AOG பாஸ்டர்.பால்தங்கையா விவகாரம்

  பாஸ்டர்.பால்தங்கையாவின் காரியம் . . . . . . நீங்கள் முன்மாதிரியான நபராக இருந்தால் அவரது பிரச்சனையைத் தீர்த்துவைக்க முன்வந்திருக்கலாம்.

. . . . . . . இவை எழுதுகிற நான் இயேசுவின் இரட்சிப்பை அனுபவிப்பதுடன் இந்தியாவிலும், உலகின் சில நாடுகளிலும் . . . . கிறிஸ்துவின்மூலம் வரும் இரட்சிப்பையும், அவரால் மனித இனத்திற்கு வரும் மகத்துவமான நன்மைகளையும் பறைச்சாற்றி வருகிறேன்.

. . . . . AOGயில் சிலர் தவறு செய்தார்கள் என்பதற்காக AOG சபையின் ஒட்டுமொத்த கிறிஸ்தவர்களையும் பழிவாங்குவதுபோல் நீங்கள் நடந்துக்கொள்வது நல்லதல்ல.

  தமிழ்நாட்டில் AOG சபைகள் என்றால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இறை பணியாளர்கள், வேத கலாச்சாலைகள், இரண்டு லட்சத்திற்கும் குறையாத விசுவாசிகள் அடங்கிய ஒரு பெரிய அமைப்பாகும். . . . . . . நீங்கள் வெளியிட்ட உங்கள் செய்தியால் அந்த AOG சபை ஸ்தாபனத்தைக் உங்கள் எழுத்தால் காப்பாற்றமுடியுமா? உங்கள் விளம்பரத்தினால் அவைகளை சீர்திருத்தமுடியுமா?

எவர் துணிந்து அநீதியான காரியங்களை செய்கிறார்களோ? அவர்கள் அதற்கேற்ற தண்டனையை அடைவார்கள்! இது அவர்களது மனசாட்சிக்கே தெரியும்! அவர்கள் திருந்துவதற்கு ஆண்டவரே அவகாசம் கொடுத்து காத்திருக்கும்போது நீங்கள் அவசரப்பட்டு அவர்களை விளம்பரப்படுத்துவது, அசிங்கப்படுத்துவது முறைதானா? . . . . . . . . . நல்லவேளை நீங்கள் டாக்டர் தொழிலை விட்டுவிட்டீர்கள்! சந்தோஷம்! இல்லாவிட்டால் உங்களிடத்தில் வருகிறவனின் குடலை உருவி மாலைப்போட்டிருப்பீர்கள்.

  ஒவ்வொரு சபையிலுமே சில யூதாசுகளும், அசித்தோப்போல்களும் . . . தேமாக்களும் (2 தீமோ 4:10)இருக்கத்தான் செய்கிறார்கள். AOGயின் உண்மையான நல்ல விசுவாசிகள், நல்ல ஊழியர்கள் இதுபோன்ற செய்திகளை உங்களுக்கு அனுப்பியிருக்கமாட்டார்கள்!.

  நீங்கள் ஜாமக்காரனில் வெளியிட்ட AOG சபை காரியங்களைக்குறித்து நானும் தீர விசாரித்து வருகிறேன். அவைகளை சீரமைப்பதில் பெரிய சிக்கல் எதுவுமில்லை. என்ன! அவர்கள் சற்று பிந்தி விட்டார்கள் அல்லது அசதியாக இருந்துவிட்டார்கள்! அவை சரிப்படுத்தக் கூடியவைத்தான்.

AOG செய்திகளை கேள்விப்பட்ட நீங்கள் ஏன் உங்கள் ஊரில் உள்ள AOG சபை கிறிஸ்தவர்களை அழைத்து, உபவாசித்து ஜெபிக்கவில்லை? நீங்கள் தானியேலைப்போல உபவாசித்து பாவ அறிக்கை செய்து ஜெபித்திருக்கலாமே! நெகேமியாப்போல என்றைக்காவது நீங்கள் இதற்காக அறைகூவல் விடுத்தீர்களா? நான் இதை கையெழுத்திடாத கடிதமாகவே எழுதுகிறேன்.

ஜாமக்காரன்: இதை எழுதியவர் தன் பெயரை, ஊரை வெளியிடவில்லை. ஆனால் இவரின் e-mail ID அவருடையதா என்பது தெரியாது. அவர் அனுப்பிய இ-மெயிலில் [email protected] என்று காணப்படுகிறது.

பாஸ்டர்.பால்தங்கையாவின் மனைவி தவறான
நடத்தை உடையவரல்ல
Pr.PAUL THANGAIAH

பாஸ்டர்.பால்தங்கையா அவர்களின் மனைவி தவறான நடத்தை உள்ளவர் அல்ல. எங்களுக்கு இது நன்றாக தெரியும். இப்போது புருஷனோடு ஒப்புரவாகி வாழ ஆசைப்பட்டார். இதற்காக சமரசம்பேச டெல்லியிலிருந்து ஒரு வக்கீல் பாஸ்டர்.பால்தங்கையா அவர்களை சந்தித்ததாக கேள்விப்பட்டேன். ஆனால் பாஸ்டர்.பால்தங்கையா கொஞ்சம்கூட வளைந்துகொடுக்கவில்லை! என் ஊழியம் முந்தையவிட சிறப்பாக நடக்கிறது. என் சபை மக்கள், என் கிளை சபை மக்கள், யாவரும் என்னை நம்புகிறார்கள். ஆகவே நான் மேய்ப்பனாக தொடர்வதை யாரும் கேள்வி கேட்கமுடியாது, யாருக்கும் என்னை கேள்வி கேட்க யோக்கியதையும் இல்லை! இப்படிப்பட்ட பதில் பாஸ்டர் அவர்களின் ஆணவத்தையும் எல்லா சொத்தும், கோடிகளும் அவர் பெயரிலிலேயே இருப்பதால் உண்டான தைரியத்தையும் இது தெரிவிக்கிறது!

AOG சபை தலைவர்கள் இதற்கு பிறகு இவரை AOGயில் மேய்ப்பனாக தொடர அங்கீகரிப்பார்களா? இதை ஜாமக்காரனில் எழுதுங்கள். அப்படி AOG தலைமை தகுதி இழந்த பால்தங்கையாவை மேய்ப்பனாக அனுமதித்தால் AOG தலைமை பொறுப்பாளர்கள் அனைவரும் சோரம் போனவர்களே! நானும் குடும்பமும் தொடர்ந்து பெங்களுர் AOG சபைக்கு (பாஸ்டர்.பால்தங்கையா சபைக்கு) போய்கொண்டுதான் இருக்கிறோம். சீக்கிரம் ஒரு நல்ல முடிவை AOG தலைமை எடுக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு அந்த சபையில் தொடருகிறோம்.

11 கட்டளைகள் சகோ.பால் தங்கையாவின் திடீர் தரிசனம்

சகோ.பால்தங்கையா அவர்கள் தான் கண்ட தரிசனத்தைப்பற்றி தன்னுடைய இ-மெயிலில் அவர் வெளியிட்ட விஷயமாவது:
நான் என் சபையோடு ஆரம்பித்த கிளை சபைகள் உட்பட உள்ள 12 ஸ்தாபனத்தைக்குறித்து கர்த்தரின் சித்தம் என்னவென்று அறிய நான் உபவாசித்தேன். இந்த தரிசனத்தை 8.7.2011 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு உபவாசிக்கும்போது கண்டேன். நான் கண்ட தரிசன விவரங்களான 11 கட்டளைகளையும் 11.11.2011க்குள் நிறைவேற்றியாகவேண்டும் என்று கர்த்தர் எனக்கு கட்டளையிட்டார். 12 x 11=132

பதினோறு கட்டளைகளாவன:
1) 11 வெவ்வேறு இடங்களில் ஏழைகளுக்கு உணவு அளிக்கும் திட்டம்.
2) தன் ஊழியம் நடக்கும் 12 ஊர்களில் 11 சுவிசேஷ கூட்டங்களை நடத்தவேண்டும்.
3) தன் ஊழியம் நடக்கும் 12 ஊர்களில் 11 பேருக்கு ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும்.
4) 11 இடங்களில் 11 ஜெபக்குழுக்களை உருவாக்க வேண்டும்.
5) 11 இடங்களில் ஐக்கிய பரிசுத்த மேஜை (திருவிருந்துக்கு) ஏற்பாடு செய்யவேண்டும்.
6) 11 நபர்களை தெரிந்தெடுத்து அவர்களுக்கு விசேஷ உதவிகளை செய்யவேண்டும்.
7) 11 இடங்களில் உள்ள பாஸ்டர்களை சந்தித்து அவர்களை ஆசீர்வதிக்கவேண்டும்.
8) 11 இடங்களில் வெளிப்படையான அற்புத அடையாளங்கள் நடைபெற ஜெபிக்கவேண்டும்.
9) 11 இடங்களில் 11 மிஷனரிகளை தெரிந்தெடுத்து அவர்களை ஆசீர்வதிக்கவேண்டும்.
10) 11 இடங்களில் ஏழைகளை பராமரிக்கும் 11 குழுக்களை நியமிக்கவேண்டும். அதற்கான தலைவர்களையும் நியமிக்கவேண்டும்.
11) உன்னைவிட்டு பிரிந்துப்போன 11 பேரை தெரிந்தெடுத்து அவர்களுக்காக ஜெபி.

அன்பானவர்களே, கர்த்தர் மோசேக்கு கொடுத்தது 10 கட்டளைகளைதான் என்று நாம் வேதத்தில் வாசித்துள்ளோம். ஆனால் 11 கட்டளைகள் பால்தங்கையாவுக்குமட்டும் கொடுத்திருப்பதாக கூறிய இந்த தரிசனத்தை நம்புகிறீர்களா?. 11 பதினொன்றாக கூறியதில் என்ன சிறப்பு இருக்கிறது. இப்படியும் கர்த்தர் கூறுவாரா?

  சசொந்த மனைவியை விவாகரத்து செய்து மேய்ப்பன் தகுதியை இழந்து, வேத வசனத்துக்கு விரோதமாக ஊழியம் இவருக்கு கர்த்தர் இப்படியொரு தரிசனத்தை கொடுப்பாரா? அதுவும் எல்லாம் 11, இந்த 11 என்ற எண்களில் என்ன விசேஷ சிறப்பு? கர்த்தரைவிட்டு விலகின ஒரு ஊழியனுக்கு பிசாசு தரும் அர்த்தமில்லா தரிசனத்தை கண்டீர்களா? பொய்க்கு பிதாவின் கைகளில் சிக்கிய இந்த பாஸ்டர்.பால்தங்கையாவை நம்பும் பெங்களுர் AOG சபை மக்களுக்காக பரிதாபப்படுகிறேன். நான் இப்போது எழுதியது உண்மையா என்பதை பால் தங்கையாவின் இ-மெயிலை பாருங்கள். இதன்பிறகும் AOG சபை இவர்மேல் நடவடிக்கை எடுக்காவிட்டால் இவர் தங்கள் சபை மேய்ப்பனாக இருக்கவேண்டுமா என்பதை சபை மக்களே தீர்மானம் செய்யட்டும்! பொய்தரிசனம் பொய் அந்நியபாஷைகளை இனியாவது AOG சபை அஸ்திபார உபதேசமாக்காது மக்களை வசனத்தில் வழி நடத்துவர்களாக!

  பால் தங்கையா பேசிய அந்நியபாஷை பொய்!

  பால் தங்கையா கண்ட தரிசனமும் பொய்!


Top
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM