சென்னை CSI டையோசிஸ்
அரவாணி-அலி-திருநங்கை ஒருவரை
CSI சபையின் ஆயராக அபிஷேகம் செய்யப்போவதாக டையோசிஸ் மூலமாக அறிவிப்பு வெளியானவுடன் ஏராளமான
CSI கிறிஸ்தவர்கள் எனக்கு கடிதம் எழுதியும், தொலைபேசியில் தொடர்புக்கொண்டும்,
CSI-க்காக அந்த அசிங்கத்திலிருந்து
CSIயை காப்பாற்ற ஏதாவது செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். நானும் உடனே அவசர அறிவிப்பாக வேத வசனத்தின்படி
அலி ஆயராக்கூடாது என்று எழுதி எல்லா
CSI டையோசிஸ்களும் இதை எதிர்த்து
CSI சினாடுக்கும், சென்னை
பிஷப்புக்கும் எழுதுங்கள் என்று ஜாமக்காரன் மூலம் வாசகர்களைக் கேட்டுக்கொண்டேன்.
உடனே சிலர் இந்திய பிரதமருக்கும் - தமிழ்நாடு முதல்வருக்கும் ஜாமக்காரனை தடைசெய்ய வேண்டும் என்று புகார் மனு அனுப்பினார்கள். அரவாணிகள் சங்கம் தங்கள் சார்பில் நான் எழுதியதற்கு எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில் நான் ஊழியத்துக்காக கோயமுத்தூர்
CSI கிறிஸ்துநாதர் ஆலயம் (அரசாங்க ஆஸ்பத்திரி எதிரில்) கன்வென்ஷனில் பிரசங்கம் செய்துகொண்டிருந்தேன். சனிக்கிழமை என் மனைவி எனக்கு போன் செய்து
அரவாணி விவகாரம் விஷயமாக போலீஸ் உயர் காவல் அதிகாரி விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷன் வந்துபோகும்படி கேட்டுக்கொண்டார்கள். ஆனால் நீங்கள் கோயமுத்தூரில் இருப்பதாக அவர்களுக்கு அறிவித்தேன் என்றார்.
அன்று ஞாயிறு மாலை கூட்டத்தில்
அண்ணகர் என்றால் யார்? அரவாணி-அலி இது கடவுளின் படைப்பா என்றும், வேதம் அதற்கு என்ன விளக்கம் கொடுக்கிறது என்றும் மேலோட்டமாக பேசி, நான் எழுதியதில் என்ன தவறு? ஒரு அலி உங்கள்
சபைக்கு ஆயராக வந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்டுவிட்டு நான்
அரவாணிக்கு உயர்பதவிகள் கொடுப்பதையோ, அவர்கள் ஊழியம் செய்வதையோகூட நான் எதிர்க்கவில்லை. ஆனால் ஆயராகும் தகுதி அவர்களுக்கு இல்லை என்று பேசினேன். முடிவில் இதன் காரணமாக போலீஸ் விசாரணைக்கு நாளை சேலத்திற்கு செல்லவேண்டும் ஜெபித்துக்கொள்ளுங்கள் என்று கூட்டத்திலேயே அறிவித்தேன்.
அந்த கடைசிநாள் நான் பிரசங்கித்த பிறகு கூட்டம் முடிந்தவுடன் அந்த மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் மேடையருகே வந்து அரவாணியைப்பற்றி துணிச்சலாக எழுதினீர்கள்?
CSIயை அவமானத்திலிருந்து காப்பாற்ற நாங்களெல்லாம் உங்களுக்கு துணையாக நிற்போம் என்றார்கள். சிலர் நாங்கள் வக்கீல்களாக தொழில் செய்கிறோம், இது சம்பந்தமாக நீங்கள் எப்போது கூப்பிட்டாலும் நாங்கள் வந்து உங்களுக்கு உதவுவோம். சட்ட ஆலோசனைகளை இலவசமாக அளிக்க ஆவலாக இருக்கிறோம் என்றார்கள். மருத்துவர்கள், என்ஜினியர்கள், வியாபாரிகள், மளிகைகடை வைத்துள்ளவர்கள் என்று பலர் என்னிடம் வந்து இந்த விஷயத்தில் உங்களுக்கு எவ்வளவு பண உதவி வேண்டுமானாலும் கூச்சப்படாமல் கேளுங்கள் என்றார்கள். அப்போது அங்கு வந்த ஒரு போலீஸ் அதிகாரி அவர் கிறிஸ்துநாதர் சபையை சேர்ந்தவரல்ல. அவர் நான் வந்து சூரமங்கலத்தில் உங்களை விசாரிக்கும் சேலம் உயர் போலீஸ் அதிகாரியோடு சென்னை உயர் அதிகாரிகளை நாங்கள் பேச வைக்கிறோம். தைரியமாக செயல்படுங்கள் என்று என்னை பலர் ஊக்குவித்தது என்னை மிகவும் நெகிழ்ச்சியடைய செய்தது.
இதில் கவனிக்கவேண்டிய முக்கிய விஷயம். இப்படி பேசினவர்களில் பெரும்பாலானவர்களுக்கு
என்னை பிடிக்காது என்பதாகும். காரணம் அவர்களில் சிலர் சகோ.தினகரன், சகோ.நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் ஆதரவாளர்கள் ஆவார்கள். ஆனால் முதல் இரண்டுநாள் நான் செய்த பிரசங்கத்தை கேட்டதால் அவர்களுக்குள் பெரும் மாற்றமும், என்மேல் நல்ல அபிப்ராயமும் உண்டானது.
நீங்கள் ஜாமக்காரனில் எழுதுவது
நூற்றுக்குநூறு சரியானது என்பது எங்களுக்கு மிகவும் தாமதமாகத்தான் விளங்கினது. உங்களுக்கு எந்த உதவியும் எப்போதும் செய்ய காத்திருக்கிறோம் என்று அவர்கள் கூறியது என்னை பரவசப்படுத்தியது. மேலும் அவர்கள் வார்த்தை என்னை தைரியப்படவைத்தது.
கோயமுத்தூர் கிறிஸ்துநாதர்
CSI ஆலய கன்வென்ஷனுக்கு வந்த பெரும்பாலோர் எனக்காக விசேஷ ஜெபம் ஏறெடுத்தனர். நான் சேலம் திரும்பிய இரண்டாம்நாள் கோயமுத்தூர் கூட்டத்தில் கலந்துக் கொண்டவர்களில் பலர் என்னை தொலைப்பேசியில் அழைத்து
போலீஸ் ஸ்டேஷனில் உங்களிடம் என்ன விசாரித்தார்கள்? என்று அவர்கள் அக்கறையோடு விசாரித்தது என்னை மிகவும் பெலப்படுத்தியது. இந்த காரியத்துக்காகவும், எனக்காகவும் ஜெபித்த அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். |