1). முதல் இடம்: அப் 2:4 ஒரு வாயிலிருந்து பலபாஷைகள் வெளிபட்டன.
அந்த பாஷைகளுக்கு அர்த்தம் தெரிந்தது. அந்தந்த பாஷைக்குறியவர்கள் அங்கு இருந்தார்கள்.
2). இரண்டாவது இடம்: அப் 10:45.
கொர்நேலியு என்ற புற இனத்தை சேர்ந்தவன் வீட்டில் கூடின புறஜாதி மக்கள் இவர்களும் பல பாஷைகளில் தேவனை புகழ்ந்தார்கள் என்று எழுதியுள்ளது. மேசியாவான இயேசுகிறிஸ்து
யூதகுலமக்களுக்கு மட்டுமே என்று நினைத்துக்கொண்டிருந்த பேதுருவுக்கும், மற்றவர்களுக்கும்
இயேசுகிறிஸ்து புற ஜாதிகளுக்காகவும் இரத்தம் சிந்தினார் என்பதை விளங்கவைக்கவும்
பரிசுத்த ஆவியானவர் நிறைவு எல்லா இனத்தவருக்கும் உண்டு என்பதை உணர்த்த
பரிசுத்தாவியானவர் கொர்நேலியுஸ் வீட்டார் அனைவரையும் பல பாஷையில் தேவனை புகழ வைத்து அல்லது பேச வைத்து
விளங்கவைத்தார். இந்த பாஷையில் தேவனின் மகத்துவத்தை புகழ்ந்து பேசுவதை கவனியுங்கள். அந்த புகழ்ச்சியில் அந்த பாஷையில்
அர்த்தம் இருந்தது.
3). மூன்றாவது இடம்: அப் 19:6.
எபேசு என்ற பட்டணத்தில் விக்கிரக வணக்கம் செய்துக் கொண்டிருந்த புறஜாதிகள் சிலர் மனம் திரும்பி விக்கிரக வணக்கத்தை விட்டுவிட்டு, யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தை பெற்று சீஷர்களாக இருந்தார்கள்.
பரிசுத்தாவியானவரின் இறக்கம் யூதர்களுக்கு மட்டுமல்ல, இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்ட புறஜாதிகளுக்கும் விக்கிரகத்தை வணங்கிவந்த தங்களுக்கும் உண்டு என்பதை விளங்க வைக்க பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரைப்பற்றி
பவுல் தன் பிரசங்கத்தில் தெளிவாக கூறி அவர்கள்மேல் கைகளை வைத்தபோது
பரிசுத்த ஆவியானரின் நிறைவு அவர்களுக்கு உண்டாகி அதை உறுதிபடுத்தும் வகையில் அவர்கள்
வேற்றுமொழியில் பேசி தீர்க்கதரிசனம் உரைத்தார்கள்.
தீர்க்கதரிசனம் என்றால் கர்த்தரின் வார்த்தை என்பதாகும். அந்த வார்த்தைக்கும் அர்த்தம் உண்டு.
தீர்க்கதரிசனம் என்ற கர்த்தரின் வார்த்தையை அவர்கள் பேசினார்கள். அவர்கள் பேசியது
விளங்காத சத்தம் அல்ல என்பதையும் இந்த இடத்தில் வாசகர்கள் விளங்கிக்கொள்ள வேண்டியது அவசியம். ஆகவே
பாஷை என்ற பெயரில் யாருக்கும் விளங்காதவற்றை பேசி உங்கள்
ஜெப நேரத்தை, உங்கள் ஆராதனை நேரத்தை கெடுத்துக்கொள்ளாதீர்கள். |