கர்த்தருக்குள் அன்பானவர்களே,
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்களுக்கு புதுவருட (2011) வாழ்த்துதல் கூறுகிறேன்.
2011ம் ஆண்டிலும் கர்த்தர் உங்களையும், என்னையும் உயிரோடு காத்து பத்திரிக்கை மூலமாக சந்திக்க வாய்ப்பளித்ததற்காக தேவனைத் துதிக்கிறேன்.
புதிய வருடத்தில் ஒவ்வொரு நாளும் தேவனோடுள்ள உறவு சிறிதும் பாதிக்கப்படாமல், கர்த்தருக்கும் நமக்கும் இடைவெளி உண்டாகாமல் ஜாக்கிரதையாக ஜெபத்திலும், வேதபுத்தகம் வாசித்து தியானிப்பதிலும் ஜாக்கிரதையாக இருப்போம்.
உங்கள் எல்லாருடைய வாழ்த்து அட்டைகளுக்காகவும், இமெயில் மூலம், கடிதம் மூலம், தொலைப்பேசி மூலம் அறிவித்த வாழ்த்துக்களுக்காகவும் நன்றி கூறுகிறேன்.
இந்தியதேசம் முழுவதும் மாநில தேர்தலுக்காக வாழ்வா - சாவா என்ற வெறியில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். விசுவாசிகளான நாம் நம்
தமிழ்நாட்டை ஆள சரியானவர்களை தெரிந்தெடுக்கப்பட ஜெபிப்போம். கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்கிற அரசு அமைய ஜெபிப்போம்.
சபரிமலை ஜோதியைப்பற்றி கேரளா அரசோடு உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. ஜோதியை பார்க்ககூடிய லட்சக்கணக்கான மக்களில் ஏராளமானபேர் கால்மிதிப்பட்டு செத்துப் போனதால் கோர்ட் இந்த கேள்வியை கேரள அரசாங்கத்திடம் கேட்டிருக்கிறது. பதில் கூறினால் உண்மை வெளிவந்துவிடும். உண்மை வெளிவந்தால் அந்த ஜோதி கடவுளால் காட்டப்படுவதல்ல, மனிதர்களால் காட்டப்படுகிறது என்ற உண்மை வெளிவந்தால் சபரிமலை சீசனில் மக்கள் மூலமாக அரசாங்கத்துக்கு கிடைக்கும் வருமானம் இழக்க நேரிடும். ஆகவே கேரள முதலமைச்சர் இது சம்பந்தமாக பதில் அளிக்கும்போது இது மத உணர்வுள்ள விஷயம். ஆகவே இப்படிப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க இயலாது என்று கூறிவிட்டார். ஆனால் கேரளா நீதிமன்றம் விடுவதாக இல்லை. பதில் கூற முதல்வருக்கு கெடு விதித்துள்ளது.
இதைக்குறித்து சரியான உண்மைகளை சபரிமலை ஜோதி என்ற தலைப்பில் மார்த்தாண்டம் என்ற ஊரில் உள்ள சகோ.பக்தவச்சலம் என்பவர் எழுதிய விவரங்களை நானும் தொகுத்து துண்டுப்பிரதியை அச்சடித்து ஜாமக்காரனில் வெளியிட்டு அவரவர் இந்த துண்டுப்பிரதியை அச்சடித்து விநியோகிக்கலாம் என்று எழுதியிருந்தேன். லட்சக்கணக்கில் அந்த துண்டுப்பிரதிகள் வெளியிடப்பட்டு பலருக்கு அதைக்குறித்து விழிப்புணர்வு உண்டானது. சபரிமலை கோவில் நிர்வாகிகள் கூறுவதைப்போல அந்தகால ஆதிவாசிகளால் பரம்பரையாக அந்த ஜோதி காட்டப்படுகிறது, ஆனால் அந்த ஆட்கள் யார் என்று இதுவரை அறியவில்லை என்பது பொய். கேரளா முன்னாள் முதன்மந்திரியாக இருந்த மறைந்த முதல்வர்
திரு.நாயனர் அவர்கள் சட்டசபையில் இதைப்பற்றி கேள்வி எழுந்தபோது வெளிப்படையாக பதில் அளித்தார். அது கேரளா எலக்ட்ரிசிட்டி பணியாளர்களும், கேரளா வனதுறை அதிகாரிகளும் சேர்ந்து கற்பூரங்களை மூட்டையாக ஒரு பெரிய இரும்பு சட்டியில் கொட்டி அதை
கொளுத்தி மூன்றுமுறை தூக்கி பிடிப்பதாகும். பொன்னம்பலமேடு என்று கூறப்படும் காடுகளில் இதை காண்பிக்கிறார்கள் என்று வெளிப்படையாகவே அன்றைய முதல்வர் பதில் அளித்தார். அது ஜனங்களை ஏமாற்றுவதுபோல் ஆகிறதே ஏன் அதை தடைசெய்யக்கூடாது? என்று கூறியதற்கு சபரிமலை ஆலயத்தில் இந்த ஜோதியை கடவுள் காண்பிக்கும்
ஜோதி என்று நம்பிவரும் கோடிக்கணக்கானவர்களால் இடும் காணிக்கைமூலம் அரசாங்கத்துக்கு கிடைக்கும் கோடிக்கணக்கான வருமானத்தை இழக்க விரும்பவில்லை. ஆகவே நாங்கள் அதை தடுக்கவில்லை என்றார்.
புறமதஸ்தர்களுக்குள்ளே இப்போது கொஞ்சகொஞ்சமாக இப்படிப்பட்ட போலி ஜோதிகளைப்பற்றி விழிப்புணர்வு உண்டாகிக்கொண்டிருக்கிறது. சீக்கிரம் நானே உலகத்துக்கு
ஒளி (ஜோதி) என்ற இயேசுகிறிஸ்துவை பாரதம் அறியவேண்டும். சுவிசேஷத்தை ஒவ்வொருவருக்கும் அறிவிப்போம். மக்கள் உண்மையான ஜோதியை அறியட்டும். தொடர்ந்து உங்களுக்காக ஜெபிக்கிறேன்.
|