சைவமும்-வைணவமும்-கிறிஸ்தவமே என்ற தலைப்பில் ஒரு புது சிடி ஒன்றை வெளியிட்டு அதை தான் செல்லும் இடமெல்லாம் அதைக்குறித்து பேச தொடங்கிவிட்டார்.
பிள்ளையார் (விக்னேஷ்வர்) - அது இயேசுவைத்தான் குறிக்கும்.
பிதா -குமாரன் - பரிசுத்த ஆவி - இவர்கள் திருமூர்த்திகள்.
முருகனும் - இயேசுவும் ஒருவரே!
முருகனுக்கு 12 கைகள் - இயேசுவுக்கு
12 சீஷர்கள்
சூலாயுதமும் - சிலுவையும் ஒன்றுதான்
அந்த காலத்தில் பிதாவை ஒப்பிட்டு சிவனை உருவாக்கினார்கள்.
பரிசுத்தாவியை ஒப்பிட்டு சக்தி-விஷ்ணுவை உருவாக்கினார்கள்.
இயேசு உருவம் - நிழல்
முருகன், ஐயப்பன், பிள்ளையார், பிரம்மா இப்படி இயேசுவுக்கும் - இந்து தெய்வங்களுக்கும் ஒற்றுமையை உருவகப்படுத்தி பேசியிருக்கிறார்.
ஒருவர் அந்த சிடியை கேட்டுவிட்டு இயேசுதான் - முருகன், ஐயப்பன், பிள்ளையார், பிரம்மா என்றால் நான் ஏன் இயேசுவை வணங்கவேண்டும்? நான்
முருகனை ஆராதித்து கிறிஸ்தவ வேதத்தில் உள்ள நல்ல காரியங்களை கடைபிடித்து ஒரு நல்ல
இந்துவாகவே வாழ்ந்துவிட்டு போகிறேன் என்று கூறினார்.
இவர் கூறியதில் நியாயம் உண்டு.
சகோ.தாயப்பன் அவர்கள் உயர்குலத்திலிருந்து இயேசுவை தெய்வமாக இரட்சகராக ஏற்றுக் கொண்டவரைக்கும் சரி. ஆனால் அதிக ஆராய்ச்சி அவரை பழைய மதத்துக்கே கூட்டிகொண்டு போய்விடுமே! பொதுவாக உண்மையான ஒரு இந்து மதத்தில் உள்ளவன் இந்து
வேதத்தை மதிப்பான் - புராணத்தை இந்துக்களே ஏற்றுக்கொள்வதில்லை. ஆகவே சரியான இந்து
வேதங்களைமட்டுமே நம்புவான்.
சகோ.தாயப்பன் மட்டுமல்ல, ஒரு காலத்தில் சகோ.சாது செல்லப்பாவும் இப்படிப்பட்ட புராண ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டவர், இப்போது
ஓரளவு தெளிவுப்பெற்றுவிட்டார். இப்படி பலர் இப்போது சரியான உபதேசத்தில் வந்து கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இப்போது சகோ.தாயப்பனின் ஊழிய அலை தமிழகம் எங்கும் வீசுகிறது. ஆனால்
தாயப்பனின் சாட்சியை நான் இதுவரை கேட்கவில்லை. ஆனால் அவர் சாட்சியை சரி என்கின்றனர். ஆனால் அதற்குபின் வெளிவந்து கொண்டிருக்கும் அவரின்
இந்து புராண ஆராய்ச்சிக்கு எல்லையில்லாமல் போய்விட்டது. அது அவருடைய ஆத்துமாவுக்கே குழப்பத்தை உண்டாக்கும்.
அவருடைய சிடி இந்துமத நண்பர்களுக்கு கொடுக்கும்போது ஒருமுறை நீங்கள் போட்டு பார்த்து சரியானவைகளை கொடுங்கள்.
|