கேள்வி - பதில்
ஜாமக்காரனின் பதில்கள்

கேள்வி:  ஜாமக்காரன் பத்திரிக்கையின் உதவி ஆசிரியர், ஆலோசகர் யார் என்பதை உங்கள் பத்திரிக்கையில் காணமுடியவில்லையே?

பதில்:  ஜாமக்காரன் பத்திரிக்கைக்கு உதவி ஆசிரியர் (Assistant Editor), (Associate Editor) ஆலோசகர் எல்லாம் என் வாசகர்கள்தான். அவர்கள் அனுப்புகிற தகவல்கள், விவரங்கள், புகைப்படங்களோடுள்ள ஆதாரங்கள் யாவும் ஜாமக்காரனில் வெளிவரும் செய்திகளுக்கு பிரயோஜனப்படுகின்றன. வாசகர்களுக்கு என் அன்பு நன்றி. அவர்களில் பலர் எனக்கு உரிமையோடு ஆலோசனைகளையும் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அவைகளை கவனத்துடன் படிக்கிறேன். இவைகளில் சில ஆலோசனைகளை மட்டும் கைக்கொள்கிறேன், பல ஆலோசனைகளுக்கு நான் கீழ்ப்படிவதில்லை. மற்றபடி முழுக்கமுழுக்க ஜாமக்காரன் பத்திரிக்கை ஊழியம் பரிசுத்த ஆவியானவரால் நான் உணர்த்தப்பட்டு அல்லது ஏவப்பட்டு கடந்த 45 வருடங்களாக வெற்றிகரமாகதான் அதை நடத்துகிறேன். எதைப்பற்றியெல்லாம் எழுதும்படி என் உள்ளத்தில் உணர்த்தப்படுகிறேனோ அவைகளை என் வாசகர்களுக்காக மட்டும் நான் எழுதி அறிவிக்கிறேன். சிலசமயம் என் சுயமும் என் எழுத்தில் எப்போதாவது வெளிப்படும்.

  பண விஷயமும் அப்படியே! ஆவியானவர் யாரை ஏவுகிறாரோ அவர்கள் மட்டுமே நான் கேளாமலேயே பணம் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதன் காரணமாக என் பத்திரிக்கை ஊழியம் இதுவரை கடன் இல்லாமல், குறைவுப்படாமல் வெற்றிகரமாக நடத்தப்படுகிறது. கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.

  மற்றபடி என் ஊழியத்துக்காக காணிக்கை பெற்றுதர இந்தியாவில் எந்த ஊரிலும், வெளிநாட்டிலும் நான் ஏஜென்ட்டுகளை இதுவரை நியமித்ததில்லை. நியமிக்கும் அவசியமும் இல்லை. ஆகவே ஜாமக்காரன் சார்பில் அல்லது ஜாமக்காரன் பெயரை கூறிக்கொண்டு யாராவது உதவி கேட்க உங்களிடம் வந்தால் நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

  நீங்கள் அனுப்பும் காணிக்கைகள் யாவும் நானும், என் மனைவியும் மட்டுமே அவைகளை பெற்று எங்களாலேயே அவைகள் கணக்கு வைக்கப்பட்டு, வருடம் ஒருமுறை அரசாங்க அங்கீகாரம் பெற்ற ஆடிட்டர் மூலம் சரிப்பார்த்து அந்த வரவு - செலவுகளை அரசாங்கத்துக்கும், வருமானவரி துறைக்கும் காண்பித்து மனுஷர்களுக்கு முன்பும், கர்த்தருக்கு முன்பும் குற்ற உணர்வு இல்லாமல் ஊழியம் செய்கிறோம்.


கேள்வி:  எங்கள் பிஷப்மார் (மார்தோமா சபை) கல்யாணம் செய்யாமல் சரீர குடும்ப சுகமும் வேண்டாம் என்று தியாகமாக வாழ்கிறார்களே! அது இயேசுகிறிஸ்து மத் 19:12ல் கூறியபடி உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்ட 3வது அண்ணகர்கள் இவர்கள்தானே? பரலோக ராஜ்ஜியத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கி கொண்டவர்களின் பட்டியலில் எங்கள் பிஷப்மார் இடம் பெறுவார்களா?

பதில்:  பரலோக ராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்ட பட்டியலில் நிச்சயமாக உங்கள் பிஷப்மார் இடம் பெறமாட்டார்கள். மார்தோமா சபை பிஷப்மார் மட்டுமல்ல, யாக்கோபையா சபை, கத்தோலிக்க சபை பிஷப்மார்களும், நாங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்ட பாஸ்டர்மார்களாகும், மற்ற எந்த பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்மார்களையும்விட எங்கள் சபை பாஸ்டர்மார்கள்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்களாவர் என்று கூறிக்கொள்ளும் பாஸ்டர்கள் நிறைந்த ஆவிக்குரிய ஆழமான சபை எங்களுடையது தான் என்று கூறிக்கொள்ளும் சிலோன் பெந்தேகோஸ்தே (TPM) சபையில் உள்ள பாஸ்டர்களும், மேலே கூறிய பிஷப்மார்களோடு இயேசுகிறிஸ்து கூறிய அந்த விசேஷ பட்டியலில் இடம் பெறமாட்டார்கள். இதற்கான முக்கிய காரணம் மேலே குறிப்பிட்ட பிஷப்மார்களின் சபைகளும், TPM சபைகளும் திருமணம் செய்யாதவர்கள்தான் பிஷப்பாக அல்லது பாஸ்டர்களாக வரவேண்டும் என்று தங்களுக்குள்ளே சட்டம் இயற்றிக்கொண்டார்கள். வேதம் அதை அனுமதிப்பதில்லை!.

மார்தோமா சபையில் ஒரு ஆயர் (அச்சன்) திருமணம் செய்யாமல் தாடி வளர்க்க தொடங்கினாலே அவர் பிஷப்பாக மாற ஆசைப்படுகிறார் என்று வெளிப்படையாகவே தெரிகிறதே? ஆகவே அதை பிஷப்பாகும் ஆசை அது என்று கூறலாம். ஆனால் சுவிசேஷம் ஊழியத்தை முழுநேரமும் செய்ய திருமணம் குடும்பம், பிள்ளைகள் தடையாக இருக்கும் என்ற எண்ணம் காரணமாக கர்த்தருக்கு முன் தீர்மானம் செய்தவர்கள் ஊழியம் செய்தால் அந்த ஊழியர்கள் மட்டும்தான் இயேசுகிறிஸ்து மத்தேயுவில் 19:12ல் கூறிய பட்டியலில் இடம் பெறுவார்கள்.

உயர் பிஷப் பதவி பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த ஆசையில் தாடி வளர்த்து திருமணம் செய்யாமல் வாழ்பவர்கள் நிச்சயம் இயேசு கூறிய பட்டியலுக்கு தகுதியற்றவர்கள். அது ஊழியம் அல்ல, தியாகமும் அல்ல அது பதவி ஆசையாகும்.

(TPM) சிலோன் பெந்தேகோஸ்தே சபை பாஸ்டர்களும் தங்களுக்குள் சபை நடத்தும் பாஸ்டர்கள் திருமணம் செய்துகொள்ள கூடாது என்ற சட்டத்தைத் தாங்களாகவே இயற்றிக்கொண்டார்களே! அப்படி சட்டத்தின் அடிப்படையில் திருமணம் செய்யாமல் சபை நடத்தும் பாஸ்டராக ஒருவர் முன்வந்தால் அவர்கள் தேவ ராஜ்ஜியத்துக்காக தங்களை அண்ணகர்கள் ஆக்கிக்கொண்டவர்கள் பட்டியலில் இடம்பெறமாட்டார்கள். சட்டம் அவர்களை திருமணம் செய்ய அனுமதிக்கவில்லை என்றுதான் அதற்கு அர்த்தம்.

TPM சபை ஸ்தாபகரே திருமணமானவர் தானே!. தன் மனைவியை இனி சகோதரியாகத்தான் நினைக்கவேண்டும் என்று அந்த TPM பாஸ்டருக்கு கர்த்தர் அறிவித்தார் என்றால் மனைவியின் ஒப்புதல் தன் உள்ளத்தில் ஆழத்திலிருந்து வந்ததா? என்று அறியவேண்டும்.

மேலும் அந்த பாஸ்டர் வசனத்தை மீறி தவறு செய்தவராகிறார். வேதம் கூறுகிறது. நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால் அவிழ்க்கப்பட வகை தேடாதே. 1 கொரி 7:27. இவ்வளவு தெளிவாக வேதம் கூறும்போது கர்த்தர் வெளிப்படுத்தினார் என்று அறிவிப்பதும் அதை சட்டமாக ஏற்படுத்தியதும் தவறான முடிவாகும். இந்த புது வெளிப்பாடு, இந்த புது தரிசனம் அவருக்குமட்டும் கர்த்தர் வெளிப்படுத்தினர் என்று கூறுவதை ஒருகாலும் ஏற்றுக்கொள்ள இயலாது. பாஸ்டருக்கு கிடைத்த கர்த்தரின் வெளிப்பாடு சபையில் அன்று இருந்த மற்ற ஊழியர்களுக்கோ, சபை விசுவாசிகளுக்கோ கர்த்தர் வெளிப்படுத்தவில்லையே! அந்த சபையின் சரித்திரத்தை வாங்கி வாசித்துப் பாருங்கள். அது மட்டுமல்ல, அவர்களின் இந்த கொள்கைகளை இந்த சட்டத்தை வேதம் ஏற்றுக்கொள்ளவில்லையே! இவர்களின் இந்த சட்டம் நம் கையிலிருக்கும் வேதத்திலும் இல்லை. இவர்கள் தங்களை தாங்களே வருத்திக்கொள்கிறார்கள். ஆகவே மேலே கூறிய சபைகளின் பிஷப்மார்கள், TPM பாஸ்டர்களில் பலர் இதன் காரணமாக பாவத்தில் பிடிப்படுவதை பலமுறை பத்திரிக்கைகளில் வாசிக்கிறோம். அந்த பாவங்களைக்குறித்து அந்தந்த சபை மக்கள், சபை விசுவாசிகளே நன்றாக அறிவார்கள். இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் ஆவர்.


கேள்வி:  சகோ.தினகரனின் மகன் பால்தினகரன் அவர்கள் ஒவ்வொரு முறை ஜெபிக்கும்போதும் இயேசுவே உம்முடைய ஜீவனை இவர்கள்மேல் இறறறக்கும் என்று பல்லை கடித்துக்கொண்டு கூறுவதை கவனித்தீர்களா? எப்படி ஜீவனை இயேசு கிறிஸ்து ஜனங்கள்மேல் இறக்குவார்?

பதில்:  ஒருமுறை இவர் இப்படி கூறியிருந்தால் Tong Slip பிரசங்க வேகத்தில் நாக்கு பிரண்டதால் ஏற்பட்ட தவறு என்று கூறலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் இப்படி இவர் கூறுவதால் அது நாக்கின் தவறு அல்ல. பால்தினகரனின் தவறு. தைரியமாக இதை சுட்டிக்காட்ட தைரியவான்கள் அருகில் யாரும் இல்லை. ஆரம்பத்திலேயே தான் பேசிய பிரசங்கத்தை கேசட்டிலோ, CDயிலோ இவரே போட்டு கேட்டிருந்தால் தன்னை அவர் திருத்திக் கொண்டிருக்கலாம்.

இயேசுகிறிஸ்து தன் ஜீவனை நமக்காக கொடுத்து 2000 வருடங்களுக்கு மேலாகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் இவர்களுடைய அருள்நாதர் எப்படி தன் ஜீவனை இறக்க முடியும்? பாவம் அருள்நாதர். இதை வாசித்த பிறாகாவது அவர் ஜெபத்தில் மாற்றம் வருமா என்று பார்க்கலாம். அவரை சுற்றியுள்ள துதிப் பாடிகள் யாரும் தைரியமாக அவருடைய தவறுகளை அவருக்கு சுட்டிக்காட்டமாட்டார்கள்.


கேள்வி:  CSI சினாடுக்கு புதிய மாடரேட்டர் பதவி ஏற்றுள்ளார். புதிய மாடரேட்டரின் நடவடிக்கை எப்படியிருக்கும்?

பதில்:  பல வருடமாக CSI டையோசிஸ் பிஷப் எலக்ஷனில் பேனலில் வந்தவர்களில் ஒருவரை சபை அரசியலில் பணபலம் உள்ளவர்களால் அந்த ஒருவர் பிஷப்பாக விலைக்கு வாங்கப்படுவார் என்பது பல வருடமாக நம் CSIயில் தலைக்குனிவை உண்டாக்கும் வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது புதிய மாடரேட்டர் ஆட்சி காலத்தில் எந்த பிஷப்பும் பணத்துக்கு பேரம் பேசபடமாட்டார்கள் என்றும், பிஷப்மார்கள் பணம் கொடுத்து வாங்கும் விலைமாதர்களாகமாட்டார்கள் என்றும் பலரால் பேசப்பட்டது.

இப்போது 3 திருமண்டலத்தில் பிஷப் தெரிந்தெடுக்க 3 மாதத்துக்கு முன்பே கோடிகள் பணமாக சில பண முதலைகளிடமிருந்து வசூலித்து கையில் ரெடியாக சிலர் வைத்துள்ளதை நான் அறிவேன். யார்? யாரிடம்! அந்த லஞ்ச பணத்தை கொடுத்து பிஷப்பை விலைக்கு வாங்க பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது என்பதை நான் அறிவேன். அந்தப் பணத்துடன் CSI சினாட் நோக்கி அவர்கள் பயணமாக தயாராக இருக்கிறார்கள் என்பதையும் இதை எழுதும் மே 22ம் தேதிவரை நான் அறிந்து வைத்துள்ளேன். இப்போதுள்ள புதிய மாடரேட்டர் அவர்கள் அந்த லஞ்ச பணத்தை வாங்குவாரா? அல்லது சென்னையில் உள்ள CSI சினாடின் முக்கிய நபர்கள் வசம் அந்த பணம் கைமாறுமா? என்பது கேள்விகுறியாயிருக்கிறது. நாள் நெருங்கும்போது CSI சினாடில் கை சுத்தமுள்ளவர்கள் யார் என்பது நிச்சயம் வெளிப்படும். அதன்பின்தான் தெரிந்தெடுக்கும் புதிய பிஷப் பணம் கொடுத்து வாங்கிய விலைமாதைப்போல அபிஷேகிக்கப்படுவாரா! இல்லையா! என்பது பட்டவர்த்தனமாக தெரியும்.

  புதிய மாடரேட்டர் அவர்களிடம் பணம் வாங்கி யாரையும் பிஷப் ஆக்காதீர்கள், CSIயை உங்கள் காலத்திலாவது பரிசுத்தப்படுத்தி, பழைய மாடரேட்டர்கள் காலத்தில் பல வருடமாக CSI பிஷப்மார்கள் லஞ்சத்தில் வாங்கப்பட்டவர்கள் என்ற அவமானம் CSIயிலிருந்து உங்கள் காலத்திலாவது நீக்கப்பட்டதாக நல்லபெயர் வெளிவரவேண்டும் ஆண்டவரின் நாமமும் மகிமைப்படவேண்டும் என்று வெளிநாட்டிலிருந்தும், நம்நாட்டிலிருந்தும் ஜாமக்காரன் அலுவலகத்திலிருந்தும் புது மாடரேட்டர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஜெபிப்போம். பொருத்திருந்து பார்ப்போம்.

  இந்த ஜுன் மாதம் ஜாமக்காரன் வெளிவருதற்குமுன் அதாவது ஜுன் 15ம் தேதிக்குமுன் பிஷப் எலக்ஷன் முடிவு தெரிந்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. நம் புதிய மாடரேட்டருக்காக ஜெபிப்போம்.


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN