கேள்வி: எங்கள்
பிஷப்மார் (மார்தோமா சபை) கல்யாணம் செய்யாமல் சரீர குடும்ப சுகமும் வேண்டாம் என்று தியாகமாக வாழ்கிறார்களே! அது இயேசுகிறிஸ்து மத் 19:12ல் கூறியபடி உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்ட 3வது
அண்ணகர்கள் இவர்கள்தானே? பரலோக ராஜ்ஜியத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கி கொண்டவர்களின் பட்டியலில் எங்கள் பிஷப்மார் இடம் பெறுவார்களா?
பதில்: பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை
அண்ணகர்களாக்கிக்கொண்ட பட்டியலில் நிச்சயமாக உங்கள் பிஷப்மார் இடம் பெறமாட்டார்கள்.
மார்தோமா சபை பிஷப்மார் மட்டுமல்ல, யாக்கோபையா சபை,
கத்தோலிக்க சபை பிஷப்மார்களும், நாங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாஸ்டர்மார்களாகும், மற்ற எந்த
பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்மார்களையும்விட எங்கள் சபை பாஸ்டர்மார்கள்தான்
பிரதிஷ்டை செய்யப்பட்டவர்களாவர் என்று கூறிக்கொள்ளும்
பாஸ்டர்கள் நிறைந்த ஆவிக்குரிய ஆழமான சபை எங்களுடையது தான் என்று கூறிக்கொள்ளும்
சிலோன் பெந்தேகோஸ்தே
(TPM) சபையில் உள்ள
பாஸ்டர்களும், மேலே கூறிய பிஷப்மார்களோடு இயேசுகிறிஸ்து கூறிய
அந்த விசேஷ பட்டியலில் இடம் பெறமாட்டார்கள். இதற்கான முக்கிய காரணம் மேலே குறிப்பிட்ட பிஷப்மார்களின் சபைகளும்,
TPM சபைகளும் திருமணம் செய்யாதவர்கள்தான் பிஷப்பாக அல்லது
பாஸ்டர்களாக வரவேண்டும் என்று தங்களுக்குள்ளே சட்டம் இயற்றிக்கொண்டார்கள். வேதம் அதை அனுமதிப்பதில்லை!.
மார்தோமா சபையில் ஒரு ஆயர் (அச்சன்)
திருமணம் செய்யாமல் தாடி வளர்க்க தொடங்கினாலே அவர்
பிஷப்பாக மாற ஆசைப்படுகிறார் என்று வெளிப்படையாகவே தெரிகிறதே? ஆகவே அதை
பிஷப்பாகும் ஆசை அது என்று கூறலாம். ஆனால் சுவிசேஷம் ஊழியத்தை
முழுநேரமும் செய்ய திருமணம் குடும்பம்,
பிள்ளைகள் தடையாக இருக்கும் என்ற எண்ணம் காரணமாக கர்த்தருக்கு முன் தீர்மானம் செய்தவர்கள் ஊழியம் செய்தால் அந்த ஊழியர்கள் மட்டும்தான் இயேசுகிறிஸ்து மத்தேயுவில் 19:12ல் கூறிய பட்டியலில் இடம் பெறுவார்கள்.
உயர் பிஷப் பதவி பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த ஆசையில்
தாடி வளர்த்து திருமணம் செய்யாமல் வாழ்பவர்கள் நிச்சயம் இயேசு கூறிய பட்டியலுக்கு தகுதியற்றவர்கள். அது ஊழியம் அல்ல, தியாகமும் அல்ல அது
பதவி ஆசையாகும்.
(TPM) சிலோன் பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களும் தங்களுக்குள் சபை நடத்தும் பாஸ்டர்கள்
திருமணம் செய்துகொள்ள கூடாது என்ற சட்டத்தைத் தாங்களாகவே இயற்றிக்கொண்டார்களே! அப்படி சட்டத்தின் அடிப்படையில் திருமணம் செய்யாமல் சபை நடத்தும் பாஸ்டராக ஒருவர் முன்வந்தால் அவர்கள் தேவ ராஜ்ஜியத்துக்காக தங்களை அண்ணகர்கள் ஆக்கிக்கொண்டவர்கள் பட்டியலில் இடம்பெறமாட்டார்கள். சட்டம் அவர்களை திருமணம் செய்ய அனுமதிக்கவில்லை என்றுதான் அதற்கு அர்த்தம்.
TPM சபை ஸ்தாபகரே திருமணமானவர் தானே!. தன் மனைவியை இனி சகோதரியாகத்தான் நினைக்கவேண்டும் என்று அந்த
TPM பாஸ்டருக்கு கர்த்தர் அறிவித்தார் என்றால்
மனைவியின் ஒப்புதல் தன் உள்ளத்தில் ஆழத்திலிருந்து வந்ததா? என்று அறியவேண்டும்.
மேலும் அந்த பாஸ்டர் வசனத்தை மீறி தவறு செய்தவராகிறார். வேதம் கூறுகிறது.
நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால் அவிழ்க்கப்பட வகை தேடாதே. 1 கொரி 7:27. இவ்வளவு தெளிவாக வேதம் கூறும்போது கர்த்தர் வெளிப்படுத்தினார் என்று அறிவிப்பதும் அதை சட்டமாக ஏற்படுத்தியதும் தவறான முடிவாகும். இந்த புது
வெளிப்பாடு, இந்த புது தரிசனம் அவருக்குமட்டும் கர்த்தர் வெளிப்படுத்தினர் என்று கூறுவதை ஒருகாலும் ஏற்றுக்கொள்ள இயலாது. பாஸ்டருக்கு கிடைத்த கர்த்தரின் வெளிப்பாடு சபையில் அன்று இருந்த மற்ற
ஊழியர்களுக்கோ, சபை விசுவாசிகளுக்கோ கர்த்தர் வெளிப்படுத்தவில்லையே! அந்த சபையின் சரித்திரத்தை வாங்கி வாசித்துப் பாருங்கள். அது மட்டுமல்ல, அவர்களின் இந்த
கொள்கைகளை இந்த சட்டத்தை வேதம்
ஏற்றுக்கொள்ளவில்லையே! இவர்களின் இந்த சட்டம் நம் கையிலிருக்கும் வேதத்திலும் இல்லை. இவர்கள் தங்களை தாங்களே வருத்திக்கொள்கிறார்கள். ஆகவே மேலே கூறிய சபைகளின் பிஷப்மார்கள்,
TPM பாஸ்டர்களில் பலர் இதன் காரணமாக
பாவத்தில் பிடிப்படுவதை பலமுறை பத்திரிக்கைகளில் வாசிக்கிறோம். அந்த பாவங்களைக்குறித்து அந்தந்த சபை மக்கள், சபை விசுவாசிகளே நன்றாக அறிவார்கள். இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் ஆவர்.
|