நன்றி்
அண்ணகர்-அரவாணி-அலி-திருநங்கை - விவகாரம்:

சென்னை CSI டையோசிஸ் அரவாணி-அலி-திருநங்கை ஒருவரை CSI சபையின் ஆயராக அபிஷேகம் செய்யப்போவதாக டையோசிஸ் மூலமாக அறிவிப்பு வெளியானவுடன் ஏராளமான CSI கிறிஸ்தவர்கள் எனக்கு கடிதம் எழுதியும், தொலைபேசியில் தொடர்புக்கொண்டும், CSI-க்காக அந்த அசிங்கத்திலிருந்து CSIயை காப்பாற்ற ஏதாவது செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். நானும் உடனே அவசர அறிவிப்பாக வேத வசனத்தின்படி அலி ஆயராக்கூடாது என்று எழுதி எல்லா CSI டையோசிஸ்களும் இதை எதிர்த்து CSI சினாடுக்கும், சென்னை பிஷப்புக்கும் எழுதுங்கள் என்று ஜாமக்காரன் மூலம் வாசகர்களைக் கேட்டுக்கொண்டேன்.

உடனே சிலர் இந்திய பிரதமருக்கும் - தமிழ்நாடு முதல்வருக்கும் ஜாமக்காரனை தடைசெய்ய வேண்டும் என்று புகார் மனு அனுப்பினார்கள். அரவாணிகள் சங்கம் தங்கள் சார்பில் நான் எழுதியதற்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நான் ஊழியத்துக்காக கோயமுத்தூர் CSI கிறிஸ்துநாதர் ஆலயம் (அரசாங்க ஆஸ்பத்திரி எதிரில்) கன்வென்ஷனில் பிரசங்கம் செய்துகொண்டிருந்தேன். சனிக்கிழமை என் மனைவி எனக்கு போன் செய்து அரவாணி விவகாரம் விஷயமாக போலீஸ் உயர் காவல் அதிகாரி விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷன் வந்துபோகும்படி கேட்டுக்கொண்டார்கள். ஆனால் நீங்கள் கோயமுத்தூரில் இருப்பதாக அவர்களுக்கு அறிவித்தேன் என்றார்.

  அன்று ஞாயிறு மாலை கூட்டத்தில் அண்ணகர் என்றால் யார்? அரவாணி-அலி இது கடவுளின் படைப்பா என்றும், வேதம் அதற்கு என்ன விளக்கம் கொடுக்கிறது என்றும் மேலோட்டமாக பேசி, நான் எழுதியதில் என்ன தவறு? ஒரு அலி உங்கள் சபைக்கு ஆயராக வந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்டுவிட்டு நான் அரவாணிக்கு உயர்பதவிகள் கொடுப்பதையோ, அவர்கள் ஊழியம் செய்வதையோகூட நான் எதிர்க்கவில்லை. ஆனால் ஆயராகும் தகுதி அவர்களுக்கு இல்லை என்று பேசினேன். முடிவில் இதன் காரணமாக போலீஸ் விசாரணைக்கு நாளை சேலத்திற்கு செல்லவேண்டும் ஜெபித்துக்கொள்ளுங்கள் என்று கூட்டத்திலேயே அறிவித்தேன்.

  அந்த கடைசிநாள் நான் பிரசங்கித்த பிறகு கூட்டம் முடிந்தவுடன் அந்த மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் மேடையருகே வந்து அரவாணியைப்பற்றி துணிச்சலாக எழுதினீர்கள்? CSIயை அவமானத்திலிருந்து காப்பாற்ற நாங்களெல்லாம் உங்களுக்கு துணையாக நிற்போம் என்றார்கள். சிலர் நாங்கள் வக்கீல்களாக தொழில் செய்கிறோம், இது சம்பந்தமாக நீங்கள் எப்போது கூப்பிட்டாலும் நாங்கள் வந்து உங்களுக்கு உதவுவோம். சட்ட ஆலோசனைகளை இலவசமாக அளிக்க ஆவலாக இருக்கிறோம் என்றார்கள். மருத்துவர்கள், என்ஜினியர்கள், வியாபாரிகள், மளிகைகடை வைத்துள்ளவர்கள் என்று பலர் என்னிடம் வந்து இந்த விஷயத்தில் உங்களுக்கு எவ்வளவு பண உதவி வேண்டுமானாலும் கூச்சப்படாமல் கேளுங்கள் என்றார்கள். அப்போது அங்கு வந்த ஒரு போலீஸ் அதிகாரி அவர் கிறிஸ்துநாதர் சபையை சேர்ந்தவரல்ல. அவர் நான் வந்து சூரமங்கலத்தில் உங்களை விசாரிக்கும் சேலம் உயர் போலீஸ் அதிகாரியோடு சென்னை உயர் அதிகாரிகளை நாங்கள் பேச வைக்கிறோம். தைரியமாக செயல்படுங்கள் என்று என்னை பலர் ஊக்குவித்தது என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய செய்தது.

இதில் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம். இப்படி பேசினவர்களில் பெரும்பாலானவர்களுக்கு என்னை பிடிக்காது என்பதாகும். காரணம் அவர்களில் சிலர் சகோ.தினகரன், சகோ.நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் ஆதரவாளர்கள் ஆவார்கள். ஆனால் முதல் இரண்டுநாள் நான் செய்த பிரசங்கத்தை கேட்டதால் அவர்களுக்குள் பெரும் மாற்றமும், என்மேல் நல்ல அபிப்ராயமும் உண்டானது.

  நீங்கள் ஜாமக்காரனில் எழுதுவது நூற்றுக்குநூறு சரியானது என்பது எங்களுக்கு மிகவும் தாமதமாகத்தான் விளங்கினது. உங்களுக்கு எந்த உதவியும் எப்போதும் செய்ய காத்திருக்கிறோம் என்று அவர்கள் கூறியது என்னை பரவசப்படுத்தியது. மேலும் அவர்கள் வார்த்தை என்னை தைரியப்படவைத்தது.

  கோயமுத்தூர் கிறிஸ்துநாதர் CSI ஆலய கன்வென்ஷனுக்கு வந்த பெரும்பாலோர் எனக்காக விசேஷ ஜெபம் ஏறெடுத்தனர். நான் சேலம் திரும்பிய இரண்டாம்நாள் கோயமுத்தூர் கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்களில் பலர் என்னை தொலைப்பேசியில் அழைத்து போலீஸ் ஸ்டேஷனில் உங்களிடம் என்ன விசாரித்தார்கள்? என்று அவர்கள் அக்கறையோடு விசாரித்தது என்னை மிகவும் பெலப்படுத்தியது. இந்த காரியத்துக்காகவும், எனக்காகவும் ஜெபித்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.


அண்ணகர்களைப்பற்றி ஆயர்களின் கருத்து:

அண்ணகர்களைப்பற்றி எழுதியதை ஆதாரித்து உற்சாகப்படுத்தி எழுதியவர்கள், பேசியவர்கள் ஏராளம். அதே சமயம் என கருத்தை எதிர்த்து எழுதியவர்கள் 3 பேர்கள்தான். அந்த 3 பேர்களும் கோயமுத்தூர் CSI டையோசிஸ் ஆயர்கள் ஆவார்கள். எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள் என்று நம் கர்த்தர் கூறிய முக்கிய கருத்துக்கு நீங்கள் எதிரி என்றார்கள். அரவாணிகள் (அலிகள்) ஆயர் ஆவதை நீங்கள் எதிர்ப்பதை நாங்கள் விரும்பவில்லை என்று அவர்கள் தங்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டிய விவரங்களுக்கு லாஜிக்கே இல்லை.

அதை எழுதிய கோயமுத்தூர் டையோசிஸ் ஆயர்களில் ஒருவரைத்தவிர மற்றவர்களுக்கு இரண்டு மனைவிகளோடு குடும்பம் நடத்துகிறார்கள். மற்ற பெண்களோடு தவறான தொடர்புள்ளவர்கள் என்பதை நான் ஆதாரத்தோடும் தொடர்புடைய பெண்களின் விலாசங்களையும் நான் அறிவேன். இப்படிப்பட்ட பாவ பலவீனம் உள்ள இப்படிப்பட்ட ஆயர்கள் கோயமுத்தூர் டையோசிஸ்ஸில் எனக்கு தெரிந்து 11 பேர்கள் உண்டு. அப்படி ஒரு லிஸ்ட்டை சிலர் என்னிடம் கொடுத்திருக்கிறார்கள். அகன்ற கோயமுத்தூர் டையோசிஸ்ஸில் சத்தியமங்கலம் வரை இந்த 11 ஆயர்களுக்கும் ஆங்காங்கு சின்ன வீடுகளின் தொடர்பு உண்டு. ஆகவே பரிசுத்த சபை ஊழியத்துக்கு பரிசுத்த ஆயர்கள் வேதவசனப்படி வேண்டும் என்று இவர்களில் சிலருக்கு விருப்பம் இல்லை. இப்படிப்பட்ட பாவ தொடர்புள்ள ஆயர்கள்தான் அரவாணியை(அலி) ஆயர் ஆக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அரவாணியை ஆயர் ஆக்கக்கூடாது என்று எழுதிய என்னை வெறுக்கிறார்கள். இவர்கள்தான் வேத வசன ஆதாரம் இல்லாத கருத்துக்களை எழுதி தங்கள் கடிதம் மூலம் தங்கள் பலவீனத்தையும் வெளிப்படுத்திவிட்டனர். என்றாலும் 2012 ஏப்ரல் மாத ஜாமக்காரனில் அலிகள் உருவாகும் விவரங்களும் இயேசு கூறிய 3 வித அண்ணர்களைப்பற்றிய விவரங்களும் அவர்களின் பிழையான கருத்தை நிச்சயம் மாற்ற வைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

1). பிறப்பிலே உள்ள அண்ணகர்களுக்கு அவர்கள் ஆணாக பிறந்தாலும், பெண் பிறப்பு உறுப்போடு பிறந்தாலும் அவர்கள் மற்ற மனிதர்களைப்போல வேலை செய்து, தொழில் செய்து அவர்கள் வாழமுடியும். ஆனால் அவர்களுக்கு பால் உணர்வு (Sex) இருக்காது. திருமண ஆசையும் இருக்காது. அவர்கள் மற்றவர்களோடு பழகும்போது இவர்களால் யாரும் பாவ செயலால் கறைபடமாட்டார்கள், இவர்களால் யாருக்கும் பாதிப்பு உண்டாகாது.

2). மற்றவர்கள் அதாவது அரவாணிகள், திருநங்கை (பெண்), திருநம்பி (ஆண்), அலி ஆகிய இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் வாலிபர்கள் - ஆண்கள் மிக அதிகம். இவர்கள் பால் உணர்வுகளை (Sex) இவர்களால் அடக்கி வைக்க இயலாது. அதனால்தான் இந்தியாவில் பிரபல டிவி திருநங்கை (அரவாணியான) ரோஸ் (Rose) என்பவர் தங்களின் பால் உறவுக்கு பார்ட்னர் வேண்டும். எங்கள் பால் உறவுக்கு அரசாங்க அனுமதி வேண்டும் என்று கடந்த மாத பத்திரிக்கையில் அறிக்கை வெளியிட்டு, பாவம் செய்ய விரும்பாது வேலை செய்து அல்லது தொழில் செய்து அல்லது படித்து முன்னேறி மற்றவர்களைப்போல் கவுரவமாக வாழவேண்டும் என்று ஆசைப்படும் திருநங்கை அரவாணிகளின் இனத்தை சேர்ந்த மற்றொரு கூட்டம் (NGO தலைவி) அரவாணி ரோஸ்ஸை பத்திரிக்கை அறிக்கை மூலமாகவே மிகவும் சாடி கடிந்துக் கொண்டிருக்கிறார்கள். அரவாணி ரோஸ் போன்று பால் உணர்வுக்கு அலையும் பல அரவாணிகள் ரயிலிலும், சினிமா தியேட்டர்களிலும் அத்துமீறியதால் நூற்றுக்கணக்கில் போலீஸ் கைது செய்துள்ளது. ஆகவே இவர்களில் யாரும் கடவுளின் படைப்பால் அரவாணிகளாகவோ, ஆண்-புணர்ச்சிக்காரர்களாகவோ பிறக்கவில்லை. தவறான பழக்கதோஷத்தால், சிறுவயதில் பெற்றோரின் கவன குறைவால், தங்களின் தவறான பாவதொடர்புகளால் அரவாணிகளாகவும், ஆண்-புணர்ச்சி(ஆணோடு-ஆண்)காரர்களாகவும், லெஸ்பியன்களாகவும் (பெண்ணோடு-பெண்) மாறியவர்கள் ஆவர். இவர்கள் யாரும் கடவுளின் படைப்பு அல்ல.

3). கர்த்தரின் ஊழியத்துக்காக அண்ணகர்களாகியவர்களைப்பற்றி 2012 ஏப்ரல் மாத ஜாமக்காரனிலேயே விளக்கமாக எழுதிவிட்டேன். இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் ஏற்றுக்கொள்ளலாம். ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் உங்கள் உரிமை. இவைகளைப்பற்றி விமர்சிப்பது என் உரிமை ஆகும்.

ஆகவே நான் கூற விரும்புவது என்னவென்றால் அரவாணிகள் அல்லது ஆண் புணர்ச்சிக்காரர் (ஆணோடு-ஆண் திருமணம் செய்தவர்) இவர்களில் யாரும் ஆயர்களாக பரிசுத்த சபையில் நியமிக்கக்கூடாது என்பது வேதம் காண்பிக்கும் போதனையாகும்.

இவர்களை ஆயர்களாக ஆக்க விரும்புபவர்களில் சிலர் இவர்கள்மேல் பரிதாப உணர்வுகொண்டு சம்மதிப்பவர்களாக இருப்பர். சிலர் தங்கள் ஜீவியத்தில் பரிசுத்தம் இல்லாதவர்களாகவும் இவர்களோடு பாவத்தொடர்பு உள்ளவர்களாகவும் இருப்பவர்கள். அவர்கள் பிஷப்பாக, ஆயர்களாக, சபை விசுவாசிகளாக இருந்தாலும் இப்படிப்பட்ட பாவத்தை இப்படிப்பட்ட பாவ சிந்தை உள்ளவர்கள்தான் சபைக்குள் வரவேற்பார்கள். இவர்களுக்காகவும் நாம் ஜெபிப்போம்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM