன் மதியம் வரை மட்டுமே நான் வீட்டில் சேலத்தில் இருப்பேன். ஆலோசனை - ஜெபத்துக்கு நேரில் சேலம் (தமிழ்நாட்டுக்கு) வர விரும்புகிறவர்கள் முன்பதாகவே தேதிகளை கடிதத்தில் குறிப்பிட்டு எழுதி கேட்டு அல்லது போனில் தொடர்புகொண்டு உறுதிப்படுத்திக்கொண்டு வரவும். தொலைப்பேசியில் ஆலோசனை பெறுகிறவர்கள் வேதவசன சந்தேகம் கேட்கிறவர்கள், ஜெப குறிப்புகளை பகிர்ந்துக்கொள்கிறவர்கள் காலை 8 மணியிலிருந்து இரவு 11 மணிவரை தொடர்புக் கொள்ளலாம்.
தினசரி மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரை போனில் தொடர்புக்கொள்ள முயல வேண்டாம்.) குறிப்பிட்ட அந்த நேரம் நேரில் வருபவர்களுக்காக ஜெபிக்கும் நேரமாகும். மேலும் அது நாங்கள்
ஓய்வு எடுக்கும் நேரமுமாகும். அந்த 3 மணி நேரம் தொலைபேசி ஆஃப் செய்து வைத்துவிடுவோம் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன்.
|
|
பாகிஸ்தான் சர்ச்சில் தற்கொலை மனிதவெடி |
பாகிஸ்தானில் பிஷாவர் என்ற இடத்தில் கிறிஸ்தவர்களின்
all Saints Church என்ற ஆலயத்தில் ஆராதனை நடந்துக்கொண்டிருக்கும்போது முஸ்லீம் தீவிரவாதிகள் கூட்டத்தில் உள்ள இரண்டு தற்கொலை படையினர் தன் சரீரத்தில் குண்டு வைத்து கட்டி சபைக்குள் வந்து அதை வெடிக்க செய்து தானும் வெடித்து சிதறி சுமார் 100 பேர் வெடித்து சிதறி மரித்தனர். 130 பேர் பெரிய காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். 180 மில்லியன் முஸ்லீம் உள்ள நாட்டில் கிறிஸ்தவர் 1.6 சதவீதம் உள்ளனார். அடிக்கடி கிறிஸ்தவர்களாகிய இவர்களை குறிவைத்து பலமுறை தாக்குதல் நடத்தி சாகடித்துள்ளனர். கடந்த 2013 செப்டம்பர் 22ம் தேதி ஞாயிறு ஆராதனையில் இந்த கொடூர கொலை நடந்தது. இதை கண்டித்து பாகிஸ்தானில் கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர், முஸ்டான், கூவிட்டா ஆகிய இடங்களில் அனைத்து கிறிஸ்தவர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினார்.
பாகிஸ்தானில் பிரதமர், ஜனாதிபதி, முன்னாள் கிரிகெட் வீரர்,
PTI கட்சியின் தலைவருமான இம்ரான்கானும் முஸ்லீம் தீவிரவாதிகளை கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.
|
|
|
|
|
|
|