வாசகர் கடிதம்
4:
மனநல மருத்துவர்
& ஆலோசகர் அவர்கள் அண்ணகர்களைப்பற்றி
அண்ணகர் அல்லது அரவாணிகள் விவகாரம்:
இதை எழுதும் நான் தஞ்சாவூர்
CSI சபை அங்கத்தினனாகும்.
டாக்டர்.புஷ்பராஜ் அவர்கள் அரவாணிகள்-அண்ணகர்களைப்பற்றி ஜாமக்காரனில் எழுதியது வேதாகமத்தின் அடிப்படையில் சரியே என்று நாங்கள் யாவரும் உணருகிறோம். இது குறிப்பிட்ட
அரவாணி-அண்ணகர் என்று அழைக்கப்படும் நபரையோ, குழுவினரையோ தாக்கி எழுதப்பட்டதல்ல.
ஒரு அரவாணி என்பவரை ஒரு தேசமோ அல்லது நமது இந்தியாவோ தங்களது நாட்டின் பிரதம மந்திரியாகவோ அல்லது முதலமைச்சராகவோ ஏற்றுக்கொள்ளுமா?
அப்படியே ஒரு அரவாணியை சர்வதேச மக்களுக்கு
முன்பாக இவர்தான் எங்கள் பிரதம மந்திரி அல்லது இவர்தான் எங்கள்
முதலமைச்சர் என்று அறிமுகப்படுத்தினால் உலக நாடுகளுக்கு முன்பாக அதுவே
ஒரு கேலி கூத்தாகிவிடும் அல்லவா? (அலி) அரவாணிகளுக்கு வாழ்வு
கொடுக்கவேண்டும் என்று விரும்பும் ஒரு சபை தலைவரோ - ஆயரோ - அரவாணியான
ஒருவரை தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு வாழ்க்கை துணையாக திருமண ஏற்பாடு
செய்து தங்கள் தியாகத்தை, இரக்கத்தை காண்பிக்க முன்வருவார்களா? நிச்சயம்
முன்வரமாட்டார்கள்!. ஆக, இப்படிப்பட்ட அரவாணி (அலி) நபரை தேவ சபை
ஊழியத்தில் ஆயராக (மேய்ப்பராக) பிரதிஷ்டை செய்ய இவர்கள் எப்படி
தைரியப்பட்டார்கள்? ஆயர்(மேய்ப்பன்) ஊழியம் அவ்வளவு மலிவாகிவிட்டதா?
டாக்டர்.புஷ்பராஜ் அவர்கள் ஜாமக்காரனில் எழுதியதோ அல்லது அதை வாசித்த
வாசகர்களாகிய நாங்களோ (அலி) அரவாணிகளை எந்த விதத்திலும் தரக்குறைவாக்கவில்லை. அரவாணிகளை (அலி) சமுதாயத்தில் உயர்த்தும் எல்லாவித முயற்சிகளையும் நாங்கள் மிகவும் வரவேற்கிறோம். மேலும் நாங்களும் அதை ஊக்கப்படுத்துகிறோம்.
டாக்டர்.புஷ்பராஜ் அவர்கள் (அரவாணிகளை) அண்ணகர்களைப்பற்றி ஜாமக்காரனில் எழுதியது வேதாகமத்திலுள்ள வசனத்தின் அடிப்படையில் ஒப்பிட்டுப்பார்த்து எழுதப்பட்டதாகும். டாக்டர்.புஷ்பராஜ் அவர்களின் இப்பெரும் முயற்சி வெற்றிப்பெற வாழ்த்துகிறோம்.
சபை தலைவர்கள் - ஆயர்கள் இவ்விஷயத்தை சரியான முறையில் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
கிறிஸ்துவுக்குள்
Dr.Prabhakar .J.Prakash
Copy to : CSI Modarator, CSI Synod, Chennai.
(மொழிபெயர்க்கப்பட்டது)
|